Headlines

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அமைச்சர் றிஷாத் விஜயம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அமைச்சர் றிஷாத் விஜயம். பாதிகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொலிஸ் மா அதிபருடன் பேச்சு -சுஐப் எம் காசிம் – உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சில தினங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்ற அமைச்சர் றிஷாத் பதியுதீன் தனது விஜயத்தை இரத்து செய்து விட்டு நேற்று (20) மாலை நாடு திரும்பினார். வெள்ளத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டி, வசட்டுவ, மீகொட கொலன்னாவ, வென்னவத்த, புத்கம, களனிபுர பிரதேசங்களுக்கும் அமைச்சர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட அகதிகளின்…

Read More

கொழும்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர் றிஷாத் விஜயம்

-சுஐப் எம்.காசிம் – பெருமழையினாலும், வெள்ளத்தினாலும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கொழும்பின் பல இடங்களுக்கு, அமைச்சர் றிசாத் பதியுதீன் சென்று பார்வையிட்டார். இந்தப் பிரதேசங்களில் அகப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மீட்பது தொடர்பில் அமைச்சர் கடற்படைத் தளபதியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதுடன் அவசரமாக படகுகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டினார். அமைச்சரின் கோரிக்கையை அடுத்து இன்று காலை (18/௦5/2016) இந்த வெள்ளத்தில் மூழ்கியுள்ள பிரதேசங்களுக்கு நான்கு படகுகள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் பல படகுகளை அங்கு…

Read More

அழிந்துவரும் விடத்தல்தீவை மீளக்கட்டியெழுப்புவது சாத்தியமா?

– சுஐப் எம்.காசிம்  – மன்னாருக்கு மணி மகுடம் என விளங்கும் பிரசித்தி பெற்ற கிராமம் விடத்தல்தீவு. இறையளித்த இயற்கை வளங்களான கடல்வளமும், நிலவளமும், நீர்வளமும் கொண்டது இக்கிராமம். எமது முன்னோர்களும் நாமும் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வந்த பதி இது. மன்னார் நகரில் இருந்து வடதிசையில் செல்லும் பூநகரிப்பாதையில் 15ஆவது மைலில் இந்தக் கிராமம் அமைந்துள்ளது. தேவையான அளவு வாழ்க்கை வளம் காணப்படுவதால் மக்கள் நலமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்தனர். கிராமத்தின் மேற்கு எல்லையில் ஆழமற்றதும், மீன்…

Read More

முஸ்லிம்களை ஏனையவர்களுடன் மோதவிட சமூக வலைத்தளங்கள் முயற்சி – அமைச்சர் றிஷாத்

-சுஜப் எம். காசிம் – மன்னர் ஆட்சி தொடக்கம் இன்றைய ஆட்சிவரை இலங்கை வாழ் முஸ்லிம்கள் சமூக இணக்கத்துடனும் நடுநிலைமை பேணும் தன்மையுடனும் வாழ்ந்துவருகின்றபோதும் அவர்களை மாற்றுஇனங்களுடன் மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கு சில சமூக வலைத்தளங்கள் திட்டமிட்டு செயலாற்றுவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் வேதனைதெரிவித்தார். புத்தளம் மதுரங்குளி அர்றஷீதிய்யா அரபுக்கல்லூரி பட்டமளிப்புவிழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது, முஸ்லிம்கள் என்றுமே ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளித்து வாழ்ந்துவருபவர்கள் அரசியல் பணிகளிலும் அவர்கள் தமது தனித்துவத்தை பேணிவருவதுடன்…

Read More

மக்களுக்கு அவசர நிவாரணம்! றிஷாத்தின் கோரிக்கையை ஏற்று யாப்பா உடன் நடவடிக்கை

– சுஐப் எம்.காசிம் – வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு, வடமேல் மாகாண மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்குமாறு கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், அமைச்சர் அனுரபிரியதர்ஸன யாப்பாவிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து, குறிப்பிட்ட மாகாணங்களில் அமைந்துள்ள, அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் அனுர பிரியதர்ஸன யாப்பா அவசர பணிப்புரை விடுத்துள்ளார். இன்று (16/05/2016) காலை அமைச்சர் அனுர பிரியதர்ஸன யாப்பாவுடன் தொடர்புகொண்ட அமைச்சர் றிசாத் பதியுதீன்,…

Read More

அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார். இந்நிகழ்வில், புத்தளம் மாவட்ட பா. உ நவவி, திருகோணமலை மாவட்ட பா.உ அப்துல்லா மஹ்ரூப், ஜம்மியதுல் உலமாத் தலைவர் ரிஸ்வி முப்தி, வட மேல் மாகாண சபை உறுப்பினர் தாஹிர், வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஹியா, ஜாமிய்யா நளீமிய்யா பணிப்பாளர் சபை உறுப்பினரும், விரிவுரையாளருமான Dr. ஏ.சி.அகார் முஹம்மது, மற்றும் காஸிமிய்யா அரபுக்கல்லூரியின்…

