Headlines

தாஜூதீன் கொலை: அரச சாட்சியாளராக முன்னாள் பொலிஸ் அதிகாரி

முன்னாள் ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீன் கொலை வழக்கு விசாரணையில் அரச சாட்சியாளராக மாற இளைப்பாறிய பொலிஸ் அதிகாரி ஒருவர் இணக்கம் வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தின் உயர்மட்டத்தை கோடிட்டு அரசாங்க பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி, விசாரணை அதிகாரிகளிடம் தமது இணக்கத்தை வெளியிட்டுள்ளார். எனினும் இன்னும் பொலிஸ் தரப்பு தமது முடிவை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்காக குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட வரப்பிரசாதங்கள் வழங்கப்படமாட்டாது என்று பொலிஸ்…

Read More

பொலிஸ் அதிகாரியின் காதை கடித்து தப்பிய நபர்

மஹியங்கனை – சேனார பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை மோசடியை முற்றுகையிட சென்ற சந்தர்ப்பத்தில் அதனை நடத்தி சென்ற சந்தேக நபர், பொலிஸ் அதிகாரியின் காதை கடித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு மஹியங்கனை பொலிஸ் அதிகாரிகள் மூன்று பேர், இந்த சட்டவிரோத மதுபான மோசடியை முற்றுகையிட சென்ற போதே இந்த சம்பவத்திற்கு இடம்பெற்றுள்ளதோடு, குறித்த சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் தப்பி சென்றுள்ளார். குறித்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி, மஹியங்கனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்தோடு,சந்தேக நபரை…

Read More

பொலிஸார் – பொதுமக்களுக்கு இடையிலான உறவில் விரிசல்!

பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக புதிய பொலிஸ்மா அதிபராக பதவியேற்ற பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று தனது கடமைகளை மத அனுஸ்டானங்களின் பின் பொறுப்பேற்றுக் கொண்ட பொலிஸ்மா அதிபர் அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். பொலிஸாரின் கடமைகள் மற்றும் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பொலிஸ்மா அதிபர் என்ற ரீதியில் தனது எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் ஊடகவியலாளர்களிடம் தெளிவுப்படுத்தி்யுள்ளார்.

Read More

மானை வேட்டையாடிய நபர் கைது

– பேரின்பராஜா சபேஷ் – சட்ட விரோத துப்பாக்கியைப் பயன்படுத்தி மான் வேட்டையாடிய நபரொருவரை, மான் இறைச்சியுடன் இன்று புதன்கிழமை (20) மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மாவடிஓடைப் பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட இவரை, ஏறாவூர் நீதிமன்றில் ஆஜர்செய்யவுள்ளதாகக் கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்ஆர்பீ சேனநாயக்க தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜயசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைவாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்தி ரத்னவின் மேற்பார்வையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Read More

லக்கல ஆயுத திருட்டின் பின்னணி என்ன?

லக்கல பொலிஸ் நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கி திருட்டு சம்பவம் அந்த பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்துடன் சட்டவிரோத இரத்தினக்கல் வர்த்தகத்தில் ஈடுபடும் அரசியல் தொடர்புடைய கடத்தல்காரர்கள் ஈடுபட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. அதற்கமைய துப்பாக்கிகளை திருடிய சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Read More

லக்கலை விவகாரம்: விசாரணைகள் தீவிரம்

லக்கலை பொலிஸ் நிலையத்தில் காணாமல் போன ஆயுதங்கள் தொடர்பாக 100 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லக்கலை பொலிஸ் நிலையத்தில் பணி புரியும் பொலிஸார் உட்பட பொலிஸ் நிலையத்தை அண்டியுள்ள மக்களிடமும் விசாரனைகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காணாமல்போய் பின்பு மீட்கப்பட்ட ஆயுதங்கள் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ஆயுதங்களில் உள்ள கைரேகைகளை இனங்காண்பதற்காகவே குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவிடம் ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. லக்கலை பொலிஸ் நிலையத்தில் கடந்த 14ஆம் திகதி ஆயுதங்கள்…

Read More

பொலிஸ் நிலையத்தில் திருடப்பட்ட துப்பாக்கிகள் விகாரையில் மீட்பு

மாத்தளை – லக்கல பொலிஸ் நிலையத்தில் திருடப்பட்ட துப்பாக்கிகள் இன்று காலை லக்கல – வெலேலெவெல சந்தகல விகாரையில் மீட்கப்பட்டுள்ளன.

Read More

இலங்கையில் 818 பேர் கைது

கடந்த 24 மணித்தியாளத்திற்குள் குடி போதையில் வாகனம் செலுத்திய 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆம் திகதி தொடக்கம்  இன்றைய தினம் வரை குடி போதையில் வாகனம் செலுத்திய 818 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே அதிகமானவர்கள் என பொலிஸார் ஊடக பேச்சாளர் காரியாலயம் சுட்டிக்காட்டியது. குடி போதையில் வாகனம் செலுத்துவர்களுக்கு எதிராக விசேட நடவடிக்கைகள் கடந்த 10 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

கடுவலை சுது கைது

பாதாள உலக தலைவர் கடுவலை வசந்த என அழைக்கப்படும் பல கொலைகளுடன் தொடர்புடைய நபர் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார். கடுவலை சுது என அழைக்கப்படும் பெல்லகே சுதத் கித்சிறி என்ற பாதாள உலக தலைவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடுவலை கொத்தலாவல, பங்களாவத்தை பிரசேத்தில் வைத்து பேலியகொடை குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரினால், இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

Read More

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கூடுதல் அதிகாரம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனுமதி பத்திரம் இன்றி பயணிக்கும் பயணிகள் பஸ் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவ் வீதிகளில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (5) கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமசந்தர தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், எதிர்காலத்தில் அனுமதிப்பத்திரமின்றி பயணிக்கும் பஸ்களுக்கு எதிராகவும் அதிக பயணிகளை ஏற்றி செல்லும் பஸ்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்வதற்கு நெடுஞ்சாலைகளில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அதிகாரம்…

Read More

இன்று முதல் சி.சி.டி.வி கெமராக்கள் அமுல்

105 சி.சி.டி.வி கெமராக்களை பயன்படுத்தி கொழும்பு நகர பாதைகளில் சட்டத்தை மீறும் நபர்களை கைது செய்ய இன்று (4) முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேலும்  இது தொடர்பாக பொலிஸ் ரோந்து வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கெமரா பதிவுகளையும் பயன்படுத்தவுள்ளதாக பொலிஸ்  ஊடகப் பிரிவு காரியாலம் தெரிவித்துள்ளது.

Read More

பாதுகாப்புக்கு அச்சறுத்தல் இல்லை

நாட்டில் குறிப்பாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள போதிலும், பாதுகாப்புக்கு அச்சறுத்தல் இல்லை என பொலிஸார் உறுதியளித்துள்ளனர். தலைநகரம் மற்றும் தென் பகுதிகளில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர, இந்த குற்றச்செயல்கள் தனிப்பட்ட பகைமை காரணமாகவே இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். கடந்த சில வாரங்களில் இலங்கையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த மார்ச் 5ம் திகதி வெலிகடை சிறைச்சாலைக்கு முன்…

Read More