Headlines

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த அமைச்சர் றிஷாத்

1990ம் ஆண்டு மன்னாரில் இருந்து, அகதிகளாக வெளியேறி, வெல்லம்பிட்டிய, புத்கமுவ பிரதேசத்தில் வாழ்ந்து வந்த மக்கள், மீண்டும் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, கொழும்பின் பல இடங்களிலும் தஞ்சமடைந்து இருக்கின்றனர். இவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான  றிஷாத் பதியுதீன் நேற்று (26/05/2016) புத்கமுவ பிரதேச பள்ளிவாசலில் சந்தித்து, அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

Read More

எதனை இழந்தாலும் கல்வியை இழக்க முடியாது – அமைச்சர் றிஷாத்

-சுஐப் எம்.காசிம் – “எதனை இழந்தாலும் நாம் கல்வியை இழக்க முடியாது. இழக்கவும் கூடாது. கல்விதான் எமது ஒரே ஒரு சொத்து” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். மல்வானையில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச்  சென்று,  (22.05.2016) அவர்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்கிய அமைச்சர், மல்வானையைத் தளமாகக் கொண்டு, மாணவர்களின் கல்விக்கு ஊக்கமளித்து வரும் கல்வி முன்னேற்றச் சங்கத்துக்கும் சென்றார். அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார்  750…

Read More

ජාති භේද නැති රිෂාද් අමාත්‍යතූමා විහාරස්ථානයේ අවතැන්ව සිටින ජනතාවට සහනාධාර බෙදා දෙයි

– නිලුපුලී – ගංවතූරෙන් පීඩාවට පත්ව කොටිකාවත්ත විමලාරාම සහ නාගරැක්ඛාරාම යන විහාරස්ථානයන්හී සහ කොලොන්නාව විද්‍යාවර්ධන මහා විද්‍යාලයේ රැදී සිටින අවතැන්වූ සිංහල දමිල සහ මුස්ලිමි ජනතාවගේ සුව දුක් විමසීම සඳහා ඊයේ එනමි (මැයි 24) දින එහි ගිය රිෂාඩි බදියුදීන් අමාත්‍යතූමා විසින් ඔවුන්ට වියලි ආහාර සහ අත්‍යාවශ්‍ය ද්‍රව්‍ය ඇතූලත් පාර්සල් ලබා දෙන ලදි. මෙම අවස්ථාව සඳහා පළාත්…

Read More

இன்னுமொரு பள்ளி அமைக்கப்பட்டால் முதன் முதலில் சீமெந்து வாங்கிக் கொடுப்பவன் நானே – வஜிர தேரர்

-சுஐப் எம்.காசிம் – கொலொன்னாவ பள்ளி சம்மேளனம் இன, மத வேறுபாடின்றி மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் இனவாதிகளுக்கும், மதவாதிகளுக்கும் பாரிய அடியாகும் என்று அபன்வள ஞானலோக ஹிமி, கொலொன்னாவ வஜிர ஹிமி ஆகியோர் இன்று தெரிவித்தனர். கொலொன்னாவ பள்ளி சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று (25/05/2016) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர்கள் கருத்து வெளியிட்டனர். பள்ளி சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் ஐ.வை.எம்.ஹனீப் தலைமையில் இடம்பெற்ற, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக், உலமாக் காங்கிரசின்…

Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் றிஷாத் நிவாரணப் பொருட்கள் வழங்கிவைப்பு

-ஊடகப் பிரிவு   – வெள்ளத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கொடிகஹவத்தை மக்கள் தங்கியிருக்கும் கொடிகஹவத்த விமலாராம விகாரை, நாகருக்காராமய விகாரை ஆகியவற்றுக்கும், கொலன்னாவை வித்யவர்தன மஹா வித்தியாலயத்தில் தங்கியிருக்கும் சிங்கள, தமிழ், முஸ்லிம் வெள்ள அகதிகளுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் நேற்று (24/05/2016) நிவாரணப் பொருட்களை வழங்கினார் அமைச்சருடன் மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்களான ஹுசைன் பைலா, ரியாஸ் சாலி ஆகியோரும் சென்றிருந்தனர்.

Read More

நள்ளிரவில் உடைந்த படகில் பயணித்து மல்வானை மக்களை றிஷாத் சந்திப்பு

-நாச்சியாதீவு பர்வீன்- பாதுகாப்பற்ற உடைந்த படகில் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மள்வானை காந்திவளவ மற்றும் ஆட்டா மாவத்தை மக்களை சந்தித்து அந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார் கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுத்தீன். கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலையினாலும்,தொடர்மழையினாலும் வெகுவாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மல்வானையும் அடங்கும் மல்வானையில் ரக்‌ஷபான,காந்திவளவ,ஆட்டா மாவத்தை,சக்கீனாபுர போன்ற பிரதேசங்கள் முற்றாக நீரினால் சூழப்பட்டிருந்தது.அதிலும் சக்கீனாபுர மற்றும் ஆட்டா மாவத்தை போன்ற பிரதேசங்கள் நூறு விகிதம் வெள்ளத்தினால் மூழ்கிய பிரதேசமாகும். இந்தப்பிரதேசத்திற்கு எந்த…

Read More

வெள்ள அகதிகளின் துன்பங்களை நேரில் கண்டறிந்து உடனுக்குடன் உதய அமைச்சர் றிஷாத்!

