Headlines

என்னால் செய்யப்பட்ட அனைத்து அபிவிருத்தி திட்டங்களின் பின்னணியில் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் பங்களிப்பு உள்ளது

இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்- என்னால் செய்யப்பட்ட அனைத்து அபிவிருத்தி திட்டங்களின் பின்னணியில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் பங்களிப்பு உள்ளது என தெரிவித்துள்ள வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எச்.எம்..றியாஸ் நான் மாகாண சபையின் உறுப்பினராக தெரிவாவதற்கும் காரணமாக இருந்தவரும் அவரே என்றும் கூறினார். மதுரங்குளி கஜூவத்தை பாடசாலையின் நிகழ்வு நேற்று மாலை இடம் பெற்றது அதில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் தமதுரையில் – அமைச்சர் றிசாத் பதியுதீன்…

Read More

தவ்ஹீத் ஜமாத் தனித்து ஜும்ஆ நடத்த முடியும்: கல்முனை நீதவான்

ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் தனித்து ஜும்ஆவினை நடத்த முடியும் என கல்முனை நீதவான் இன்று உத்தரவிட்டார். ஜமாதின் நற்பிட்டிமுனை கிளையினால் நடத்தப்பட்டு வரும் ஜும்ஆ தொழுகையை நிறுத்தக் கோரி கல்முனை நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. கல்முனை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  ஜும்ஆ நடத்துவதற்க்கு யாருக்கும் தடை விதிக்கும் அதிகாரம் இல்லை எனக் கூறியே இந்த மனுவினை நீதவான தள்ளுபடி செய்யதார். -தவ்ஹீத் ஜமாத் ஊடகப் பிரிவு-

Read More

கட்டார் மன்னர் நாளை இலங்கையை வந்தடைகிறார்

கட்டார்  மன்னர் தமீம் பின் ஹமத் ஆலு தானி இம்மாதம் 23ஆம் 25ஆம் திகதிகளில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கபட்டு இருந்த அதேவேளை நாளை (24) இலங்கையை வந்தடைவார் என உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை சந்தித்து கலந்துரையாடுவதுடன் நான்கு மணித்தியாலம் இலங்கையில் தங்கி இருப்பார் எனவும் தெரிய வருகிறது. மேலும் இவரின் வருகைக்காக கொழும்பில் போக்குவரத்து முறைகளில் மாற்றங்களும் மேட்கொள்லப்பட உள்ளது. குறித்த விஜயத்தின் போது,…

Read More

போக்குவரத்து நாளை கட்டுப்படுத்தப்படும்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் இருந்து கொழும்பு வரையிலான சில வீதிகளின் போக்குவரத்து நாளை கட்டுப்படுத்தப்படும் என்று போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர். பிற்பகல் 1.30 இருந்து 2.30 வரையும் 3.45 இருந்து 4.45 வரையும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More

8 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய உறவுமுறை இளைஞன் கைது

எட்­டு­வ­யது சிறு­மி­யைப்­பா­லியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக சொல்­லப்­படும் 25 வயது இளைஞன் ஒரு­வ­னைக்­கைது செய்­துள்­ள­தாக வண்­ணாத்­தி­வில்லு பொலிஸார் தெரி­வித்­தனர். வண்­ணாத்­தி­வில்லு பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட கரை­தீவு பிர­தே­சத்தை சேர்ந்த இளைஞர் ஒரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ள­வ­ராவார் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட சிறுமி யின் தாயின் சகோ­தரி ஒரு­வ­ரு­டைய கண­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ள­வ­ராவார். தான் தரும் பணத்தை தாயிடம் கொடுக்­கு­மாறு கூறி சிறு­மியை ஏமாற்றி சந்­தேக நபர் சிறு­மியை தனது வீட்­டுக்கு அழைத்து சென்றே இவ்­வாறு குற்றம் புரிந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. தமது…

Read More

31 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்த சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ காலமானார்

சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் 91 வயதான லீ குவான் யூ காலமானதாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் சற்று முன்னர் அறிவித்திருக்கிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த லீ க்வான் யூ, பின்னர் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்தார். சிங்கப்பூரின் முதல் பிரதமராக பதவியேற்ற லீ குவான் யூ, 31 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். இவரது ஆட்சிக்காலத்தில்தான் அதுவரை துறைமுக நகரமாக அறியப்பட்ட சிங்கப்பூர் பிரம்மிக்கும் வகையில் வர்த்தக…

Read More

ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமின்றி ஒன்றிணைந்து செயற்படுவதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது

அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமின்றி ஒன்றிணைந்து செயற்படுவதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார். புதிய அமைச்சர்களாக பதவியேற்றுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டுவருவதிலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் திருத்தம் மேற்கொள்வதிலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பங்குதாரராக முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு அனைவரும் ஒன்றிணைந்து தீர்வு காண…

Read More

புத்தளத்து மக்களுக்கு எமது உயிர் இருக்கும் வரை நன்றியுடன் இருப்போம் – றிஷாத் பதியுதீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லா நாம் இடம் பெயர்ந்து வந்த போது எமக்கு உதவிய புத்தளத்து மக்களை எமது உயிர் இருக்கும் வரை நானும்,எமது மக்களும் நன்றியுணர்வுடன் இருப்பதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் கடந்த 5 வருடகாலமாக இந்த புத்தளம் மக்களுக்கு தேவையான பணிகளை செய்யவிடாது சில சுயநல அரசியல் போக்கு கொண்டவர்கள் தடைகளை ஏற்படுத்தினார்கள் என்றும் கூறினார். புத்தளம் மாவட்டத்தில் மதுரங்குளி கஜூவத்தை பாடசாலையில் இடம்…

Read More

இளம் தாய் பஸ்ஸிலிருந்து வீசப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

க.கிஷாந்தன் கினிகத்தேனை கொத்தலென்ன பகுதியிலிருந்து அட்டன் வரை சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் பயணித்த 22 வயதுடைய தயார் ஒருவா் பஸ்ஸிலிருந்து வெளியே வீசப்பட்டு படுங்காயங்களுடன் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த பஸ்ஸிலிருந்து இறங்குவதற்கு பெல்லை அடிக்க முயற்சி செய்த போது வெளியே வீசப்பட்டுள்ளார். இன்று 3 மணியளவில் இந்த விபத்து அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை ரொசல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனா். ரொசல்ல டெம்பள்ஸ்டோவ்…

Read More

சவுதி அரேபியா கொடுத்த பதிலடி; சுவிடன் அதிர்ச்சி

இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை விமர்ச்சனம் செய்த சுவீடன் வெளியுறவு அமெச்சருக்கும் சுவீடன் அரசுக்கும் கடுமையான நெருக்கடிகளை சவுதி அரேபியா கொடுத்து வருவதால் சுவீடன் மன்னர் 16ஆம் கார்ல் கோஸ்தப் (Carl XVI Gustaf) கவைலை கொண்டிருப்தாகவும் இது தொடர்ப்பாக விவாதிப்பதர்கும் இஸ்லாத்தை விமர்ச்சித்த சுவீடன் வெளியுறவு துறை அமைச்சர் மார்கட் அவர்களை கண்டிப்பதர்கும் அவர் விமர்ச்சனங்களை திரும்பபெற வலியுறுத்தவும் சவுதி அரேபியாவை சமாதான படுத்துவதர்கு உரிய வழிகளை ஆராயவதர்காகவும் சுவீடன் வெளியுறவு துறை அமைச்சரை சுவீடன் மன்னர்…

Read More

பலஸ்தீனை காப்பது எமது பொறுப்பு : சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ்!

அரபு மற்றும் முஸ்லிம்களை காப்பது எமது பொறுப்பு அதனை செய்ய உறுதி பூண்டுள்ளேன் என சவுதி அரேபிய மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார். அவற்றில் முதன்மையானது ஜருஸலத்தை தலைநகராகக் கொண்ட பலஸ்தீன நாட்டை உருவாக்குவதாகும் எனவும் அவர் தெரிவித்தார். அரபு முஸ்லிம்களிடையான உறவைப் பலப்படுத்துவதும் முக்கிய தேவை என அவர் தெரிவித்துள்ளார். புதிதாக நாட்டை பொறுப்பேற்றுள்ள மன்னர் ஸல்மானின் ஆரம்ப நடவடிக்கைகள் முஸ்லிம் உலகில் சாதகமான போக்கை கொண்டு வர வாய்ப்பாக அமையும் என…

Read More

மன்னார் மாவட்ட சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர்கள் ஏற்பாடு செய்த விசேட சந்திப்பில் – அமைச்சர் றிஷாத்

மன்னார் மாவட்ட சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர்கள் ஏற்பாடு செய்த விசேட சந்திப்பில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கலந்துகொண்டதுடன் அவர்களது பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்டார்.அதிகமான பொதுமக்ளும் பிரசன்னமாகி இருந்தனர்.

Read More