Headlines

முஹமது நபியின் காலத்தில் எழுதப்பட்ட அல் குர்ஆன் பாகங்கள் விஞ்ஞான ரீதியில் உண்மை – ஜேர்மனி பத்திரிகை

இறைத்தூதர் முஹமது நபியின் காலத்தில் எழுதப்பட்ட அல் குர்ஆன் பாகங்கள் விஞ்ஞான ரீதியில் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட் டுள்ளது. பெர்லின் அரச நூலகத்தில் பல ஆண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த குர்ஆன் பாகங்கள் சூரிச்சில் இருக்கும் ஆய்வுகூடத்தில் சோதனை யிடப்பட்டுள்ளது. மிருகத் தோலினாலான ஏழு பக்கங்கள் கொண்ட இந்த அல் குர்ஆன் பாகம் கி.பி. 606 இல் இருந்து 652 ஆம் ஆண்டுகளுக்குள் எழுதப்பட்டவை என்று அந்த ஆய்வின் மூலம்…

Read More

கஹவத்தையில் மீண்டும் குழப்ப நிலை.. தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை காணவில்லை.. வீட்டில் இரத்தக் கறை

கஹவத்தை, கொட்டஹேதன பிரதேசத்தில் வீட்டிலிருந்து 39வயதான பெண்ணை, இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலிருந்து காணவில்லை என்று தெரிவித்துள்ள பொலிஸார், அவரை தேடும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தினால் கொட்டஹேதன கிராமவாசிகள் மீண்டும் குழப்பமடைந்துள்ளனர். சந்தேகநபரோ அல்லது காணாமல் போன பெண் தொடர்பிலோ இதுவரையிலும் எவ்விதமான தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். தனது மனைவியை இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.45 மணியிலிருந்து காணவில்லை என்று வர்த்தகரான அவருடைய கணவன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கொட்டஹேதன பிரதேசத்தில் கடந்த…

Read More

புற்றுநோய்க்கு வழிவகுக்கும் எரித்ரோசின் “பி” தர்பூசணி எச்சரிக்கையுடன் ஓர் விழிப்புணர்வு பதிவு! வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சித்தகவல்!

புற்றுநோய்க்கு வழிவகுக்கும் எரித்ரோசின் “பி” தர்பூசணி எச்சரிக்கையுடன் ஓர் விழிப்புணர்வு பதிவு! வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சித்தகவல்! விழிப்புணர்வு தர உதவுங்கள் அதிகம் பகிருங்கள் கோடை வந்தாலே கூடவே அனல் தணிக்க வந்துவிடும் தர்ப்பூசணி. இனிக்கும் இந்தப் பழத்தைக் கடித்துச் சாப்பிட்டால், எவ்வளவு வெயிலையும் சமாளிக்கும் உத்வேகம் வந்துவிடும். அவ்வளவு நீர்ச்சத்து இந்தப் பழத்தில். வீதிக்கு வீதி இளநீர்க் கடைகளைவிட தர்ப்பூசணி கடைகள் கோடையில் முளைப்பது இதனால்தான்.ஆனால் வாட்ஸ் அப்பில் வைரஸாகப் பரவிய அந்த வீடியோ காட்சி நிச்சயம்…

Read More

அரபுலீக்கின் கூட்டு இராணுவம் என்பதை இஸ்லாமிய கூட்டமைப்பின் இராணுவமாக மாற்ற வேண்டும் மோரிதானியாவின் வெளியுறவு அமைச்சர் பாத்திம்மா கோரிக்கை

அரபு நாடுகளிடையே கூட்டு இராணுவத்தை உருவாக்குவது என்ற அரபு லீக்கின் முடிவை அகம் மகிழ வரவேர்கிறேன் என்று கூறியுள்ள மோரிதானியாவின் வெளியுறவு துறை அமைச்சர் பாதிம்மா மேலும் கூறும் போது அரபு லீக் என்பதை மேலும் விரிவாக்கி அதை .இஸ்லாமிய நடுகளின் கூட்டமைப்பு இராணுவமாக மாற்றினால் நான் மேலும் மகிழ்ச்சி கொள்வேன் அந்த கூட்டமைப்போடு இணைந்து மோரிதானியாவும் தனது பணிகளை செய்ய தயாராக இருப்பதாக கூறிய பாத்திமா இது தொடர்ப்பாக அரபு லீக்கிர்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார்…

Read More

இதுதான் இஸ்லாம்! முஸ்லிம் பெண்மணியின் நேர்மை : 2 செல்போன்,25 சவரன் தங்க நகைகளை காவல்துறை’யில் ஒப்படைத்தார் !

முஸ்லிம் பெண்மணியின் நேர்மை : 2 செல்போன்,25 சவரன் தங்க நகைகளை காவல்துறை’யில் ஒப்படைத்தார் ! ஹைதராபாதில், நேற்றுமுன்தினம் (02-04-2015), கீழே கண்டெடுத்த 25 சவரன் நகை, உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை, ஒரு முஸ்லிம் பெண்மணி காவல்துறையில் ஒப்படைத்துள்ளார். மேற்படி பெண், ஆசிப் நகரிலிருந்து ‘ஹகீம் பேட்டை’க்கு சென்றுக் கொண்டிருக்கையில், அனாதையாக கீழே கிடந்த ஒரு பையை திறந்து பார்த்தபோது, அதில் தங்க நகைகள், 2 செல்போன்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் இருந்ததைக் கண்டார்….