– ஏ.எஸ்.எம்.ஜாவித்   – கொலொன்னாவை, வெல்லம்பிட்டிய, புத்கமுவ போன்ற பிரதேசங்களில் வாழும் பாதிக்கப்பட்ட உலமாக்களுக்கும், மௌலவிமார்களுக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கொண்ட உதவிகளை, எமது வாழ்நாளில் நாம் ஒரு போதுமே மறக்க முடியாதென்று மெகொட கொலன்னாவ மௌலவி ரிழ்வான் தெரிவித்துள்ளார். இந்தப் பிரதேசத்தில் அமைந்திருந்த 27 பள்ளிவாசல்களில், 25 பள்ளிவாசல்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பல பள்ளிவாசல்கள் முழுமையாகவும், சில பள்ளிவாசல்கள் பகுதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதேபோன்று உலமாக்களின் குடும்பங்களும்…

Read More

மல்வானை விஜயம் வீடியோ

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று (23) இரவு மல்வானை பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்தார். மல்வானையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட காந்தியவலவ, ஆட்டாமாவத்த, ரக்‌ஷபான போன்ற பகுதிகளுக்கு சென்று அங்கு பாதிக்கப்பட்ட  மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளையும் அமைச்சர்  கேட்டறிந்தார். இந்த சத்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் சுபைர்தீன் ஹாஜி அவர்களும் அமைச்சர் றிஷாதுடன்  விஜயம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. Produce_0

Read More

அமைச்சர் றிஷாத் நன்றி தெரிவிப்பு!

-சுஐப் எம்.காசிம் – வெள்ளத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கொழும்பு பிரதேச,  குறிப்பாக வெல்லம்பிட்டிய, கொலொன்னாவை பிரதேச மக்களின் நிவாரணப் பணிகளையும், அவர்களின் இன்னோரன்ன தேவைகளையும் கவனித்து வரும், கொலொன்னாவை மஸ்ஜித் சம்மேளன நிர்வாகிகளுக்கு பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் சார்பிலும் நன்றி தெரிவிப்பதோடு, அவர்களுக்கு தொடர்ந்தும் பணிபுரியக் கூடிய சக்தியை இறைவன் வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் றிஷாத் நேற்று (23/05/2016) தெரிவித்தார். இந்தப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 27 பள்ளிகளின் உலமாக்கள், நிர்வாகிகளுடனான கலந்துரையாடலின்போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்….

Read More

இந்த இழப்பை எவ்வாறு சீர் செய்யப் போகின்றோம்?

-சுஐப் எம்.காசிம் – மல்வானை பிரதேசத்தில் உள்ள மல்வானை, லக்சபான, விதானகொடை, தோட்டம், காந்தியாவள, பள்ளம் ஆகிய பிரதேசங்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று மாலை(22/05/2016) விஜயம் செய்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தாழ்நிலப் பிரதேசங்களையும் பார்வையிட்டார். அத்துடன் நிவாரணப் பணிகள், பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடினார். லக்சபான ஜும்மா பள்ளியில் இடம்பெற்ற நிவாரண ஒருங்கிணைப்புப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர், அங்கு குழுமியிருந்த ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களுடனும் கலந்துரையாடினார். “வெள்ளம் வரும்போது இந்தப் பிரதேசம்…

Read More

வெள்ள அனர்த்தம்: யாப்பா – றிஷாத் பேச்சு

இன்று காலை (22/05/2016) அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, தான் அவதானித்த மக்கள் படும் கஷ்டங்களை அமைச்சரிடம் விவரித்தார். பாதிக்கப்பட்ட முகாம்களில் மற்றும் வீடுகளில் தங்கியிருக்கும் அகதிகள் பலருக்கு முறையான நிவாரணங்கள் கிடைக்காமை தொடர்பிலும் அமைச்சர் யாப்பாவிடம் சுட்டிக்காட்டினார். பிரதேச செயலகங்கள் இந்த மக்களின் விடயங்களில் நேரடிக் கவனம் செலுத்தும் வகையில் உரிய அதிகாரிகளையும், அலுவலர்களையும் அந்த இடங்களுக்கு அனுப்பிவைத்து நிவாரணப் பணிகளை சீர்படுத்துமாறு வேண்டினார்….

Read More