Headlines

பாடசாலையில் நிலவும் ஒழுக்கச் சீர்கேடுகளே சமூகப் பிரச்சினைகளுக்கு அத்திவாரம் – அமைச்சர் றிஷாத்

பாடசாலைகளில் நிலவுகின்ற ஒழுக்கச் சீர்கேடுகளே சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக அமைவதாகவும் அதிபர்களும், ஆசிரியர் குலாமும் இந்த விடயங்களில் கவனஞ்செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா, நேரியகுளம், மாங்குளம், அல்/ஹாமியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் “அருகிலுள்ள நல்ல பாடசாலை”  திட்டத்தின் கீழ் அமைச்சரின் முயற்சியினால் உள்வாங்கப்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப ஆய்வு கூடத்துக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் இன்று (24/10/2016) கலந்துகொண்டார். இந்நிகழ்வில் கெளரவ அதிதிகளாக வன்னி மாவட்டப் பாராளுமன்ற…

Read More

பொதுபலசேனாவின் ஆர்ப்பாட்டம் ஆரம்பம்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனிற்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசேர தேரர் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியள்ளது. வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக ஞானசேர தேரர் இதற்கு முன்னர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்திருந்தார். இதை நிரூபிக்கும் வகையிலேயே இன்று தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். அண்மையில் முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனினால் ஏற்பாடு செய்திருந்த எழுக…

Read More

வவுனியாவுக்கான பொருளாதார மையம் தேக்கவத்தையில் : கூட்டத்தில் முடிவு

நீண்டகாலம் இழுபறி நிலைக்குள்ளாகியிருந்த வவுனியாவுக்கான பொருளாதார மையத்தை, வவுனியா தேக்கவத்தையில் அமைப்பதற்கான முடிவு இன்று காலை (15/08/2016) ஏகமானதாக மேற்கொள்ளப்பட்டது. வவுனியா அரசாங்க அதிபர் எம்.பி.ஆர்.புஷ்பகுமார தலைமையில் கிராமியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், முதலமைச்சரின் செயலாளர் வி.கேதீஸ்வரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் வவுனியா கச்சேரியில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், இந்தத் தீர்க்கமான முடிவு மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை வவுனியா கச்சேரியில் இடம்பெற்ற கூட்டத்தில் வவுனியா விவசாய சங்கப் பிரதிநிதிகளும், வவுனியா…

Read More

பொருளாதார மத்திய நிலைய இழுபறிக்கு யார் காரணம்?

“வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனே காரணமென” வடக்கு முதலமைச்சர் சீ வி விக்னேஸ்வரன் கூறியதாக பத்திரிகைகளில் இன்று செய்தி ஒன்றைப் படித்தோம். இந்தச் செய்தியைப் பார்த்த போது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கின்றது. முதலமைச்சர் சீ வி போன்ற முதிர்ச்சியுள்ள கனவான் ஒருவர் இவ்வாறான ஒரு கருத்தை அமைச்சரவையில் தெரிவித்து பிரச்சினையை திசை திருப்பப் பார்க்கிறார் என்பது நமக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில்…

Read More

வவுனியா பொருளாதார மத்திய நிலையப் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

வவுனியா நகரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலைய நிர்மாணப் பணிகளை அடுத்த வாரம் ஆரம்பிக்க முடியுமென அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (16/06/2016) நம்பிக்கை வெளியிட்டார். வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் அதன்  இணைத்தலைவர்களான அமைச்சர் றிசாத் பதியுதீன், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்று முடிந்த பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கூறியதாவது, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்…

Read More

வவுனியா மாவட்ட ஒருங்கினைப்புக்குழு கூட்டம்

வவுனியா மாவட்ட ஒருங்கினைப்புக்குழு கூட்டம் இன்று (16) அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் மற்றும் குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன்  ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கூட்டம் அரச அதிபரின் புஸ்பகுமார நெறிப்படுத்தினார். மாவட்டத்தின் பல்வேறு குறைபாடுகள் தொடர்பில்  இந்தக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதுடன் சிலப்பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளும் காணப்பட்டன. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கு…

Read More

அனைத்து மக்களதும் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதே அரசின் கொள்கை

