Headlines

ஐ.நா உலக வர்த்தக அமைச்சர்கள் மாநாட்டில் றிசாத் உரை

-அமைச்சின் ஊடகப்பிரிவு – சர்வதேச முகவரகங்களின் அபிவிருத்தி உதவிகளையும் தேவையான வளங்களையும் பெற்று, சாதகமான இலக்குகளை முன்னெடுத்து 2030 இல் அதன் பயன்களை இலங்கை அனுபவிக்க முடியுமென தாம் நம்புவதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். நைரோபி, கென்யாட்டா சர்வதேச மாநாட்டு மையத்தில் இடம்பெற்று வரும், ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி மாநாட்டின் 14வது கூட்டத்தொடரில் இலங்கைக்குத் தலைமைத்தாங்கி உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சரின் உரை மாநாட்டு மண்டபத்திலிருந்து ஐ.நா…

Read More

மும்மண்ன பாடசாலை மைதான இழுபறிக்குத் தீர்வு

மும்மண்ன முஸ்லிம் மகா வித்தியாலய விளையாட்டு மைதான பிரச்சினைக்குத் தீர்வுகிடைக்க உதவி செய்த அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு, பாடசாலை அபிவிருத்திச்சங்கம் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளது. இந்தப் பாடசாலைக்குச் சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட விளையாட்டுமைதானக் காணியை, அந்தப் பிரதேசத்தில் வாழும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் உரிமை கொண்டாடி, மாணவர்களின் விளையாட்டுப் பயிற்ச்சிக்குத் தடையாக இருந்தனர், கடந்த பல மாதங்களாக நடந்த இந்த இழுபறி இனவாதக் கண்ணோட்டத்துடன் நோக்கப்பட்டு, இரண்டு சமூகங்களுக்கிடையே முரண்பாடுகளைத் தோற்றுவித்திருந்தது,…

Read More

அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் பிரமுகர்களுடனான சந்திப்பு

-சுஐப் எம்.காசிம்   – முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டை அடிநாதமாகக்கொண்டு பல தசாப்தங்களாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் “அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின்” செயற்பாடுகளுக்கு தாம் உறுதுணை அளிப்பதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். முஸ்லிம் கல்வி மாநாட்டின் முக்கியஸ்தர்களான அதன் தலைவர் கலாநிதி ஹுசைன் இஸ்மாயில், செயலாளர் சட்டத்தரணி ரஷீட்எம்.இம்தியாஸ், உபதலைவரும் சிரேஷ்ட பத்திரிகையாளருமான என்.எம்.அமீன் உட்பட அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள், அமைச்சரை அவரது அமைச்சில் சந்தித்துக்…

Read More

கென்யாவில் அமைச்சர் றிஷாத்

ஜி -77 மற்றும் சீனா நாடுகளின் மாநாட்டின், அனைத்து எதிர்கால நடவடிக்கைகளுக்கு இலங்கை  அதிகபட்சஆதரவை  வழங்கும்  என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உறுதி அளித்துள்ளார். நேற்று (17) காலை நைரோபியா கென்யாட்டா சர்வதேச மாநாட்டு மையத்தில் நான்கு ஆண்டுக்கு ஒரு முறை உலக நிகழ்வாக நடைபெறும் ஜி -77 மற்றும் சீனா மாநாட்டின் அமர்வின் 14 ஆவது அமைச்சர்கள் கூட்டத்தில்உத்தியோகபூர்வமாக இலங்கை அரசின் சார்பாக கலந்துக்கொண்டு இலங்கையின் அறிக்கையினை  தாக்கல்செய்து உரையாற்றுகையிலேயே அமைச்சர்…

Read More

அஷ்ரப் ஹுஸைனின் மறைவு ஈடு செய்யமுடியாது. – அமைச்சர் றிஷாத் அனுதாபம்

சிறந்த சமூக சேவையாளரும், மார்க்கப் பற்றாளருமான அஷ்ரப் ஹூஸைனின் மறைவு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி ஏனைய சமூகங்களுக்கும் பாரிய இழப்பாகுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சமூப்பெரியார் அஷ்ரப் ஹுஸைன் தனது வாழ் நாளை மக்கள் பணிக்காகவே பயன்படுத்தியவர். ஏழைகளின் துன்பங்களையும் அனாதைகளின் கஷ்டங்களையும் தீர்ப்பதற்காக அவர் பல்வேறு சமூக நலன் அமைப்புக்களின் முக்கிய பதவிகளிலிருந்து அவர்களின் வாழ்வு சிறக்க உதவியவர். திகாரிய அங்கவீன நிலையத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான…

Read More

முஸ்லிம் சமூகம் முறையான வழிகாட்டல் இன்றி அவதி அமைச்சர் றிஷாத் வேதனை

-சுஐப் எம் காசிம் – சிறைச்சாலைகளில் முஸ்லிம் சகோதரர்கள் 28 சதவீதமானோர் தமது காலத்தை அவமே கழித்து வருகின்றனர். அதே வேளை கல்வித் துறையில் நமது சமூகத்தில் உயர் பதவி வகிப்போர் 3 சதவீதத்திலும் குறைவானவர்களாகவே காணப்படுவது கவலைக்குரிய விடயம் என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திகன-ஹிஜ்ராபுர இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் தும்பர பள்ளிச் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றினார். கல்விதான் நமது சமூகத்தின் அழியாத சொத்து….

