Headlines

“மு.காவின் ஸ்தாபக உறுப்பினர்கள் பலர் உண்மையை உணரத் தொடங்கிவிட்டனர்” மருதமுனையில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- இந்தத் தேர்தலை முஸ்லிம் சமூகம் சாதாரண தேர்தலாக எண்ணாமல் நல்ல சிந்தனையோடும், தூரநேக்குடனும் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. இந்த இறுக்கமான சூழ்நிலையில் நன்றாகச் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மருதமுனையில் நான்கு வட்டாரங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்களான ஏ.நெய்னா முஹம்மட், வை.கே.றகுமான், ஏ.எச்.ஏ.ழாஹிர், சிபான் பதுறுத்தீன் ஆகியோரை ஆதரித்து மருதமுனை, அல்மனார் வீதியில் நேற்றுமுன்தினம் (19)…

Read More

ஜப்பானில் இலங்கையின் வர்த்தக கண்காட்சி

ஜப்பானில் இலங்கையின் வர்த்தக கண்காட்சியானது 12ஆவது தடவையாகவும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜப்பானின் டோக்கியோ நகரில் இந்த கண்காட்சியானது செப்டம்பர் மாதம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக ஜப்பானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இரண்டு நாடுளுக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதே இதன்நோக்கம் என இலங்கை வர்த்தக சங்கம் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆகியன இணைந்து தெரிவித்துள்ளன. மேலும், இந்த கண்காட்சி தொடர்பான மேலதிக தகவல்களை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் தொலைபேசி…

Read More

கிரிய விவகாரம்.. தமிழ் யுவதியின் விடுதலைக்காக களம் இறங்கிய பெளத்த அமைச்சர்

சீகிரியாவில் கண்ணாடிச் சுவரில் தனது பெயரை எழுதிய குற்றச்சாட்டில் இரண்டு வருட சிறைத்தண்டனை அனுபவித்துவரும் உதயசிறி (27) என்னும் யுவதிக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமென பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். உதயசிறியை விடுதலை செய்ய வேண்டுமென்ற பிரதி வெளிவிவகார அமைச்சரின் எழுத்துமூல கோரிக்கை ஏற்கனவே ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வாரம் அவர் இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியை நேரில் சந்தித்தும் உரையாடவுள்ளார். அறியாமை காரணமாக உதயசிறி…

Read More

மதமாறி இஸ்லாமிய பெண்னை திருமனம் முடித்தமைக்கு ஹாஸிம் அம்லாவே காரணம்- வெய்ன் பார்னெல்

– அஹமட் இர்சாட் மொஹமட் புஹாரி – தென்னாபிக்க அணியில் 2010ம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய வெய்ன் தில்லான் பார்னெல் Wayne Dillon Parnell 1989ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் திகதி தென்னாபிரிக்க நாட்டின் போர்ட் எலிசபத் நகரில் பிறந்துள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான பார்னெல் 2013ம் ஆண்டு தனது அறிமுக ஒரு நாள் சர்வதேச போட்டியில் இந்தியாவிற்கு எதிராக விளையாடியுள்ளதோடு 20க்கு இருபது சர்வதேச போட்டியில் 2009ம்…

Read More

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிதாக ஏழு விமானங்கள்

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிதாக ஏழு விமானங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் விமான சேவை கடந்த சில வருடங்களாக நட்டத்தில் இயங்கி வருகின்றது. இதன் காரணமாக அண்மையில் இந்த விமான சேவைக்குச் சொந்தமான நான்கு விமானங்கள் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு மேலும் ஏழு விமானங்களைக் கொள்வனவு செய்யவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கொழும்பு, தொட்டலங்க…

Read More

“இலத்திரனியல் வர்த்தகம் தொடர்பிலான சட்டவரைபு, நுகர்வோரை பாதுகாக்க வழிவகுக்கும்” கொழும்பில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!  

