Headlines

தலைப்­பிறை பார்க்­கும் மாநா­டு

ஹிஜ்ரி – 1437 புனித ஷவ்வால் மாதத்தின் தலைப்­பிறை பற்றி தீர்­மா­னிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் நாளை 5 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை மாலை மஃரிப் தொழு­கையின் பின்பு இடம்­பெ­ற­வுள்­ளது. அன்­றைய தினம் மாலை மஃரிப் தொழுகை நேர­மா­கிய மாலை 6.31 மணி­முதல் புனித ஷவ்வால் மாதத்தின் தலைப்­பி­றையைப் பார்க்­கு­மாறும் பிறையைக் கண்­ட­வர்கள் தகுந்த ஆதா­ரங்­க­ளுடன் நேரிலோ அல்­லது கீழ்க்­காணும் தொலை­பேசி இலக்­கங்­களில் ஏதா­வது ஒன்றின் ஊடாக அறி­யத்­த­ரு­மாறும் சகல முஸ்­லிம்­க­ளையும் கொழும்பு பெரி­ய­பள்­ளி­வாசல் கேட்டுக்…

Read More

பெருநாளுக்கு அடுத்த தினங்கள் பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்குக

அரசு, எதிர்­வரும் ஜூலை மாதம் 6 ஆம் திக­தியை நோன்புப் பெருநாள் விடு­முறை தின­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளதால் முஸ்லிம் மாண­வர்கள் மற்றும் ஆசி­ரி­யர்­களின் நலன்­க­ருதி பெருநாள் தினத்­தை­ய­டுத்த தினங்­க­ளான 7 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை 8 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை ஆகிய இரு தினங்­க­ளையும் முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கு விடு­முறை தினங்­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தும்­படி முஸ்லிம் சமய மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வ­சத்­திடம் கோரிக்கை விடுத்­துள்ளார். கல்வி அமைச்­ச­ருக்கு இது…

Read More

80 களில் ஒரு சஹர் (Poem)

-நிஷவ்ஸ் – பைவ் ட்ரம்ஸ் அலாம் பதற்றமாய் அடிக்கும். உம்மாதான் எழும்பனும் உள்ளுக்குள் ஆறுதல். படுத்த பாய் எடுத்து பக்குவமாய்ச் சுற்றி விட்டு வெளியே தொங்கும் வெள்ளை டியூப் லைட்டை மெல்லப் போட்டு விட்டு மெதுவாகக் கிணற்றில் அள்ளும் நீர் சத்தம் அடுத்துக் கேட்கும். திலாந்தின் ஓசைகள் திரும்பத் திரும்ப கலந்து காற்றில் காதுகளில் விழும். ராத்தா அடுத்தெழுந்து ராவு ஆக்கிய கறி எடுத்து அடுப்பில் வைத்து அடியில் கொள்ளி போட்டு கொளுத்தும் ஓசை கூதலில் கலந்து…

Read More

ரவிகருணாநாயக்கவின் இப்தார் நிகழ்வு (Photo)

– அஷ்ரப் ஏ சமத் – நிதியமைச்சா் ரவி கருநாயக்க நேற்று (21ஆம் திகதி) கொழும்பு 10 மருதானை புக்கா் மண்டபத்தில் கொழும்பு வாழ் முஸ்லீம்களுக்கு  நோன்பு திறக்கும் வைபவத்தினை ஏற்பாடு செய்து அந் நிகழ்விலும் கலந்து கொண்டாா். இதில் கொழும்பு வாழ் 1000 பேர்  இராப்போசன வைபத்திலும் கலந்து சிறப்பித்தனா்.

Read More

ரமலான் மாதத்தில் உலகை உலுக்கிய 5 வரலாற்று நிகழ்வுகள்

1. பத்ர் போர்: இன்று நாம் முஸ்லிம்களாக வாழ்வதற்கு அன்று அம்முந்நூறு சஹாபாக்கள் தங்களின் உயிரையும் அல்லாஹ் உடைய பாதையில் தியாகம் செய்வதற்கு முன்வந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட எதிரிகளை வீழ்த்தி இஸ்லாம் என்றும் நிலைத்திருக்க வித்திட்ட அப்போரும் இப்புனிதமிகு ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 17 இல்தான். 2. மக்கா வெற்றி: குறைசிகளின் வசமிருந்த முஸ்லிம்களின் முதல் வணக்கஸ்தலமாகிய மஸ்ஜிதுல் ஹரம் ஷரீபை நமது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால்…

Read More

புனித றமழான் விசேட அறிவியல் போட்டி-2016

காத்தான்குடி அல்மனார் நிறுவனம் நடாத்தும் புனித றமழான் விசேட அறிவியல் போட்டிக்கான வினாக்கொத்துகள் விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்நிறுவனத்தின் செயலாளர் நாயகம் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனியின் வழிகாட்டலில் நடைபெறும் இச்செயற்றிட்டத்தின் மூலம் இப்புனித மாதத்தில் குர்ஆன், ஹதீதுகளுடன் தொடர்புபட்ட ஒரு சமூக குழாமொன்றை உருவாக்கி அதன் பலனை அவர்களது வாழ்க்கையிலும் கடைப்பிடித்து வாழும் உயரிய பணி இதனூடாக கட்டியெழுப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. நோன்பு காலங்களில் மார்க்க அறிவினை விருத்தி செய்யும் நந்நோக்கில் இவ்வினாக்கொத்து தற்போது வெளியாக்கப்பட்டுள்ளது….