Read More

கண்டி, தும்பர மஸ்ஜித் சம்மேளணத்தின் தொழில் பயிற்சி கண்காட்சி

கண்டி, தும்பர மஸ்ஜித் சம்மேளனம் நடாத்தி வரும்  தும்பர தொழில்பயிற்சி நிலையத்தில், தையல் பயிற்சி பெற்றுவரும்  யுவதிகளும், மின்னியல் துறையில் பயிற்சி பெற்றுவரும் இளைஞர்களும், தாருல் ரஹ்மான் அமைப்பைச் சேர்ந்த மாணவிகளும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியினை, கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் நேற்று (15/07/2016) அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். இந்நிகழ்வு திகன இஸ்லாமிய கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

Read More

தேசிய கனிஷ்ட கைப்பணிப் போட்டி மற்றும் கண்காட்சி

பாடசாலைகளில் அருங்கலைகளைக் கற்பிக்கும் நோக்கில், எனது அமைச்சின் கீழான அருங்கலைகள் பேரவை தயாரித்துள்ள பாடவிதானங்களை கல்வி அமைச்சு நடைமுறைப்படுத்தி வருவதாக  கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். தேசிய அருங்கலைகள் பேரவையும், கல்வி அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள தேசிய கனிஷ்ட கைப்பணிப் போட்டி மற்றும் கண்காட்சியின்  அங்குரார்ப்பண நிகழ்வு கைத்தொழில், வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இராஜாங்க அமைச்சர் சம்பிக்க…

Read More

15 பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் அறிவிப்பு

-சுஐப் எம்.காசிம் – 15 அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாடு விலைகளை அமைச்சர் றிசாத் இன்று காலை (14/07/2016) அறிவித்தார். அமைச்சில் இடம்பெற்ற அருங்கலைகள் பேரவையின் நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்தார். இந்தப் பொருட்களுக்கான விலைகள் இன்று நள்ளிரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டு உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 01. மைசூர் பருப்பு ரூபா. 169 02. நெத்தலி (தாய்) நெத்தலி (துபாய்) ரூபா. 495 ரூபா. 410 03. கடலை ரூபா. 260 04….

Read More

நிஷா பிஷ்வாலிடம் றிசாத் வலியுறுத்து

-சுஐப் எம்.காசிம் – இனப் பிரச்சினை தீர்வு முயற்சியில் எந்தவொரு சமூகமும் பாதிக்கப்படாத வகையில் தீர்வுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டுமெனவும், இதன் மூலமே நிரந்தர சமாதானத்தை பேணமுடியும் எனவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். இலங்கை வந்துள்ள அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வாலை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் சந்தித்தபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த சந்திப்பில் அமெரிக்க உதவிச் செயலாளர் டொம் மலி நவ்ஸ்கியும் பங்கேற்றிருந்தார். யுத்த முடிவுக்குப் பின்னர் இலங்கையின்…

Read More

நிஷா பிஷ்வால் – அமைச்சர் றிஷாத் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மத்திய தெற்காசிய பிராந்தியங்களுக்கான, அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் அவர்களை, செயற்பாட்டுக்குழுவினர் நேற்று (13) மதிய போசனத்தின் போது சந்தித்து உரையாடினர். இந்த சந்திப்பின் பின்னர் அமைச்சர் றிசாத் பதியுதீன், அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளருக்கு கைலாகு கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Read More

கணிணி மயப்படுத்தப்படும் சதொச விற்பனை நிலையங்கள்

சதொச விற்பனை நிலையங்கள் இன்னும் ஆறு மாதத்திற்குள் கணிணி மயப்படுத்தப்படும். இலங்கை மன்றக்கல்லூரி செயலமர்வில் ரிஷாட் அறிவிப்பு -சுஐப் எம் காசிம் நாடளாவிய ரீதியில் இயங்கும் சதொச விற்பனை நிலையங்களை இன்னும் ஆறு மாதங்களில் கணிணி மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதன் மூலம் சதொச நிலையங்களின் பணிகளை துரித கதியில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று தெரிவித்தார். சதொச ஊழியர்களுக்கும் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் அதிகாரிகளுக்கும் இலங்கை மன்றக்கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வில்…

Read More