இலத்திரனியல் வர்த்தகத்தில் நமது நாட்டின் நுகர்வோருக்கான பாதுகாப்பை சட்டரீதியாக உறுதிப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் துரிதகதியில் இடம்பெற்று வருவது மகிழ்ச்சியளிப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலத்திரனியல் வர்த்தகத்தில் நுகர்வோருக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சட்டவரைபை உருவாக்குவது தொடர்பில், அண்மையில் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்ற இரண்டு நாள் வேலைப்பட்டறையின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார். நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையும், ஜெனீவாவின் சர்வதேச வர்த்தக அமையமும்…

Read More

கிண்ணியா அலிகார் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் கலந்துகொண்டார்

கிண்ணியா அலிகார் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று (10)   பாடசாலை வளாக  மைதானத்தில் வெகு விமர்சையாக இடம் பெற்றது. பாடசாலை அதிபர் கே.எம்.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர்  அப்துல்லா மஹரூப் அவர்கள் கலந்து சிறப்பித்தார். குறித்த நிகழ்வின் போது பிரதியமைச்சரை பாடசாலை மாணவர்கள் இசை வாத்தியத்துடனும் பாரம்பரிய தற்காப்பு கலையுடனும்  பெரும் அமோக வரவேற்பளித்தார்கள். சபா,மினா,மர்வா என  மூன்று  இல்லங்கள் அமைக்கப்பட்டிருந்தது….

Read More

அநுராதபுரத்தை மீண்டும் தலைநகராக்க வேண்டும்

அநுராதபுரத்தை மீண்டும் இலங்கையின்  தலைநகரமாக்க வேண்டும் என அரசியலமைப்பு மறுசீரமைப்பு குழுவிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு மறுசீரமைப்பு குழு இன்று காலை அநுராதபுரம் மாவட்ட செயலகத்தில் கூடிய பொதுமக்களின் கருத்துக்களை பெற்று வருகிறது. குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க உறுப்பினர்களான சுனில் ஜயரத்ன, தெனிய ஹூருல்லே, நதீகா தமயந்தி ஆகியோர் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டு வருகின்றனர். அரசியலமைப்பு மறுசீரமைப்பு குழுவின் முதலில் கருத்துக்களையும் யோசனைகளையும் முன்வைத்த ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் ஒன்றின் உறுப்பினர் பியதாச பத்திரண, அரச…

Read More

அம்பாறையில் அ.இ.ம.காவின் வாக்குகள்: புலனாய்வுப் பிரிவின் இரகசிய தகவல் கசிவு

முகம்மட்; அன்சார் – இறக்காமம் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முதன் முறையாக களமிறங்கவுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆரம்ப கட்ட மக்கள் செல்வாக்கு சுமார் 25 ஆயிரம் என  புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரியவருகின்றது. புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அரசியல் விவகாரத்தை கையாளும் பிரிவின் அதிகாரி ஒருவர் தனக்கு நெருக்கமான ஒருவரிடம் இந்த தகவலை ஊர்ஜிதப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டதன் பிற்பாடு குறிப்பாக 1994ம் ஆண்டுகளுக்கு பின்னர் முகாவின் அசைக்க முடியாத…

Read More

பிரசன்ன ரணதுங்கவின் மனைவியிடம் விசாரணை

முன்னாள் மேல் மாகாண   முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் மனைவியிடம் நிதி குற்ற விசாரணை பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். காணி விவகாரம் தொடர்பிலேயே இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. vk

Read More

இஸட் வெட்டுப் புள்ளிகள் வெளியானது

பல்கலைக்கழங்களுக்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான இஸட் வெட்டுப்புள்ளிகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்து கொள்ளும் வெட்டுப் புள்ளிகள்http://www.ugc.ac.lk/ (link is external) என்ற இணைத்தளத்தில் பார்வையிடலாம் கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில்  மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றியிருந்தாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று வெளியிடப்பட உள்ள இஸட் வெட்டுப் புள்ளிகளுக்கு அமைய மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்து…

Read More

ஆயுள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்க, மஹிந்த ராஜபக்ஸ ஆசைபடுகிறார் – றிஷாத் பதியுதீன்

1983  ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம் பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய சொத்தழிப்பு கலவரமாக அளுத்கம சம்பவம் பதியப்பட்டுள்ளதாக தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை கைது செய்யுங்கள் என்று ஆதாரங்களை ஜனாதிபதியிடம் கொடுத்த போது அதற்கு அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கொழும்பில் தெரிவித்தார். ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவை ஆதரித்து கொழும்பு ஆட்டுப் பட்டித்தெருவில் நேற்று இரவு இடம் பெற்ற…

Read More