Read More

நாட்டில் அனைவருக்கும் மத சுதந்திரமுண்டு -ஜனாதிபதி

இந்த நாட்டில் அனைவருக்கும் மத சுதந்திரமுண்டு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சனிக்கிழமை (04) தெரிவித்தார். மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கிறிஸ்;தவ போதகர்கள் ஒன்றியத்தின் பாஸ்கா பண்டிகை வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த நாட்டில் அனைத்து மக்களுக்கும் அவர்கள் சார்ந்த மத உரிமை மத சுதந்திரமுண்டு. அவர்கள் தமது மதத்தை பின் பற்றுவதற்கான அனைத்து உரிமைகளும் உண்டு. ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு மதக்கோட்பாடும் முக்கியமாகும்….

Read More

துபாயில் 140 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் அமைச்சர் றிஷாத்

இர்ஷாத் றஹ்மத்துல்லா ஜக்கிய அரபு இராஜ்சியத்தின் பொருளாதார அமைச்சு ஏற்பாடு செய்திருந்த வருடாந்த முதலீட்டாளர்களுக்கான கூட்டமும்,மற்றும் கண்காட்சியும் அண்மையில் துபாயில் அமைந்துள்ள சர்வதேச கூட்ட அரங்கில் இடம் பெற்றது. ஜக்கிய அரபு இராஜ்சியத்தின் பிரதி ஜனாதிபதியும், பிரதமருமான ஷேய்க் முஹம்மத் பின் ராசிட் அல் மக்தும் தலைமையில் இடம் பெற்ற இந்த அமர்வில் 140 நாடுகளைச் சேர்ந்த பிரதி நிதிகள் இதில் கலந்து கொண்டனர். இலங்கை சார்பில் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் இதில் கலந்து…

Read More

அரச அதிகாரிகள் நேர முகாமைத்துவத்தை கடைப்பிடிப்பவர்களாக இருக்க வேண்டும் பிரதியமைச்சர் அமீர் அலி

அப்துல்லாஹ் அரச அதிகாரிகள் நேர முகாமைத்துவத்தை கடைப்பிடிப்பவர்களாக இருக்கும்போதுதான் தங்களது கடமைகளைச் சரியாகச் செய்ய முடியுமென்று வீடமைப்பு மற்றும் சமூர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எம்.அமீர் அலி தெரிவித்தார். கல்குடா தொகுதியின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவிலுள்ள திவிநெகும முகாமைத்துவப் பணிப்பாளர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் ‘திவிநெகும திட்டத்தினூடாக பிரதேசத்தின் அபிவிருத்தி’ என்ற தலைப்பிலான மாநாட்டில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இம் மாநாட்டில்  தொடர்ந்து உரையாற்றிய அவர், அரசாங்க அதிகாரிகளில் ஒரு…

Read More

எனது நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற என்றும் எனது அரண்மனை வாசல் திறந்தே இருக்கும் சவுதி மன்னர் சல்மான் உருக்கம்!

சில தினங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவின் மன்னர் தனது ரியாத் அரண்மனையில் நாட்டின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களையும் முக்கிய கபீலாக்களின் தலைவர்களையும் சந்தித்தார. அந்த சந்திப்பின் போது அவர் நிகழ்த்திய உரை ஒரு ஆட்சியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதர்கு உரிய வரைவிலக்கணமாக அமைந்ததுஅந்த உரையில் இடம் பெற்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த சில விசயங்களை மட்டும் உங்களுக்கு தருகிறேன் சவுதி அரேபிய ஒரு இஸ்லாமிய நாடு உலக முஸ்லிம்கள் அனைவர்களும் புனிதமாக கருதும் மக்காவையும் மதினாவையும்…

Read More

அமைச்சர் றிசாத் பதியுத்தீனுக்கு 04 சதிகாரர்கள் சேர்ந்து சதி எனும் நாடகத்தை அரங்கேற்றுகின்றனர் – YLS ஹமீட்

அஸ்ரப் ஏ சமத் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத்பதியுத்தீன் எதிராக லஞ்ச ஆணைக்குழுவிற்கு செய்யப்பட்டிருக்கின்ற இரண்டு வெவ்வேறான முறைப்பாடு தொடர்பாகவும் அவசரமாக விசாரித்து குறித்த ஆணைக்குழு உண்மையை உடனடி வெளிக்கொணர வேண்டும். என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் தலைமையிலான அக்கட்சியின் அதியுயர்பீடம் தீர்மானித்திருப்பதாக அதன் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று ஜனாதிபதி தலைமையில் பிரதமரிண் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற தேசிய நிறைவேற்றுக் குழுவில் பிரஸ்தாபித்துள்ளதோடு…

Read More

களுவாஞசிக்குடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 179 பயனாளிகளுக்கு 100000 ரூபா வீட்டுக்கடன் வழங்கும் வைபவம்

அஸ்ரப் ஏ சமத் அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வீடமைப்பு மற்றும் சமுா்த்தி அமைச்சின் ஒத்துழைப்போடு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நாட்டின் எல்லா தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கியதாக 50000 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் களுவாஞசிக்குடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 179 பயனாளிகளுக்கு 100000 ரூபா வீட்டுக்கடன் வழங்கும் வைபவம் 02.04.2015 அன்று களுவாஞசிக்குடி இராசமாணிக்கம் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது மட்டக்களப்பு மாவட்ட வீடமைப்பு அதிகார சபை தலைவர் திரு.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற…

Read More

இன, மதவாத கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு 02 வருட சிறை -ராஜித சேனாரத்ன

இன, மதவாதக் கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக தண்டனை வழங்கக்கூடிய வகையில் சட்டக்கோவையில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. அமைச்சரவையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவில் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு அமைவாக, இனவாதம் மற்றும் மதவாதம் போன்றவற்றைத் தோற்றுவிக்கும் வகையிலான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டால் அது தண்டனை சட்டக்கோவையின் பிரகாரம் குற்றமாகக் கருதப்படும். அவ்வாறு கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என…

Read More