Headlines

First European R&D breakthrough for Lankan apparels

Within a day after Sri Lanka and EU successfully joining in Colombo for the redux of the sought after GSP Plus to boost its apparel exports, comes yet another coveted technical breakthrough extended through a surging EU economy –and this support stream connects not only to Lanka’s finished apparels but even its manufacturing core itself-opening…

Read More

திருமண வீட்டு உணவு பிரச்சினை: மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு

ஜவ்பர்கான் மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழங்குடா பிரதேசத்தில் உணவு ஒவ்வாமையினால் திடீர் சுகயீன முற்றவர்கள் திருமண வீட்டில் உட் கொண்ட உணவு மாதிரிகள் கொழும்பிலுள்ள மருத்துவ ஆய்வு நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக மண்முனைப் பற்று (ஆரையம்பதி) சுகாதார வைத்திய அதிகாரி  வி.பவித்ரா தெரிவித்தார்.  தாழங்குடா பிரதேசத்தில் திருமண வீட்டில் சமைக்கப்பட்ட உணவு மாதிரி மற்றும் இதில் திடீர் சுகயீனமுற்றவரின் மலம் என்பன கொழும்பிலுள்ள மருத்துவ ஆய்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அத்தோடு மண்முனைப் பற்று(ஆரையம்பதி) சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தைச்…

Read More

யெமனில் சிறைப்படுத்தப்பட்டுள்ள இலங்கையர்களை இன்றைய தினத்திற்குள் மீட்க முடியும் – வெளிவிவகார அமைச்சு

யெமனில் சிறைப்படுத்தப்பட்டுள்ள இலங்கையர்களை இன்றைய தினத்திற்குள் மீட்க முடியும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. யேமனில் இடம்பெற்று வரும் மோதல்களால் அங்கு பணிபுரிந்த 120 இலங்கையர்கள் சிறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை மீட்கவென வெளிவிவகார அமைச்சு அண்மைய நாட்களில் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. யேமனின் பிரதான விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் இலங்கையர்களை கடல் வழியாக அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

Read More

SLTJ மருதமுனை கிளையின் ஜும்மாவுக்கு எதிரான வழக்கு இன்று தள்ளுபடி

SLTJ ஊடகப் பிரிவு ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மருதமுனைக் கிளையினால் ஜும்மா தொழுகை நடத்தப் படுவதற்க்கு எதிராக மருதமுனை – அனைத்துப் பள்ளிகள் சம்மேளனம் சார்பில் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் ஜும்மா தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டது.  கல்முனை நீதவான் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் கல்முனை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட வழக்கில் இன்று (30.03.2015) தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதவான் நெடுஞ்சலியன்…

Read More

அடுத்த ஆண்டில் இருந்து முஸ்லிம்களுக்கு தனி ரேடியோ சேனல்: இங்கிலாந்து அரசு அனுமதி

இங்கிலாந்தில் வாழும் முஸ்லிம்களுக்கு இஸ்லாம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் நோக்கில் தனியாக வானொலி சேவை வழங்க அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மான்செஸ்ட்டர் நகரில் உள்ள ஏஷியன் சவுண்ட் ரேடியோ நிறுவனம் இந்த சேவையை வழங்க உள்ளது. இங்கிலாந்து ஒலிபரப்பு துறை அமைச்சகத்தால் இதற்கான லைசென்ஸ் அர்கிவா, பாவெர் மற்றும் யூடிவி மீடியா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் (2016) 14 வானொலி நிலையங்களின் மூலம் இந்த வானொலி நிகழ்ச்சிகள் இங்கிலாந்து முழுவதும் ஒலிபரப்பாகும். இந்த நிகழ்ச்சிகளில்…

Read More

அமெரிக்காவின் போரில் 81 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் பலி

தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக அமெரிக்கா-பாகிஸ்தான் கூட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. பாகிஸ்தானில் மறைந்திருக்கும் போராளிகளை அமெரிக்க ராணுவம் மற்றும் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தி வருகிறது.இந்த தாக்குதல்களில் இதுவரை 80 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக புதிய ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக அமெரிக்காவின் தலைமையில் பாகிஸ்தானில் போர் நடைபெற்று வருகிறது. இதில் 80 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த அறிக்கையை அணு ஆயுத போருக்கு எதிரான நோபல் பரிசு பெற்ற…

Read More

பஸ் முச்சக்கரவண்டி மோதி விபத்து : ஒருவா் உயிரிழப்பு

– க.கிஷாந்தன் – கண்டியிலிருந்து அட்டன் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியுடன் அட்டனிலிருந்து வட்டவளை ரொசல்ல பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் வூட்லேண்ட் பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருவர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனா்….