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வாழும் வெவ்வேறு வகையான மக்கள் குழுவினர்கள் மீது வெவ்வேறு விதமாக கவனஞ் செலுத்தப்படுவதான ஒரு கருத்தினை ஒருசிலர் நாட்டு மக்கள் மத்தியில் கொண்டு சென்ற போதும் நாட்டின் அனைத்து மக்களுக்கும் செவிசாய்த்து அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதே தமது அரசின் கொள்கை ஆகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். நேற்று (12) பிற்பகல் வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுநீரக நோய்த் தடுப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே…

Read More

ஜனாதிபதியின் நிகழ்வில் அமைச்சர் றிஷாத்

சிறுநீரக நோய்த் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் “வவுனியா மாவட்டத்திற்கான சிறுநீரக நோய்த் தடுப்புக்கான தேசிய நிகழ்ச்சித்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் போகஹகஸ்வேவ பிரதேசத்தில் நேற்று (12) இடம்பெற்றது. இந் நிகழ்வில் கௌரவ அமைச்சர் றிஷாத் பதியூதீனும் பங்கேற்றிருந்தார்.

Read More

வவுனியா பாடசாலை வீதி புனரமைக்கப்படும் – ஜனாதிபதி

மக்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்துள்ளார். வவுனியா பொகஸ்வேவா மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற “சர்வதேச சிறுநீரக நோய் ஒழிப்பு திட்டம்” நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பொகஸ்வேவா மகா வித்தியாலய வீதியில் இருந்து 40 கிலோமீற்றர் வரையில் பாதை புனரமைத்து தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Read More

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் – மைத்திரி, ரணில், றிஷாத்தை உள்ளடக்கி குழு

வடக்கில் சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாக, அமைச்சர்கள் குழுவொன்றை அமைக்க, அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த சிங்களவர்களுக்கு, 5543 வீடுகளும், முஸ்லிம்களுக்கு, 16,120 வீடுகளும் தேவைப்படுவதாகவும், உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டியுள்ளதாகவும், அரசாங்கத்தினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை நேற்றுமுன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், கூட்டாகச் சமர்ப்பித்த அமைச்சர்கள், சுவாமிநாதன், ரிசாத் பதியுதீன், முஸ்தபா ஆகியோர், சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் சம்பந்தமான பொருத்தமான வழிமுறைகளை…

Read More

சிங்கள மக்களுக்கு வீடுகள் அமைச்சர் றிசாத் அடிக்கல்லை நாட்டினார்

வவுனியா வடக்கு  ஈரட்பெரிய குளத்தில் சிங்கள மக்களுக்கென அமைச்சர் றிசாத்தின் சொந்த முயற்சியினால் சுமார் 25 வீடுகள் கட்டப்படவுள்ளன. இதற்கான அடிக்கல்லை இன்று (02/06/2016) அந்தப் பிரதேசத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் நாட்டி வைத்தார். இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக, அமைச்சரின் வவுனியா இணைப்பாளர் முத்து முஹம்மத், பொதுசனத் தொடர்பு அதிகாரி மொஹிடீன் உட்பட பலர் பங்கேற்றனர். இன்று காலை இடம்பெற்ற இந்த நிகழ்வின் பின்னர் வடமாகாண சபை உறுப்பினர் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கும்…

Read More

அமைச்சர் றிஷாத்தின் வழிகாட்டலில் இயக்கி வரும் ஆடைத்தொழிற்சாலை

“கூட்டுறவே நாட்டுயர்வு. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்பது ஆன்றோர் வாக்கு.  அந்த வகையில் வவுனியாவில் தையல் பயிற்சி  பெற்ற 40 யுவதிகள் ஒன்று சேர்ந்து ஒரு சிறிய ஆடைத்தொழிற்சாலை ஒன்றை உருவாக்கியுள்ளனர். கைத்தொழில்,வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகள் நிறுவகத்தினால் (SLITA) அமைச்சர் றிசாத் பதியுதீனின்  வழிகாட்டலில், சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் யுவதிகளுக்கு தையல் பயிற்சிகளை வழங்கி பின்னர் சான்றிதழ்களும், தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம்…

Read More