Headlines

வரவு செலவுத் திட்டத்துடனேயே வற் வரி அதிகரிப்பு யோசனை சமர்ப்பிப்பு!

வரவு செலவுத் திட்டத்துடனேயே வற் வரி அதிகரிப்பு குறித்த யோசனை சமர்ப்பிக்கப்படவுள்ளது. வற் வரி அதிகரிப்பு குறித்த யோசனை, எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்டத்துடன் சமர்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 11 வீதமாகக் காணப்படும் வற் வரியை 15 வீதமாக உயர்த்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.எனினும், உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கத்தின் அடிப்படையில் அரசாங்கம் குறித்த சட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டது. அமைச்சரவையின் அனுமதியின்றி சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது. இதனைத் தொடர்ந்து புதிய வற்…

Read More

2017 ஆம் ஆண்டிக்கான வரவு செலவுத்திட்டம்

2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். குறித்த திட்டத்தின் மீதான விவாதம் டிசெம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

Read More

இன்னும் இரண்டு மாதங்களில் மினி பட்ஜெட்

நடப்பாண்டு வரவு செலவுத்திட்டத்தில் திருத்தம் செய்து மினி பட்ஜெட் இன்னும் இரண்டு மாதங்களில் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அரசாங்கத்தினால் எந்தநேரமும் சலுகைகளை வழங்க முடியாது. சலுகை வழங்குவது மாத்திரமே அரசாங்கத்தி வேலை கிடையாது. சர்வதேச நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள தருவாயில் பல்வேறுபட்ட திருத்தம் செய்யவுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Read More

செலவைக் குறைத்ததால் 1400 மில்லியன் எஞ்சியது

2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெளிவூட்டினார். அங்கு அவர் தெரிவித்ததாவது; 2014 ஆம் ஆண்டு வைபவங்கள் மற்றும் கூட்டங்களுக்காக 335 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு 34 மில்லியனே ஜனாதிபதி செயலகத்தின் செலவாகும். 301 மில்லியன் குறைவடைந்துள்ளது. மரணங்களின் போது அனுதாபம் தெரிவிப்பதற்காக 2014 ஆம் ஆண்டு 15 மில்லியன் செலவிடப்பட்டுள்ள அதேவேளை, 2015 ஆம் ஆண்டு 3…

Read More

மஹிந்த எங்கே? ஏன் வர­வில்லை : சபையில் சிரிப்­பொலி

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எங்கே? ஏன் அவர் வரவு செலவுத் திட்ட விவா­தத்தில் கலந்து கொள்­ள­வில்லை என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளின் பண்­டார ஜய­மகே நேற்று பாரா­ளு­மன்­றத்தில் மஹிந்த அணியைப் பார்த்து கேள்­வி­யெ­ழுப்­பினார். நளின் பண்­டார எம்.பி. இவ்­வாறு கேள்­வி­யெ­ழுப்­பி­ய­தை­ய­டுத்து ஆளும்­கட்­சி­யினர் ஊ சத்தம் எழுப்பி மேசையில் தட்­டினர். இதே­வேளை மஹிந்த ஆத­ரவு அணி­யி­னரும் கூச்­ச­லிட்­டனர். அத்­துடன் பலத்த சிரிப்பொலியும் எழுந்­தி­ருந்­தது. வரவு–செலவுத்…

Read More

ஆதரவளித்த அனைவருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

வரவு செலவுத் திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்­கெ­டுப்பில் ஆத­ர­வாக வாக்­க­ளித்த அனை­வ­ருக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நன்­றி­களைத் தெரி­வித்­துள்ளார். 2016ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முத­லா­வது வாக்­கெ­டுப்பு நேற்று பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்­றது. இதன்­போது வர­வு­செ­லவு திட்­டத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த அனைத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கும் ஜனா­தி­பதி நன்றி தெரி­வித்­துள்­ள­தாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  2016 ஆம் ஆண்டிற்கான  வரவு செலவுத் திட்டத்தின் 2 ஆவது வாசிப்பு…

Read More

16 தொழிற்சங்கங்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

அரச மருத்துவ சங்கம் உட்பட 16 தொழிற்சங்கங்கள் நாளை காலை 8 மணி முதல் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ள உள்ளன. வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகவே இந்த பணிப் பகிஷ்பரிப்பை மேற்கொள்ள உள்ளனர்.

Read More

தீர்வையற்ற வாகன அனுமதி இரத்துக்கு மாற்றுத் தீர்வு

வரவுசெலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரச பணியாளர்களுக்கான தீர்வையற்ற வாகன அனுமதி பத்திர ரத்துவிடயத்துக்கு மாற்றுத் தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த தீர்வையற்ற வாகன அனுமதிக்காக நிதியை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கான யோசனையை முன்வைத்துள்ளனர். இதேவேளை நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, வைத்தியர்களுக்கு குறித்த அனுமதி பத்திரம் கிடைக்கும் போது பெரும்பாலானோர் அதனை சுமார் 1 மில்லியன் ரூபாய்களுக்கு விற்பனை செய்கின்றனர். எனவே அந்த ஒரு மில்லியன் நிதியை…

Read More

மக்களுக்கு நன்மை பயக்கும் வரவு செலவுத்திட்டம்: சுவாமிநாதன்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கான நிதி எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். வரவு செலவுத்திட்டத்தில் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். மக்களுக்கு நெருக்கமான சிறந்த வரவு செலவுத்திட்டமொன்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன்…

Read More

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக கொழும்பு டொரிங்டன் பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5.00 மணியளவில் நடைபெறவுள்ளது. 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சரினால் கடந்த நவம்பர் மாதம் 20ம் திகதி நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் 21ம் திகதி முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்கள் கடந்த ஒன்பது நாட்கள் காலை 9.30 முதல் மாலை 6.30 வரையில் நடைபெற்று வருகின்றது. வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான விவாதங்கள் நாளை ஆரம்பமாகவுள்ளது. இந்த…

Read More

தனியார் துறைக்கும் ஓய்வூதியம்: ஹர்ஷ டி சில்வா

அரச ஊழியர்களை போன்றே தனியார் ஊழியர்களுக்கும் ஓய்வூதியத்தை வழங்கும் நடைமுறையொன்றை மிக விரைவில் தயாரிக்கவுள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் நேற்று கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பொருளாதாரத்திற்கு இயந்திரமாக செயற்படுகின்றவர்கள் மக்கள் எனவும், சமூக, வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியில் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Read More