Read More

Top 10 சாதாரண தர சிறந்த பெறுபேறு பெற்றவர்கள் இவர்களால்தான்.. (இம்முறை மாணவன் முதலிடம்)

வெளியாகியுள்ள 2014ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் கொழும்பு, நாலந்த கல்லூரியைச் சேர்ந்த எல். தரிந்து நிர்மால் விக்கிரமசிங்ஹ சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளார் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையின் பிரகாரம், முதல் 10 இடங்களை பெற்றுகொண்ட மாணவர்களின் விவரங்கள்: 1. எல். தரிந்து நிர்மால் விக்கிரமசிங்ஹ – நாலந்த வித்தியாலயம், கொழும்பு 2. டப்ளியு. ஏ. சந்துனி நவன்ஜனா – ஹொலி க்றோஸ் கல்லூரி, கம்பஹா 3….

Read More

இன்று ஆரம்பித்து வைக்கபட்ட இலவச wi-fi இண்டர்நெட்டின் வேக விபரம்

இலவச wi-fi சேவை கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை (30) ஆரம்பித்து வைக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் 8 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 26 பொது இடங்களில் இந்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும். ஜனாதிபதி தேர்தலின்போது அளித்த வாக்குறுதிக்கு இணங்கவே இந்த wi-fi சேவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.   இதேவேளை, ஒகஸ்ட் நிறைவுக்குள் 1,000 பொது இடங்களில் இச்சேவையை பெற்றுக்கொள்ள முடியுமென தகவல் தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப முகவர் நிலையம் அறிவித்துள்ளது….

Read More

முஸ்லிம்களின் உணர்வுகளோடு ரஷ்யா விளையாட நினைத்தால் தக்கப்பாடம் புகட்டி விடுவோம் : சவூதி அரேபியா கடும் எச்சரிக்கை…..!!

முஸ்லிம்களின் உணர்வுகளோடு ரஷ்யா விளையாட நினைத்தால் ரஷ்யாவுக்கு தக்கப்பாடம் புகட்டி விடுவோம் என்று சவூதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான முழு விவரம் பின்வருமாறு…. சவூதி அரேபியாவில் அரபு நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு அரபு நாடுகளில் ஒன்றான சிரியாவுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. அதற்கான காரணம் சிரியா, ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் இணைந்து கொண்டு சிரியாவிலுள்ள முஸ்லிம்களை கொன்று வருகிறது. அதனால் சிரியாவுக்கு மாநாட்டிற்கான அழைப்பு அனுப்பப்படவில்லை, அரபு கூட்டமைப்பின் இந்த செயலை…

Read More

நேட்டோ படையை மிஞ்சும் இஸ்லாமிய படை – மத்திய கிழக்கில் அமெரிக்காவின் செல்வாக்கை சவுதி அரேபியா வெகுவாக குறைத்து விட்டது அமெரிக்க பத்திரிகை THE WALL STREET JOURNAL அலறல்

நேட்டோ படைகளை மிஞ்சும் ஒரு இஸ்லாமிய படையை சவுதி அரேபியா உருவாக்கியிருப்பதின் மூலம் அமெரிக்காவிர்கு இனி மத்திய கிழக்கில் வேலை இல்லை என்பதை சவுதி மன்னர் சல்மான் சொல்லாமல் சொல்லி சொல்லியிருக்கிறார் என்று அமெரிக்கை பத்திரிகை THE WALL STREET JOURNALதனது தலையங்கத்தில் கூறியிருக்கிறது . இராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கவின் நடவடிக்கைகள் எதிர் பார்த்த பயனை தரவில்லை என்பதை அறிந்த பிறகே சவுதி மன்னர் சல்மான் புதிய இஸ்லாமிய கூட்டணியை உருவாக்கியிருப்பதாக கூறியிருக்கும் அந்த பத்திரிகை…

Read More

இலங்கை – சுவீடனுக்கிடையில் பொருளாதார வர்த்தக உறவுகளை மேம்படுத்த ஆர்வம்!

இலங்கையுடன் காணப்படும் பொருளாதார, வர்த்தக உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு சுவீடன் நம்பிக்கையுடன் காணப்படுவதாக சுவீடனின் பிரதமர் ஸ்டீவன் லொஃப்வென் (Stefan Löfven) தெரிவித்தார். சீனாவின் ஹய்னன் (Hainan) மாகாணத்தில் இடம்பெற்று வரும் ஆசிய வருடாந்த மாநாடு 2015 இற்கான ‘போஆஒ’ மன்றத்தில் (Boao Forum for Asia Annual Conference 2015) வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனேவை நேற்று (29) பிற்பகல் சந்தித்து இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபடும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றிக்காக…

Read More