Headlines

அநுராதபுர முஸ்லிம்களை சந்திக்கிறார் றிஷாத் பதியுதீன்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அநுராதபுர மாவட்ட முஸ்லிம்களுடனான சந்திப்பொன்றினை மேற்கொள்ளவுள்ளார். இளம் சட்டத்தரணி றுஸ்தி ஹபீபின் ஏற்பாட்டிலான இந்த சந்திப்பு நாளை சனிக்கிழமை 10 மணிக்கு அனுராதபுரம் சீ.டி.சி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. அநுராதபுர மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்கள் அனைவரையும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பட்டாளரான சட்டத்தரணி றுஸ்தி ஹபீப் அழைப்புவிடுத்துள்ளார்.

Read More

மைத்திரிபாலவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட வேண்டிய அவசியமில்லை!– ஜே.வி.பி.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வங்குரோத்து அடைந்துள்ள அரசாங்கம் பல்வேறு மாதிரியான நடிகர்களை இறக்குமதி செய்கின்றது. ஒரு வேளை சல்மான் கான் மற்றுமொரு வேளை ஜக்லீன் மற்றுமொரு வேளை குமார் குணரட்னம் போன்ற நடிகர்களை அரசாங்கம் பிரச்சாரத்திற்காக இறக்குமதி செய்கின்றது. ஜே.வி.பி கட்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு தரப்புடனும் இரசிய உடன்படிக்கை கைச்சாத்திட்டதில்லை. மைத்திரிபால சிறிசேனவுடன் இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திட வேண்டிய அவசியமும் கிடையாது. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டுமாயின்…

Read More

மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய வேண்டும்!- பொதுபல சேனா

நாட்டுக்கு எதிராக சூழ்ச்சித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய வேண்டுமென பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் கோரியுள்ளார். தேசிய சக்திகளின் கட்டுப்பாட்டு நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவை வைத்து இந்த சூழ்ச்சித் திட்டத்தை மேற்கொள்ள முயற்சித்தனர். அது வெற்றியளிக்கவில்லை. அதன் பின்னர் 2011ம் ஆண்டு முதல் பிரிவினைவாத இருள் சூழ்ந்த சக்திகள் பல்வேறு வழிகளில் நாட்டுக்கு எதிராக…

Read More

மஹிந்தவுக்கு இதுவே கடைசி ஆட்சி! பெட்டிகளை கட்டி தயாராக இருப்பதே நல்லது!- அத்துரலிய தேரர்

மஹிந்தவின் வீட்டு உரிமை பத்திரத்துக்கும், நகைகளுக்கும் சாதாரண தமிழ் மக்கள் சோரம் போக மாட்டார்கள். அவர்கள் தமிழ் தலைமைகளுக்கு மதிப்பளிக்கின்றனர், தலைமைகளும் சிந்தித்து செயற்பட வேண்டும். அரசாங்கம் எத்தனை மில்லியன் பணம் செலவு செய்தாலும் தமிழ் மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்க முடியாது. மஹிந்தவுக்கு இதுவே கடைசி ஆட்சி, பெட்டிகளை கட்டி தயாராக இருப்பதே சிறந்தது என கூற விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

இலங்கையில் இரட்டைப் பிரஜாவுரிமை மீண்டும் நடைமுறைக்கு வந்தது!

வெளிநாட்டுப் பிரஜாவுரிமையுடன் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நடைமுறை நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 01, 2015) முதல் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இரட்டைப் பிரஜாவுரிமை வழங்குகின்ற நடைமுறையை இலங்கை அரசாங்கம் 2011 ஆம் ஆண்டில் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்திருந்தது. ஆரம்பத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு நிரந்தர வதிவிட உரிமையும், அதன் பின்னர் இரட்டைக் குடியுரிமையும் வழங்கப்பட்டுவந்தது. ஆனால், சொந்த நாட்டில் வந்து நிரந்தரமாக வசிப்பதற்கும், பணத்தை முதலீடு செய்வதற்கும் பிள்ளைகளை அரச…

Read More

மஹிந்த ராஜபக்ஷ தான் இழைத்த தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் இழைத்த தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குளியாப்பிட்டியவில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளதாவது, “மிகவும் வேகமாகவும் காரசாரமாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேடைகளில் பேசுகின்றார். வானொலியில் அதனை நான் கேட்டேன். மிகவும் கோபத்துடன் பேசுகின்றார். மக்களின் மனங்களைப் புரிந்துகொள்ளுமாறு அவரிடம் நான் கூறுகின்றேன்….

Read More

கம்பஹா மாநகரசபை பிரதிமேயர் மைத்திரிக்கு ஆதரவு

கம்பஹா மாநகரசபை பிரதிமேயர் அஜித் பஸ்நாயக்க, பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர்  மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.

Read More

குடும்பஸ்தர் சடலமாக மீட்பு ; கொலையா? எனச் சந்தேகம்

வவுனியா மாவட்டத்தின் கனகராயன்குளம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது மகாரம்பைக்குளத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான டெனி (வயது 37) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கனகராயன்குளத்தில் நீண்டகாலமாக இவர் தங்கியிருந்து மேசன் வேலை செய்துவந்துள்ளார். இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் கட்டப்பட்டு வரும் வீடு ஒன்றில் தங்கிநின்று வேலை செய்வது வரும் இவரைக் சந்திப்பதற்காக அயல் வீட்டார் ஒருவர் சென்றவேளை இவர் சடலமாக காணப்பட்டார். இதனையடுத்து உறவினர்கள் கனகராயன்குளம் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து விசாரணைகள்…

Read More

தென்கொரியாவுடன் பேசத் தயாராக இருப்பதாக வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் அறிவிப்பு!

வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்த தேவைப் பட்டால் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்யவும் தான் தயாராக இருப்பதாக வியாழக்கிழமை நிகழ்த்திய புது வருட சிறப்புரையில் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள சியோல் நிர்வாகம் இது வடகொரியாவுடனான உறவினை சுமுகமாக்குவதில் முக்கிய படிக்கட்டு என்றும் அறிவித்துள்ளது. சமீபத்தில் வடகொரிய அரசு மீது சர்வதேசம் முக்கிய மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள முன் வைத்திருந்ததுடன் ‘தி இன்டர்வியூ’ என்ற சர்ச்சைக்குரிய திரைப்பட விவகாரத்தில்…

Read More