Headlines

கைத்தொழிற்துறையை மேம்படுத்துவதே எனது இலக்கு – அமைச்சர் றிஷாத்

-சுஐப் எம்.காசிம் – கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்திச் சபை, சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் இன்கொம் (INCOM -2016) என்ற தொனிப்பொருளிலான மாபெரும் கண்காட்சியை ஆகஸ்ட் 26 – 30 வரை நடாத்துவதற்கு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு, ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் இன்கொம் கண்காட்சி தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறியதாவது, யுத்தத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட…

Read More

றிசாத், ஹகீம், தயாவின் கோரிக்கையை நிதியமைச்சர் ஏற்பு

அம்பாறை மாவட்டத்தில் உள்ள கரும்பு உற்பத்தியாளர்களும், நெசவுத்தொழிலில் ஈடுபடுவோரும் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் வகையில் அவர்களை, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். அமைச்சரவையின் உபகுழுக் கூட்டம் இன்று காலை (12/07/2016) நடைபெற்றபோது அமைச்சர்களான றிசாத் பதியுதீன், ரவூப் ஹகீம், தயாகமகே ஆகியோரின் வேண்டுகோளை ஏற்றே, இந்த சந்திப்பை அவர் நடத்தவுள்ளார். இந்த மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் கஷ்டங்களை அமைச்சர்கள், நிதி அமைச்சர் ரவியிடம் எடுத்துரைத்தனர்….

Read More

கணக்கியல் சார்துறையின் பங்களிப்பு அபரிமிதமானது

-சுஐப் எம்.காசிம் – உலகப் பொருளாதார மந்த நிலையில் இருந்து நாடுகளை மீட்டெடுப்பதற்கு முகாமைத்துவ கணக்கியல்சார்துறை பெரும் பங்களித்து இருப்பதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்றுமாலை தெரிவித்தார். அங்கீகரிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தேசிய முகாமைத்துவ கணக்காய்வு மாநாடும், ஒருங்கிணைக்கப்பட்ட கணக்குப் பதிவியலில் சிறப்புத் தேர்ச்சி  பெற்றவர்களுக்கான விருது வழங்கலும் கொழும்பு, சினமன் லேக்சைட்  ஹோட்டலில் நேற்று இடம்பெற்றபோது அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியதுடன், விருதுகளையும் வழங்கிவைத்தார்….

Read More

தேசிய முகாமைத்துவ கணக்காளர் மாநாடு

அங்கீகரிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தினால் (CMA) ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய முகாமைத்துவ கணக்காளர் மாநாடு- 2016 மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கணக்கியல் துறையில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கான விருது வழங்கும் வைபவம் நேற்று (11) மாலை கொழும்பு சினமன் )லேக் ஹோட்டலில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியூதீன் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் விருதுகளையூம் வழங்கி வைத்தார். நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் லக்ஷ்மன் வட்டவல தலைமை வகித்த இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நிதியமைச்சர்…

Read More

“ஓய்ந்தும் ஒளி துலங்கும் ஆசான்கள் கௌரவிப்பு விழா”

புத்தளம் அல்-காசிமி “இஸ்லாமிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின்” ஏற்பாட்டில் இடம்பெற்ற “ஓய்ந்தும் ஒளி துலங்கும் ஆசான்கள் கௌரவிப்பு விழாவும் மாணவர் பரிசளிப்பு விழாவும்” இன்று (9) மாலை அல் – காசிமி ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலய விளையாட்டுத்திடலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தாராபுரம் மண்ணிண் மைந்தரும் மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி, புத்தளம் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் சப்ரி,…

Read More

அத்தியாவசியப் பொருட்களுக்கு வெற் கிடையாது -அமைச்சர் றிஷாத்

சுஐப் எம் காசிம் அத்தியாவசியப் பொருட்களுக்கு வெற்(vat)கிடையாது. அமைச்சரவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடி முக்கிய முடிவுகளை எடுக்கும். -அமைச்சர் றிஷாத் பாராளுமன்றத்தில் அறிவிப்பு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 12ம் திகதி அமைச்சரவையில் அமைச்சர்கள் கூடி முடிவு எடுக்கவுள்ளதாகவும் இந்தப் பொருட்களுக்கு வெற்(VAT) பெறுமதி சேர்வரி சேர்க்கப்படமாட்டாதெனவும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிஷாத் பதியூதீன் பாராளுமன்றத்தில் அறிவித்தார். “ஆயினும் வெற் பெறுமதி சேர்க்கை குறிப்பிட்ட சில பண்டங்களுக்கே அமுல்படுத்தப்படும் எனவும் அவர்…

Read More

மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினராக சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் நியமனம்

