ஆதரவற்ற சிறுமி துஷ்பிரயோகம்: தலைமறைவானார் மத போதகர்
தாய், தந்தையரை இழந்து சபை ஒன்றின் பாதுகாப்பில் வளர்ந்த சிறுமி ஒருத்தியைச் சபையின் மதபோதகர் சில ஆண்டுகளாகத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது இதுகுறித்துப் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அதையடுத்து குறித்த பாதிரியார் தலைமறைவாகியுள்ளார் என்று கூறப்படுகின்றது. சிறுமிக்கு ஒரு இளைய சகோரனும் உண்டு. பெற்றோர் இல்லை. அதனால் சிறுமி இல்லம் ஒன்றில் தங்கியிருந்தார். அங்கிருந்து சிறுமியை மருத்துவர் ஒருவரும் அவரது தாயும் அழைத்துச் சென்று வளர்த்து வந்தனர். சகோதரனை வேறு…