Read More

ஒலிபெருக்­கிகள் மூலம் இடையூறு, ஏற்படுத்தும் முஸ்லிம்கள் – ACJU விடம் முறைப்பாடு

– ARA.Fareel- – நாட்டின் சில பகு­தி­களில் பள்­ளி­வா­சல்­களில் ரமழான் மாத சமய வழி­பா­டுகள் ஒலிபெருக்­கிகள் மூலம் அதி­க­ளவு சப்­தத்­துடன் நடாத்­தப்­ப­டு­வது குறித்து அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைக்கு முறைப்­பாடுகள் கிடைத்­துள்­ளன. பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அருகில் பல பௌத்த பன்­ச­லைகள் இருக்கும் பிர­தே­சங்­க­ளிலும் இரவு நேர ரமழான் வழி­பா­டுகள் இவ்­வாறு நடாத்­தப்­ப­டு­வது பிரச்­சி­னை­க­ளுக்கு வழி­கோ­லு­வ­தாக அமையும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை தெரி­வித்­துள்­ளது. பள்­ளி­வா­சல்­களின் ஒலி­பெ­ருக்­கி­களின் சப்தம் பள்­ளி­வா­சல்­க­ளுக்­குள்ளே மாத்­திரம் கேட்கும் வகையில் குறைத்துக் கொள்­ளப்­பட…

Read More

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில், நோன்பு பிடிக்கத் தடை

சீனாவில் சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் ஜின்ஜியாங் மாகாணத்தில் ரம்ஜான் நோன்புக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு சீனாவில் அமைந்துள்ள தன்னாட்சி பிரதேசம் ஜின்ஜியாங். இந்த பகுதியில் 10 மில்லியனுக்கு அதிகமான உய்குர் முஸ்லீம் சிறுபான்மையினர் வசிக்கிறார்கள். சீனாவில் ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி நாத்திக கொள்கைகளை பின்பற்றுவதால். இன்று முதல் சீனாவில் நோன்பு கடைப்பிடிக்கப்படும் நிலையில், ஜின்ஜியாங் மாகாணத்தில் ரம்ஜான் நோன்புக்கு கடைப்பிடிப்பதற்கு புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இது குறித்து அரசாங்கம் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்…

Read More

ரமளான் நோன்பின் மூலம் சான்று பகிரக் கூடிய சமூகமாக மாறுவோம்

– எம்.எல்.பைசால் (காஷிபி)- Qatar – உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் நாளை அல்லது நாளை மறுநாள் நோன்பினை நோற்கவுள்ளனர். இச்சந்தர்ப்பத்தினை தனிமனிதன் சென்ற ரமளானில் விட்ட தவறுகளை நிவர்த்திக்க எதிர் வரும் காலத்தினை பயன் படுத்த வேண்டும் என உறுதி கொண்டு நற்கிரியைகளுடன் தம்மை இணைத்து உளரீதியானதும், பௌதீக ரீதியானதுமான ஆயத்தங்களில் ஈடுபடுகின்றான். அதேவேளை சமூகத்திலுள்ள அமைப்புகளும், மஸ்ஜிதுகளும் ரமளானுக்கான செயற்பாடுகளில் அதிகம் கவனம் செலுத்துகின்றன. உறங்கு நிலையில் இருந்த மஸ்ஜித் நிருவாகங்கள் உச்சாகத்துடன் மஸ்ஜிதுகளை சுத்தப்படுத்துவது முதல்…

Read More

அரபு நாடுகளிலும், ஐரோப்பாவிலும் நாளை நோன்பு ஆரம்பம்

உலகின் பல்வேறு பகுதிகளில் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதையடுத்து நாளை திங்கட்கிழமை 6 ஆம் திகதி தொடக்கம் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகிறது. இந்த புனித ரமழான் மாதத்தில் நற்கருமங்களை அதிகமாக்கி, ஈருலகிலும் வெற்றிபெற அல்லாஹ் நமக்கு துணை நிற்கட்டும்..!

Read More

ரமழான் தலை பிறை மாநாடு 06 ஆம் திகதி

ஹிஜ்ரி 1437, ரமழான் மாதத்தின் தலைப்­பிறை பற்றி தீர்­மா­னிக்கும் நாள் எதிர்­வரும் 6 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை மாலை செவ்வாய் இர­வாகும். எனவே அன்­றைய தினம் மாலை மஃரிப் தொழுகை நேர­மான 6.24 மணி­முதல் ரமழான் மாதத்தின் தலைப்­பி­றையைப் பார்க்­கு­மாறு கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் அனைத்து முஸ்­லிம்­க­ளையும் வேண்­டி­யுள்­ளது. பிறை கண்­ட­வர்கள் தகுந்த ஆதா­ரத்­துடன் நேரில் அல்­லது இங்கு குறிப்­பி­டப்­பட்­டுள்ள தொலை­பேசி இலக்­கங்கள்: 011 5234044, 011 2432110, 077 7316415 ஒன்­றிற்கு அறியத் தரு­மாறும் தெரி­வித்­துள்­ளது….

Read More

200 மெற்றிக் தொன் பேரீத்தம் இலங்கைக்கு இலவசமாக வழங்கிவைப்பு

– ஏ.எஸ்.எம்.ஜாவித் – இவ்வருட புனித ரமழானை முன்னிட்டு சவுதி அரேபிய அரசாங்கம் வழமைபோல் இலங்கையில் உள்ள நோன்பாளிகளுக்கு வழங்கவென சுமார் 200 மெற்றிக் தொன் பேரீத்தம் பழங்களை சவுதி அரேபியாவின் சல்மான் மனிதநேய மற்றும் மீட்சி நிலையத்தின் மூலம் இலவசமாக வழங்கியுள்ளது. மேற்படிப் பேரீத்தம் பழங்களை உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தலைமையில் அவரது காரியாலயத்தில் இன்று (11) இடம் பெற்றது. பேரீத்தம் பழங்களை…

Read More