பிரபல சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் றிஷாத் பதியுதீனின் சிபாரிசுக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவருக்கான நியமனக் கடிதத்தை அமைச்சர் றிஷாத் பதியுதீன் நேற்று (04/07/2016) கைத்தொழில்,வர்த்தக அமைச்சு அலுவலகத்தில் வைத்து கையளித்தார். சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் அனுராதபுர மாவட்டம் கனேவல்பொலவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் கல்வி கற்று, பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்று சட்டத்தரணியானார். கொழும்பு, பல்கலைக்கழக சட்ட முதுமாணித்துறை…

Read More

இலங்கைக்கான கஸகஸ்தான் தூதுவர் – அமைச்சர் றிஷாத்

இலங்கைக்கான கஸகஸ்தான் தூதுவர் புல்லட் சார்சென்பயர் (Bulat Sarsenbayer) கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனை அமைச்சின் அலுவலகத்தில் நேற்று (04/07/2016) சந்தித்து இரு நாடுகளின் பொருளாதார வர்த்தக உறவுகள் தொடர்பில் பேச்சு நடத்தினார். அடுத்த வருடம் 2017 இல் கஸகஸ்தானில் நடைபெறவுள்ள எக்ஸ்போ காண்காட்சிக்கான அழைப்பை அமைச்சர் றிசாத்திடம் அவர் விடுத்தார்.

Read More

எட்டாக்கனியாகிப் போன நுரைச்சோலை வீடுகளும்; வயிற்றில் பால் வார்க்கும் அமைச்சர் றிஷாதின் அறிவிப்பும்

-சுஐப் எம்.காசிம், அஷ்ரப் ஏ சமத் – “நுரைச்சோலை” – நமக்கு உடன் ஞாபகத்துக்கு வருவது புத்தளம் அனல்மின் நிலையமே. இற்றைக்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை மக்களின் பேசுபொருளாக அம்பாறையில் அமைந்துள்ள நுரைச்சோலை இருந்தது. 200௪பூ டிசம்பர் 25 ஆம் திகதி இலங்கையை உலுக்கிய சுனாமிப் பேரழிவு பல்லாயிரக்கணக்கான உயிர்களையும், பல பில்லியன் பெறுமதியான சொத்துக்களையும், வீடுகளையும் அழித்தது. “சுனாமி” எனும் கடற்பேரலை அம்பாறைக் கரையோரப் பிரதேசங்களிலும் தனது மூர்க்கத்தனத்தைக் காட்டியது. கொடூரமான இந்த…

Read More

கூட்டுறவுத்துறையைப் பொறுப்பேற்ற பின்னர் வீண்விரயம் இடம்பெறவில்லை – அமைச்சர் றிஷாத்

-சுஐப் எம்.காசிம்   – கூட்டுறவுத்துறையை நான் பொறுப்பேற்ற பின்னர் அந்தத் துறை வளர்ச்சிப்  பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது. ஒரு சதமேனும் வீண்விரயமாக செலவழிக்கவுமில்லை. செலவழிப்பதற்கு அனுமதி வழங்கவுமில்லை இவ்வாறு கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு, தாமரைத் தடாகக் கலையரங்கில் 94 வது சர்வதேச கூட்டுறவுதின விழா இன்று (02/07/2016) நடைபெற்றபோது, சிறப்பு விருந்தினராக அவர் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அதிதிகளாக பிரதி அமைச்சர் சம்பிக்க…

Read More

பிரார்த்தனையினாலும், ஒற்றுமையினாலுமே நமது சமூகத்தைப் பாதுகாக்க முடியும்

-சுஐப் எம்.காசிம் – முஸ்லிம்களைப் பரம வைரிகளாகக் கருதி படைத்த அல்லாஹ்வையும், பெருமானாரையும், இஸ்லாத்தையும் தொடர்ந்து நிந்தித்து வரும் ஞானசார தேரர் மீது, உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்துவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று மாலை (01) கிண்ணியாவில் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில், கிண்ணியா மத்திய கல்லூரி வளாகத்தில் இன்று இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார். கடந்த சில வருடங்களாக…

Read More

புத்தெழுச்சி பெறத்துடிக்கும் பெரியமடுக் கிராமம்

– சுஐப் எம்.காசிம் – பருவ மழை குறைந்த காலங்களில் விடத்தல்தீவு விவசாயம் பாதிக்கப்படுவதுண்டு. அதனால் வயல்களுக்கு வேண்டிய நீரைத் தேக்கி வைக்கக் குளம் தேவைப்பட்டது. விடத்தல்தீவிலிருந்து எட்டு மைல்களுக்கு அப்பால் கிழக்கில் அமைந்த பெரியமடுக் குளம் தூர்ந்த நிலையில் காணப்பட்டது. இக்குளத்தைப் புனரமைத்துத் தேவையான நீரைப் பெற விடத்தல்தீவு விவசாயிகள் முயற்சித்தனர். அதன் பெறுபேறாக 1955ஆம் ஆண்டளவில் பெரியமடுக் குளம் புனரமைக்கப்பட்டது. குளத்தை அண்டி மக்களைக் குடியேற்ற அரசு தீர்மானித்தது. அதற்கமைய விவசாய முயற்சியில் ஆர்வமும்,…

Read More