Headlines

மஹிந்த ரெஜிமன்ட் முஸ்லிம்களை தாக்குகிறார்கள்

– அஸ்ரப் ஏ சமத் – பாராளுமன்றத்தில் ஊடக அமைச்சிற்கான வரவு செலவுத்திட்ட விவாத்தின்போது பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்க உரையாற்றும்போது பாராளுமன்றத்தில் முஜிபுர் ரஹ்மானுக்கு எதிராக சில ராஜபக்ச ரெஜிமன்ட் உறுப்பினர்கள் தாக்குவதற்கு வந்துள்ளனா். கடந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் தான் பாராளுமன்றதுக்கு வெளியில் வைத்து முஸ்லீம்களை எல்லாம் அடித்தீா்கள். அதற்கு நாம் முற்றுப்புள்ளி வைத்த பிறகு தற்பொழுது அந்த சண்டித் தணத்தை பாராளுமன்றத்திற்குள் கொண்டு வந்து முஸ்லீம் எம்.பிக்கு அடிக்க வருகின்றீா்கள். இதனை நாம்…

Read More

ஐ.நாவின் அனைத்துலக பிரகடனத்தில் இலங்கை கையெழுத்திட தீர்மானம்

பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்படுவதில் இருந்து அனைத்துக் குடிமக்களையும் பாதுகாப்பது தொடர்பான ஐ.நாவின் அனைத்துலக பிரகடனத்தில் இலங்கையும் கையெழுத்திடவுள்ளது. இந்த முக்கியமான பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு,  அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திடுவார். பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்படுதலை ஒரு மனித உரிமை மீறலாக இந்தப் பிரகடனம் வரையறுப்பதுடன், இதனை ஒரு குற்றவியல் நடவடிக்கையாக கருதும் வகையில் சட்டங்களை வகுக்கவும் உறுப்பு நாடுகளை வலியுறுத்துகிறது….

Read More

செலவைக் குறைத்ததால் 1400 மில்லியன் எஞ்சியது

2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெளிவூட்டினார். அங்கு அவர் தெரிவித்ததாவது; 2014 ஆம் ஆண்டு வைபவங்கள் மற்றும் கூட்டங்களுக்காக 335 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு 34 மில்லியனே ஜனாதிபதி செயலகத்தின் செலவாகும். 301 மில்லியன் குறைவடைந்துள்ளது. மரணங்களின் போது அனுதாபம் தெரிவிப்பதற்காக 2014 ஆம் ஆண்டு 15 மில்லியன் செலவிடப்பட்டுள்ள அதேவேளை, 2015 ஆம் ஆண்டு 3…

Read More

மலேசிய வர்த்தக தூதுக்குழுவுடனான சந்திப்பு

– முனவ்வர் காதர் – மலேசிய வர்த்தக தூதுக்குழுவுடனான சந்திப்பு நேற்று (03) பகல் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் இடம்பெற்றது. இதில் வடக்கில் சுமார் 20000 க்கு மேற்பட்ட தொழில்வாய்ப்பையும் ஏற்படுத்தவேண்டிய தேவையுள்ளதால் வடக்கில் தொழில்பேட்டைகளை அமைக்க எனது அமைச்சினால் உங்களுக்கு பூரண ஆதரவை வழங்க முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார். ஐனாதிபதி மற்றும் பிரதமரின் இலக்கு நாடுபூராகவும் சுமார் 44000 க்கு மேற்பட்ட தொழில்பேட்டைகளை அமைக்கவுள்ளனர். ஆகவே, முதலீட்டாளர்களை முதலீடு செய்ய ஊக்குவிக்குமாறு அமைச்சர் வருகை…

Read More

இலங்கை அதிக வருமானம் பெறும் நாடாக மாறிவிடும்: ரணில்

பொருளாதார வளர்ச்சியை 9 வீதமாக ஆக்குவது கடினமான பணி. எனினும், அது சாத்தியமற்றது அல்ல என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பு பங்குச் சந்தையின் 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், அதனை நிறைவு செய்ய வேண்டும். அதற்கு காரணம் 2030ஆம் ஆண்டளவில் இலங்கை அதிக வருமானம் பெறும் நாடாக மாறிவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, அடுத்த வருடம் பொருளாதார வளர்ச்சியை 6.5…

Read More

நல்லாட்சி அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத்திட்டம் இன்று சமர்ப்பிப்பு

2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட முன்மொழிவு இன்று பிற்பகல் 2 மணியளவில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு நாளை ஆரம்பமாகவுள்ளதோடு, வாசிப்பு மீதான விவாதம் 9 நாட்கள் நடைபெறவுள்ளது. வரவு – செலவுத்திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு தொடர்பான வாக்கெடுப்பு டிசம்பர் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதேவேளை வரவு – செலவுத்திட்டம் மீதான மூன்றாம் கட்ட வாசிப்பு எதிர்வரும் டிசம்பர் 3ஆம்…

