Headlines

வங்கியொன்றில் 2 இலட்சம் ரூபா போலி நாணயத்தாள்கள் மீட்பு : யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் உள்ள வங்கியொன்றில் 2 இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் அது தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்றைய தினம் காலை இளவாளை பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று திருமண செலவுக்காக மானிப்பாயில் உள்ள தனியார் வங்கியொன்றுக்கு சென்று பதினேழு பவுண் நிறையுடைய ஆபரணங்களை அடகு வைத்துள்ளனர். இவ்வாறு அடகு வைத்து அவர்கள் வங்கிகளிடமிருந்து…

Read More

பொலிஸ் அதிகாரிகள் 7 பேருக்கு பதவியுயர்வு

சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் 7 பேருக்கு பிரதி பொலிஸ்மா அதிபர் பதவிவழங்கப்படுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த யோசனையானது பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் பொலிஸ் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய இன்றைய தினம் (23) கூடவுள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் கலந்துரையாடலின் போது இதற்கான அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். இதன்போது கொழும்பு – வடக்கு பிரதேச பிரதி பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன உள்ளிட்டஅதிகாரிகள் 7 பேரே பிரதி…

Read More

விரைவில்… பொலிஸாருக்கான புதிய ஒழுக்க விதி கோவை

பொலிஸ் அதிகாரிகளுக்கான புதிய ஒழுக்க விதி கோவையை தயாரிப்பதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். பொலிஸார் பொதுமக்களுடனான சுமூகமான உறவை பேணுவதற்காகவும் மக்களுடன் இணைந்து செயற்படும்போது பொலிஸார் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க விதிகள் உள்ளிட்ட பல விதிகளை உள்ளடக்கி குறித்த ஒழுக்க விதிக் கோவை தயார் செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

பொலிஸாருக்கு எதிராக உதயகம்மன்பில முறைப்பாடு

அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து அவரை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர்முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்து, அவர்களுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நீதிமன்றில் மனுதாக்கல் செய்துள்ளார். தன்னை கைது செய்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறும், 50 கோடி ரூபாய் இழப்பீடு கோரியுமே நேற்றைய தினம் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல்செய்துள்ளார். மேலும் உதய கம்மன்பில தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் சிறப்பு விசாரணைப் பிரிவின்…

Read More

பொலிசார் பக்கசார்பாக செயற்படுகின்றனர் – றிஷாத் சீற்றம்

தெஹிவளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் பொலிசார் பக்கசார்பாக நடந்து கொள்வதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளார். பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவர் இக்குற்றசாட்டை முன்வைத்தார் இவர் மேலும் குறிப்பிடுகையில் தெஹிவாளை பாத்தியா மாவத்தை பள்ளிவாசலை விஷ்தரிக்கும் உரிமை முஸ்லிம்களுக்கு உண்டு. அதனை பொலிசார் தடுக்க முடியாது. இனவாதிகளுக்கு சார்பாக பொலிசார் நடந்து கொள்கின்றனர். இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் சாலக ரத்நாயக்கவின் வீட்டுக்குச் சென்று நானும் இன்னும் சில அமைச்சர்களும் பாராளுமன்ற…

Read More

 7 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பதவி உயர்வு

– கனகராசா சரவணன் – பொலிஸ் ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய உடனடியாக அமுலுக்குவரும் வகையில் 7 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு உதவி பொலிஸ்மா அதிபாராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது இதங்கமைய, அஜந்த சமரகோன், ரண்மல் கொடித்துவக்கு, நானகசில்வா, கிஸ்சிறிஜெயலத், ராஜித சி சமிந்த, சஞ்சீவ தர்மரத்தின மற்றும் பியந்த வீரசூரிய ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது

Read More

பொலிஸாருக்கு எதிராக ஆயிரம் முறைப்பாடுகள்!

பொலிஸாருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். இந்த முறைப்பாடுகள் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். பொதுமக்களின் முறைப்பாடுகளை கவனத்திற்கொள்ளாமை, பக்கச்சார்பாக செயற்பட்டமை மற்றும் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டமை ஆகியன தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக 467 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 460 முறைப்பாடுகள்…

Read More

பொலிஸ் ஊடகப் பிரிவு இடைநீக்கம்

பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின்  கீழ் பொலிஸ் ஊடகப் பிரிவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்ய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சகம் நேற்று (2) தீர்மானித்துள்ளது. (vk)

Read More

பொலிஸ் பாிசோதகரொருவர் கைது!

மாரவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் பரிசோதகரொருவர் கொழும்பு விஷேட விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பொலிஸ் அதிகாரி இதற்கு முன்பதாக சீதுவ பிரதேசத்தில் கடமையாற்றி வந்துள்ளார். அக் காலப்பகுதியினுள் வீடுடைப்பு மற்றும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவரை தடுத்து வைத்து வன்மையாக தாக்கியதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றில் பெயரிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

பொலிஸ் அதிகாரிகள் நான்கு பேருக்குப் பதவி உயர்வு

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் மூலம் பொலிஸ் அதிகாரிகள் நான்கு பேருக்குப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் இரண்டு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் இரண்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் என்போர் உள்ளடங்கியுள்ளனர். முன்னைய அரசாங்கத்தின் பழிவாங்கல் போக்கு காரணமாக பொலிஸ் அத்தியட்சகர்கள் சீ.ஏ. பிரேமசாந்த மற்றும் எச். எச். சூலசிறி ஆகியோருக்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதவி உயர்வுகள் வழங்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து பொலிஸ் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட மேன்முறைrifkas rikasadminயீட்டை அடுத்து தற்போது அவர்களுக்கான பதவி…

Read More

மே தினக் கூட்ட பாதுகாப்பிற்கு 5000 பொலிஸார் கடமையில்!

மே தினக் கூட்ட பாதுகாப்பு பணிகளில் 5000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மே தினக் கூட்டங்கள் மற்றும் மே தின பேரணிகள் போன்றவற்றுக்கான பாதுகாப்பிற்காக இவ்வாறு 5000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நடைபெறும் மே தினக் கூட்டங்களுக்காக 3100 பொலிஸ் உத்தியோகத்தர்களும், மோட்டார் போக்குவரத்து கடமைகளுக்காக 1900 பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். மே தினக் கூட்டங்களின்…

Read More

புதிதாக 172 பொலிஸ் நிலையங்கள்!

நாடு முழுவதும் புதிதாக சுமார் 172 பொலிஸ் நிலையங்கள் உருவாக்கப்படவுள்ளதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குருநாகல், வெல்லவ பொலிஸ் நிலையத்தை நவீனமயப்படுத்தி திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் சாகல ரத்நாயக்க, நாட்டில் தற்போதைக்கு 428 பொலிஸ் நிலையங்கள் செயற்படுகின்றன. இதனை 600 பொலிஸ் நிலையங்கள் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். பொலிசாருக்கு நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட விசாரணை முறைகள்…

Read More