Headlines

வவுனியா பொருளாதார மத்திய நிலையப் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

வவுனியா நகரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலைய நிர்மாணப் பணிகளை அடுத்த வாரம் ஆரம்பிக்க முடியுமென அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (16/06/2016) நம்பிக்கை வெளியிட்டார். வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் அதன்  இணைத்தலைவர்களான அமைச்சர் றிசாத் பதியுதீன், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்று முடிந்த பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கூறியதாவது, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்…

Read More

வவுனியா மாவட்ட ஒருங்கினைப்புக்குழு கூட்டம்

வவுனியா மாவட்ட ஒருங்கினைப்புக்குழு கூட்டம் இன்று (16) அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் மற்றும் குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன்  ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கூட்டம் அரச அதிபரின் புஸ்பகுமார நெறிப்படுத்தினார். மாவட்டத்தின் பல்வேறு குறைபாடுகள் தொடர்பில்  இந்தக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதுடன் சிலப்பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளும் காணப்பட்டன. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கு…

Read More

மௌலானாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது – அமைச்சர் றிஷாத்

மூத்த அரசியல்வாதியும், பிரபல தொழிற்சங்கத் தலைவருமான அலவி மௌலானாவின் மறைவு இலங்கை மக்களுக்கும், தொழிற்சங்க உலகிற்கும் பாரிய இழப்பாகும் என்று, அமைச்சர் றிசாத் பதியுதீன் அன்னாரின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஆரம்பகாலத்தில் சிறந்த தொழிற்சங்கவாதியாகவும், பின்னர் அரசியலில் பிரதி அமைச்சராகவும், கெபினட் அமைச்சராகவும் பணிபுரிந்த மர்ஹூம் மௌலானா தனது இறுதிக் காலப் பகுதியில் மேல்மாகாண ஆளுனராகவும்  பணிபுரிந்தவர். அவர் முஸ்லிமாக இருந்த போதும் சிங்கள, தமிழ் மக்களுடன் மிக நெருக்கமான உறவையும், நட்பையும்…

Read More

சோமவன்சவின் மறைவு நாட்டுக்கு பேரிழப்பாகும் – அமைச்சர் றிஷாத்

மக்கள் விடுதலை முன்னனியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் மறைவு இலங்கை வாழ் மக்களுக்கு பாரிய இழப்பாகுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச்செய்தியில் தெரிவித்துள்ளார். காலஞ் சென்ற அமரசிங்க இடது சாரி சிந்தனை கொண்டவர். இடது சாரிக் கொள்கையில் பற்றுறுதியுடன் வாழ்ந்து மக்கள் நலனுக்காக அரும்பாடு பட்டவர். இன நல்லுறவுக்காகவும் உழைத்தவர். இந்நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனத்தவர்கள் சமாதானமாகவும் சரி நிகராகவும் வாழ வேண்டுமென்பதற்காக அனைத்து…

Read More

றிஷாத் பதியுதீன் – சூடான் தூதுவர் சந்திப்பு

– ஊடகப் பிரிவு – இந்தியா புதுடில்லியை தளமாகக் கொண்டு செயற்படும் இலங்கைக்கான சூடான் தூதுவர் டாக்டர் ஹஸன் ஈ எல் தாலிப்பை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று (14) அமைச்சு அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் சூடான் – இலங்கை இடையிலான இரு தரப்பு வர்த்தகம், பொருளாதாரம், அபிவிருத்தி மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் முதலீடுகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.

Read More

தேசிய புத்தாக்கம் மற்றும் புலமைச் சொத்துக்கள் மாநாடு

– ஊடகப் பிரிவு – தேசிய மட்ட புத்தாக்கம் மற்றும் புலமைச் சொத்துக்கள் மாநாடு கொழும்பு ஜேய்க் ஹில்டன் ஹோட்டலில் இன்று இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் டி. எம் கே பி தென்னக்கோன் மற்றும் தேசிய மட்ட புத்தாக்க சபையின் பணிப்பாளர் நாயகமும் கலந்து கொண்டனர்.