Read More

இணையத்தளங்களில் வெளிவந்த செய்தி என்னைப் பழிவாங்கும் நோக்குடையது –  றிப்கான் பதியுதீன்

தலைமன்னாரில் அமைந்துள்ள காணி ஒன்றை போலியான உறுதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி, தான் விற்பனை செய்ததாக இணையத்தளங்களில் வெளியான செய்தியை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் முற்றாக மறுத்துள்ளார். தன்மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்டோர்களால், இந்த விடயம் வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளதாகவும், இது ஒரு அபாண்டமான குற்றச்சாட்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் இது தொடர்பில் கூறியதாவது, எவரோ ஒருவர் வேண்டுமென்று என்மீது கொடுத்த முறைப்பாட்டை ஆழ அகல விசாரிக்காமல், என்னைக் குற்றவாளியாக இனங்காட்ட சில பத்திரிகைகளும், இணையத்தளங்களும்…

Read More

மீள் குடியேறிய மக்களின் துயர்களைத் துடைத்து வரும் அமைச்சர் றிஷாத்

– சுஐப் எம் காசிம் – ”நீரின்றி அமையாதுலகு” என்பது அர்த்தமுள்ள ஆன்றோர் வாக்கு. உலகில் வாழும் உயிரினங்கள், தாவரங்கள் அனைத்தும் உயிர் வாழ நீர் இன்றி அமையாதது. வாழ்வின் ஜீவ நாடி நீர். உலகில் வாழும் மக்களின் பல்வேறு நடவடிக்கைகளினால் நீர் மாசடைந்து வருகின்றது. சுத்தமற்ற நீரை குடிக்கவும், குளிக்கவும் சமைக்கவும் உபயோகிக்க முடியாது. நோய்களால் பீடிக்கப்படுவர் மக்கள். எனவே ஏழை முதல் செல்வன் வரை குழந்தை முதல் முதியோன் வரை அனைவரும் அருந்தும் நீரும்…

Read More

கழிவுகளை புத்தளத்தில் கொட்டும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும்- அமைச்சர் றிஷாத்

கொழும்பு நகர்ப் பிரதேசத்தில் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளை புத்தளத்திற்கு கொண்டு சென்று அங்கு கொட்டப்படுவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை நிறுத்துமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, காலாகாலமாக இந்தக் குப்பைகள் கொழும்பின் மீத்தொட்டமுல்ல பிரதேசத்தில் கொட்டப்பட்டு வருவதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளை நாம் கண் கூடாக காண்கின்றோம். மீத்தோட்டமுல்ல பிரதேசத்தில் இந்தக் குப்பைகள் கொட்டப்படுவதால் அந்தப்பிரதேச மக்கள் படுகின்ற அசௌகரியங்களும் அவஸ்தைகளும் சொல்ல முடியாதவை. அதற்கு மாற்றுத்தீர்வு ஒன்று…

Read More

மலேசிய சர்வதேச பங்கோர் டயலொக் மாநாட்டுக்கு அமைச்சர் றிசாத்துக்கு அழைப்பு!

மனித சமுதாயத்தில் எதிர்நோக்கப்படும் சிக்கல்களுக்கும்,  பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்து அவற்றை எவ்வாறு தீர்ப்பது? என்பது தொடர்பிலும், நிலைபேறான அபிவிருத்தி சம்பந்தமாகவும், மலேசியாவில் எதிர்வரும் செப்டம்பர் 05 – 07 வரை நடைபெறவுள்ள, பங்கோர் டயலொக் (Pangkor Dialogue) சர்வதேச மாநாட்டில், பிரதம விருந்தினராகப் பங்கேற்குமாறு கோரி, மலேசிய ஏற்பாட்டாளர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீனை சந்தித்து அழைப்பு விடுத்தனர். கைத்தொழில் வர்த்தக அமைச்சில் இன்று (11/05/2016) இடம்பெற்ற இந்த சந்திப்பில்,…

Read More

றிஷாத்தைப்போன்று எவரும் பணியாற்றியதில்லை – சட்டத்தரணி மில்ஹான்

மன்னார் மாவட்டத்தின் அரசியல் வரலாற்றிலே அமைச்சர் றிசாத் பதியுதீனைப் போன்று, எந்த ஓர் அரசியல்வாதியும் பணியாற்றியது இல்லை என்று தேசிய வடிவமைப்பு நிறுவனத் தலைவர், சட்டத்தரணி மில்ஹான் தெரிவித்தார். மன்னார், அளக்கட்டு மாதிரிக் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலேயே சட்டத்தரணி மில்ஹான் இவ்வாறு குறிப்பிட்டார். மன்னாரில் கடந்த காலங்களில் எத்தனையோ அரசியல்வாதிகள் பாராளுமன்ற உறுப்பினர்களாக பணியாற்றி இருக்கின்றனர். அவர்கள் மக்கள் பணியாற்றியுள்ள போதும், அமைச்சர் றிசாத் பதியுதீனைப் போன்று செயற்பட்டதில்லை. அமைச்சர் றிசாத் ஒரு சாணக்கியமிக்கத் தலைவர். மக்களோடு…

Read More