Headlines

புதிய வற் சட்டமூலம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பிப்பு

வற் என்ற பெறுமதிசேர் வரி திருத்தச்சட்டமூலம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். இதன்படி குறித்த சட்டமூலம் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இரண்டாவது தடவை இதுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் பிரேரணை, அமைச்சரவை அங்கீகாரம் பெறாமைக்காரணமாக அரசியல் அமைப்புக்கு ஏற்புடையதாக இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் புதிய சட்டமூலம் கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் திகதியன்று அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டது. இதில், முன்னைய சட்டமூலத்தை காட்டிலும் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

Read More

வற் வரி: வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படும்

புதிய வற் வரி சீர்திருத்தம் தொடர்பான சட்ட மூலம், சட்ட ரீதியான முறையில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னர் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்போது,  எவ்வித எதிர்ப்புக்கள் வந்தாலும் அதற்கு முகம்கொடுக்க அரசு தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். புதிய வரவு செலவுத் திட்டம் எந்தவொரு அரசியல் இலாபங்களையும் கருத்திக் கொண்டு தாயரிக்கப்படுவதில்லை. எதிர்வரும் தேர்தலுக்கும் வரவு செலவுத் திட்டத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இன்னும், நல்லாட்சி அரசாங்கத்துக்கு நாட்டு…

Read More

வற் திருத்தம் 2 வாரத்தில் வரும்

‘ பெறுமதிசேர் வரியை (வற்) 15 சதவீதமாக அதிகரிப்பது தொடர்பான யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதுடன் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், இன்று (நேற்று) நள்ளிரவு வெளியிடப்படும்’ என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். ‘வற் அதிகரிப்பு யோசனை, வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்துக்கு விடப்பட்ட பின்னர் அது நடைமுறைக்கு கொண்டு வருதல்’ என,…

Read More

“உய­ரிய சில்­லறை விலையை” மீறி அத்­தி­யா­வ­சிய பொருட்­களை விற்­பனை செய்தால் நடவடிக்கை

வற்­வரி திருத்­தங்­களின் போது அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளுக்­கான வற்­வரி அதி­க­ரிக்­கப்­ப­டாது. அரசின் “உய­ரிய சில்­லறை விலையை” மீறி அத்­தி­யா­வ­சியப் பொருட்­களை விற்­பனை செய்­வோரை கண்­டு­பி­டிக்க நாடு முழு­வதும் விழிப்­புக்­கு­ழுக்கள் சோத­னை­களை மேற்­கொண்டு வருகின்றன என்று அர­சாங்­கத்தின் வாழ்க்கைச் செலவு தொடர்­பாக ஆராயும் குழு தெரிவித்தது. கொழும்பில் நிதி­ய­மைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டது. இங்கு வர்த்­தக வாணி­பத்­துறை அமைச்சின் செய­லா­ளரும் அர­சாங்­கத்தின் வாழ்க்கை செலவு தொடர்­பாக ஆராயும் குழுவின் தலை­வ­ரு­மான ரி.வி.கே.பி.தென்­னகோன் மேலும்…

Read More

வற் வரி திருத்தச்சட்டத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம்

வற் வரி வீதத்தை 11  வீதத்திலிருந்து 15 வீதமாக அதிகரிப்பதற்கான வற்வரி அதிகரிப்பு திருத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. திருத்தச் சட்டமூலம் சற்றுமுன்னர் அமைச்சரவையில் நிதியமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த வகையில் அமைச்சரவையானது வற்வரி அதிகரிப்பு சட்டமூலத்திற்கு அங்கீகாரத்தை வழங்கியதையடுத்து, அதனை வர்த்தமானியில் வெளியிடவும் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனைகளும் இந்த உத்தேச திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வற்வரி திருத்தச் சட்டமூலத்தில் மாதம் 12…

Read More

வருமானத்தை அதிகரிப்பது அவசியம் – துமிந்த

மக்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் அரசின் வருமானத்தை அதிகரிப்பது அவசியம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். எனவே, வட்வரி திருத்த சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவது அரசின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் துமிந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

புதிய வரிக்­கொள்கையை அறி­மு­கப்­ப­டுத்த வேண்டும்

வற் வரியில் இடம்­பெற்­றுள்ள தவ­று­களை நீதி­மன்றம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. எனவே நாட்டில் நிலை­யான அபி­வி­ருத்தி ஏற்­ப­டுத்­து­வதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு புதிய வரிக் கொள்கையை அறி­மு­கப்­ப­டுத்த வேண்டும். அதில் தேசிய உணவு உற்­பத்­திக்கு சலுகை வழங்க வேண்டும் என அது­ர­லிய ரத்ன தேரர் தெரி­வித்தார். ‘தேசிய நுகர்வோர் வலை­ய­மைப்பு’ எனும் அமைப்பு இன்று உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. அது தொடர்பில் தெளி­வு­றுத்­ததும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று கொழும்பில் நடை­பெற்­றது. அதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும்…

Read More

நாடாளுமன்றில் இன்று விவாதம்!

நிதி முகாமைத்துவ திருத்தச் சட்டம் குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடைபெறவுள்ளது. உத்தேச நிதி முகாமைத்துவ திருத்தச் சட்டம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் விவாதம் செய்யப்படவுள்ளது. 2016ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அமைய இந்த திருத்தங்களை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேவேளை, வற் வரி அதிகரிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பிலான தீர்ப்பு சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பற்றி சபாநாயகர் இன்று (9) நாடாளுமன்றில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அவசர கலந்துரையாடல்

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (வற்) சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவினர் விசேட கலந்துரையாடலில் இன்று  (8) பிற்பகல் ஈடுபடவுள்ளனர். குறித்த திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்பிக்கும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. சுசில் பிரேமஜயந்த, அநுரா பிரியதர்ஷன யாப்பா, சரத் அமுனுகம, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் லசந்த அழகியவன்ன உள்ளிட்டவர்கள் இந்த குழுவில் உள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்…

Read More

வற் சட்டமூலம் மீது 11ஆம் திகதி விவாதம்

வற் திருத்த சட்டமூலம், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி, நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

Read More

வற்வரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

மொத்த மற்றும் சில்லறை வியாபாரங்களுக்கான வற்வரி (பெறுமதி சேர் வரி) அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக இன்று (19) பிலியந்தல நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. கெஸ்பெவ, பிலியந்தல, பொகுந்தர பிரதேச வர்த்தகர்களால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வற்வரி அதிகரிப்புக்கு எதிராக தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

Read More

கோழி இறைச்சி விற்பனையாளர்கள் ஆர்பாட்டம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கோழி இறைச்சிக்கான கட்டுபாட்டு விலையின் கீழ் கோழி இறைச்சியினை விற்பனை செய்ய முடியாது எனக் கூறி ஹட்டன், பொகவந்தலாவை மற்றும் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த கோழி இறைச்சி விற்பனையாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தங்களது கடைகளை அடைத்து ஆர்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அரசாங்கத்தால் கட்டுபடுத்தப்பட்டுள்ள 495 ரூபாவிற்கு கோழி இறைச்சியினை விற்பனை செய்ய முடியாது என இவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை கோழி பண்ணை உரிமையாளர்களின் வரி நீக்கப்பட்டு, அவர்களுக்கான சலுகைகள் செய்து தரப்படுமாயின் குறித்த…

Read More