Read More

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்ப சந்தர்ப்பம்

நாடாளும்னற உறுப்பினர்கள் பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்ப சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் காலங்களில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரிடம் நேரடியாக கேள்விகளை எழுப்ப முடியும் என தெரிவிக்கப்படுகிறது. இதன்படி பிரதி வியாழக்கிழமை தோறும் நாடாளுமன்ற அமர்வுகள் ஆம்பமாகி முதல் அரை மணித்தியாலயம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழக்கூடிய எந்தவொரு கேள்வியையும் பிரதமரிடம் கேட்க முடியும். முன்னதாக இந்தக் கேள்விகளை பிரதமர் அலுவலகத்திற்கு…

Read More

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் (வீடியோ இணைப்பு)

– A.R.A.பரீல் – நாட்டில் பயங்­க­ர­வாதம் மீண்டும் தலை­தூக்­காது நாட்­டையும் நாட்டு மக்­க­ளையும் பாது­காப்­பதே ஆட்­சி­யாளர்களின் கட­மை­யாக இருக்க வேண்டும். ஆனால், இலங்­கையில் மீண்டும் தீவி­ர­வா­தி­களின் ஆதிக்­கத்­துக்கு இட­ம­ளிக்­கப்­பட்டு வரு­கி­றது. அதனால், நாட்டின் தேசிய பாது­காப்­பினை உறுதி செய்து பிரச்­சி­னை­களைத் தீர்க்­காதுவிடின் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என பொது­ப­ல­சேனா அமைப்பு கோரிக்கை விடுத்­துள்­ளது. கிரு­லப்­ப­னை­யி­லுள்ள பொது­ப­ல­சேனா அமைப்பின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் நேற்று நண்­பகல் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட…

Read More

புத்திஜீவிகள் குழுக்களை அமைப்பதற்கு தீர்மானம்

ஐ.நா.தீர்மானத்துக்கு அமைய பொறுப்பு கூறல் மற்றும் உண்­மையை கண்­ட­றியும் பொறி­முறையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது குறித்து கருத்­துக்­களை கேட்­ட­றிந்து கொள்­வ­தற்­கான புத்­தி­ஜீ­விகள் குழுக்­களை அமைப்­ப­தற்கு சர்­வ­கட்சி தலை­வர்கள் கூட்டத்தில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 30 ஆவது கூட்­டத்­தொ­டரில் மேற்­கொள்­ளப்­பட்ட இலங்கை தொடர்­பி­லான தீர்­மானம் நாட்டின் இறை­யாண்­மைக்கு உட்­பட்டே நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­மென ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சுட்­டிக்­காட்­டினார். நாட்டின் கௌரவம் பாது­காக்­கப்­படும் வகையில் ஐ.நா. பரிந்­து­ரைகள் தொடர்­பி­லான தீர்­மா­னங்கள் எடுக்­கப்­ப­டு­மெ­னவும் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார். ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள்…

Read More

புலம்பெயர்ந்தோரின் ஒத்துழைப்பு தேவை

இன­வாதம், மத­வாதம் உள்­ளிட்ட நாட்டில் காணப்­பட்ட பல தரப்­பட்ட பிரச்­சி­னை­களின் கார­ண­மாக நாட்டை விட்டு புலம்­பெ­யர்ந்த தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்­க­ள­வர்கள் அனை­வரும் மீளவும் நாட்­டிற்கு வருகை தர­வேண்டும். மேலும், புலம்­பெ­யர்ந்­த­வர்கள் அனை­வரும் இலங்­கையின் புதிய மாற்றம் நோக்­கிய பய­ணித்­திற்கு பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்­க­வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அழைப்பு விடுத்தார். ஜன­வரி 8 ஆம் திகதி பின்னர் புதிய அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்டுவரும் முழு பாரா­ளு­மன்­றத்­தையும் அர­சாங்­க­மாக மாற்­று­வது உள்­ளிட்ட அனைத்து நல்­லாட்சி வேலைத்­திட்­டங்­க­ளுக்கும் ஐக்­கிய நாடு­களின்…

Read More

சோபிததேரரின் அபிலாஷைகளை நிறைவேற்றுவேன் : பிரதமர்

சங்கைக்குரிய அமரர் மாதுலுவாவே சோபித தேரரின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். மறைந்த சங்கைக்குரிய மாதுலுவாவே சோபிததேரரின் இறுதி நிகழ்வுகள் நேற்று (வியாழக்கிழமை) இலங்கை நாடாளுமன்றத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இரங்கள் உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், “இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சாதாரண பிரஜை ஒருவருக்காக அரச மரியாதையுடன் கூடிய இறுதிக் கிரியைகள் நடத்தப்படுகின்றது. சோபிததேரர் ஏதேனும் ஓர்…

Read More