Read More

அனைத்து மக்களதும் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதே அரசின் கொள்கை

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வாழும் வெவ்வேறு வகையான மக்கள் குழுவினர்கள் மீது வெவ்வேறு விதமாக கவனஞ் செலுத்தப்படுவதான ஒரு கருத்தினை ஒருசிலர் நாட்டு மக்கள் மத்தியில் கொண்டு சென்ற போதும் நாட்டின் அனைத்து மக்களுக்கும் செவிசாய்த்து அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதே தமது அரசின் கொள்கை ஆகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். நேற்று (12) பிற்பகல் வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுநீரக நோய்த் தடுப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே…

Read More

ஜனாதிபதியின் நிகழ்வில் அமைச்சர் றிஷாத்

சிறுநீரக நோய்த் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் “வவுனியா மாவட்டத்திற்கான சிறுநீரக நோய்த் தடுப்புக்கான தேசிய நிகழ்ச்சித்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் போகஹகஸ்வேவ பிரதேசத்தில் நேற்று (12) இடம்பெற்றது. இந் நிகழ்வில் கௌரவ அமைச்சர் றிஷாத் பதியூதீனும் பங்கேற்றிருந்தார்.

Read More

காய்க்கும் மரம்தான் கல்லடி படும்

– முயினுதீன் அசாருதீன் – “காய்க்கும் மரம்தான் கல்லடி படும்” இந்தக் கூற்று அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கே ரொம்பப் பொருத்தமானது. அரசியலில் அவர் மீது பொறாமையும், எரிச்சலும் கொண்ட சக்திகள் அவருக்கு தொடர்ந்து பிரச்சினைகளை கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். இல்லாத பொல்லாத பொய்களைக் கட்டிவிட்டு அவரை எப்படியாவது அரசியலில் இருந்து ஓரங்கட்டப் பார்க்கின்றனர். புலிகளால் துரத்தப்பட்ட வடக்கு முஸ்லிம்களை மீளக் குடியமர்த்தும் செயற்பாட்டில் அவர் ஈடுபட்ட போது, தமிழ்ப் பேரினவாதிகள் கொடுத்த கரைச்சல் எண்ணற்றவை. முசலி மக்கள் தமது…

Read More

ரவி கருணாநாயக்க மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்கம் கொண்டவை – அமைச்சர் றிஷாத்!

– சுஐப் எம்.காசிம்  – நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை வெறுமனே அரசியல் நோக்கம் கொண்டவைகளே என்றும், நாட்டை அகல பாதாளத்திலிருந்து மீட்டெடுத்து, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இணைந்து, அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை முடக்குவதே எதிர்த்தரப்பினரின் நோக்கம் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பில் பங்கேற்று, உரையாற்றிய…

Read More

பொலிசார் பக்கசார்பாக செயற்படுகின்றனர் – றிஷாத் சீற்றம்

தெஹிவளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் பொலிசார் பக்கசார்பாக நடந்து கொள்வதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளார். பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவர் இக்குற்றசாட்டை முன்வைத்தார் இவர் மேலும் குறிப்பிடுகையில் தெஹிவாளை பாத்தியா மாவத்தை பள்ளிவாசலை விஷ்தரிக்கும் உரிமை முஸ்லிம்களுக்கு உண்டு. அதனை பொலிசார் தடுக்க முடியாது. இனவாதிகளுக்கு சார்பாக பொலிசார் நடந்து கொள்கின்றனர். இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் சாலக ரத்நாயக்கவின் வீட்டுக்குச் சென்று நானும் இன்னும் சில அமைச்சர்களும் பாராளுமன்ற…

Read More

பொறுமையாக இருங்கள் – முஸ்லிம் பிரதிநிதிகள் வேண்டுகோள்

பாத்தியா பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் கொஞ்ச நாட்கள் அமைதி காக்குமாறு முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாத்தியா பள்ளிவாசலில் நேற்றிரவு (புதன்) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். நல்லாட்சியில் பாத்தியா பள்ளிவாசலுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு எதிராக முஸ்லிம் இளைஞர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க தயாரான நிலையிலேயே இவர்கள் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் பிரதமர், ஜனாதிபதி மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளையும் சந்தித்து சுமுகமான தீர்வைப் பெறுவதற்கு முயற்சித்து வருவதாகம்…

Read More