Headlines

மஹிந்தவிற்கு தேரர்கள் படை பாதுகாப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு 100 தேரர்களை இணைத்து பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக முறுத்துட்டுவாவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். நேற்று (6) கொழும்பில் இடம்பெற்ற தேரர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் அதனை தெரிவித்துள்ளார்.

Read More

பொது எதி­ர­ணியின் மேதின கூட்டம் நார­ஹேன்­பிட்­டியில்

உழைக்கும் மக்­களின் உரி­மை­களை வலி­யு­றுத்­தியும் , நாட்­டிற்கு ஜன­நா­யக ஆட்­சியை கோரியும் கூட்டு எதிர் க்கட்­சியின் மே தின கூட்டம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் தலை­மையில் நார­ஹேன்­பிட்­டியில் நடை­பெறும். ஜன­நா­ய­கத்தை நேசிக்கும் அனை­வரும் கூட்டு எதிர் கட்­சியின் மே தின கூட்­டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்தார்.

Read More

‘நான் தனியாகச் செய்யவில்லை’

‘அன்று அரசாங்கம் செய்தவற்றுக்கு இந்த அரசாங்கம், எதிர்க்கட்சியைக் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றது. இவை எல்லாவற்றையும் நான் தனியாகச் செய்யவில்லை. அவற்றை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனவும் அங்கம் வகித்த அமைச்சரவையும் சேர்ந்தே செய்தது’ என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எம்பிலிப்பிட்டியலில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தப் பொறுப்புகளிலிருந்து தப்பிச்செல்ல முடியாது. மக்களை ஏமாற்றுவதற்காக, எதிர்க்கட்சியின் மீது குற்றஞ்சாட்டவும் கூடாது’…

Read More

எனது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது; மஹிந்த

தான் ஆட்சிக்கு வரும்போது நாடு உணவு நெருக்கடி, சுனாமி பேரழிவு, எண்ணெய் நெருக்கடி மற்றும் பயங்கரவாத நெருக்கடி ஆகியவற்றிற்கு முகங்கொடுத்திருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். நேற்று (17) கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் மக்கள் பேரணியின் போது அவர் இதனைக் கூறியுள்ளார். அவ்வாறான ஒரு நிலையிலும் கூட, சர்வதேச நாடுகளில் தங்கி வாழ்வதை தவிர்த்து நாட்டை அரிசியில் அபிவிருத்தி செய்வதற்கு மற்றும் விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதற்கு முடிந்ததாகவும், மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை…

Read More

மஹிந்தவின் கூட்டத்திற்கு 34 சுதந்திரக் கட்சி MPகள் பங்கேற்பு

மகிந்த ஆதரவு அணியினர் நடத்திய அரச எதிர்ப்புப் பேரணியில், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 34 பேர் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையின் கட்டளையையும் மீறி இவர்கள் பேரணியில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் கூட்டு எதிரணி சார்பில் அங்கம் வகிக்கும், 51 உறுப்பினர்களில், 45 பேர் இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தனர். இவர்களில் 34 பேர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும், ஏனையவர்கள் கூட்டணிக் கட்சிகளையும் சேர்ந்தவர்களாவர். நேற்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க,…

Read More

ஹைட் மைதானத்துக்கு நானும் செல்வேன்: மஹிந்த

கூட்டு எதிரணியினரால் கொழும்பு, இப்பன்வெல ஹைட் மைதானத்தில் இன்று நடத்தப்படவுள்ள கூட்டத்தில், தான் கலந்துகொள்ளப்போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தின் மூலம் அறிவித்துள்ளார். ‘பொய்ப் பிரசாரங்களை நம்பி ஏமாராதீர்கள். நான் ஹைட் மைதானத்துக்குச் செல்வேன்’ என்று அவர் அந்த வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஹைட் மைதானத்தில் இன்று (17) நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க, அறிவித்துள்ளமை…

Read More

மைத்­தி­ரியை எவ­ருக்கும் விட்­டுக்­கொ­டுக்கத் தயா­ரில்லை

2015 ஆம் ஆண்டு ஜன­வரி 8 ஆம் திகதி ஏற்­ப­டுத்­தப்­பட்ட புரட்­சி­யிலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வெற்­றி­யிலும் 90 வீத­மான பங்கு ஐக்­கிய தேசியக் கட்சி ஆத­ர­வா­ளர்­க­ளு­டை­யது. எனவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எம்மால் தெரிவுசெய்­யப்­பட்­டவர். அவர் எமது கட்­சிக்கு உரித்­து­டை­யவர் என்ற வகையில் அவரை விட்­டுக்­கொ­டுக்கப்­போ­வ­தில்லை. எவ­ருக்கும் அவரை சொந்தம் கொண்­டாடும் அதி­கா­ரமும் இல்லை என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க தெரி­வித்தார். தேசிய அர­சாங்­கத்தின் இருப்பை தக்க வைக்­கு­மாறு வலி­யு­றுத்தி ஐக்­கிய தேசிய கட்சி…

Read More

மஹிந்த தலைமையில் இன்று போராட்டம் வெடிக்கும்

நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு எதிரான போராட்டம் பல இலட்சம் பேரின் பங்­கு­பற்­ற­லுடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் இடம்­பெறும். எமக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுத்தால் அதனை எதிர்கொள்­வ­தற்கு நாம் தயா­ரா­கவே உள்ளோம். எனவே, அச்­ச­மின்றி அனைத்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்­களும் இன்­றைய எதிர்ப்புப் பேர­ணியில் கலந்­து­கொள்ள வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி அழைப்பு விடுத்­துள்­ளது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை துண்­டாட வேண்­டிய தேவை எமக்கு கிடை­யாது. ஏனெனில், உண்­மை­யான சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் கூட்டு எதிர்…

Read More

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றால் எம்.பி. பதவி பறிபோகும்

ஊழல் மோசடிகளை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள  மஹிந்த ராஜபக் ஷவின் சகோதரர்களை விசாரிப்பதை தொடர்வதா? கைவிடுவதா? என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே     அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மேற்கண்டவாறு  குறிப்பிட்டார். அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,   நாட்டை விடுதலை புலிகளுக்கு காட்டிக் கொடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிளவுபடுத்தி ஜனாதிபதியை பலவீனப்படுத்துவதற்காகவே 17 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தை சூழ்ச்சிக்காரர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்….

Read More

மஹிந்த நல்லவர்: ஹிருணிகா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நல்லவர் என கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். கொலன்னாவ ரஜமஹா விஹாரையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்கு உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வில் நேற்று (13) பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் அந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், யார் அழுதாலும் யார் தேங்காய் உடைத்தாலும் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவே ஆட்சி செய்வார். இந்த அரசாங்கம் பல…

Read More

மஹிந்தவிற்கு எதிரான வழக்கு…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 23ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களுக்காக மக்களை ஏற்றிச் சென்ற இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களுக்கு 142 மில்லியன் ரூபா கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கட்டணத்தைச் செலுத்துமாறு கோரி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஏழு பேருக்கு இலங்கை போக்குவரத்துச் சபை வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த…

Read More

அரசியல் எதிர்காலமற்றவர்களே மஹிந்த அணியில்..!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் ஒன்றிணைந்துள்ள அதேவேளை  விமல் வீரவன்ச, பந்துல குணவர்தன போன்ற ஒரு சிலரே அரசியல் எதிர்காலம் அற்ற மக்களால் வெறுக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் புதிய கட்சியொன்றை அமைக்க வேண்டும் என முயற்சிக்கின்றனர் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்தார்.

Read More