Headlines

மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய வேண்டும்!- பொதுபல சேனா




நாட்டுக்கு எதிராக சூழ்ச்சித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய வேண்டுமென பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் கோரியுள்ளார்.

தேசிய சக்திகளின் கட்டுப்பாட்டு நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவை வைத்து இந்த சூழ்ச்சித் திட்டத்தை மேற்கொள்ள முயற்சித்தனர். அது வெற்றியளிக்கவில்லை.

அதன் பின்னர் 2011ம் ஆண்டு முதல் பிரிவினைவாத இருள் சூழ்ந்த சக்திகள் பல்வேறு வழிகளில் நாட்டுக்கு எதிராக சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

உள்ளேயும் வெளியேயும் சூழ்ச்சி செய்யப்பட்டுள்ளதாக மைத்திரிபால சிறிசேன சொல்கின்றார்.

அப்படியென்றால் மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய வேண்டுமென கலகொடத்தே ஞானசார தேரர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *