Headlines

கோத்தபாயவை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவு!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி உட்பட 8 பேரை செப்டம்பர் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதிமன்றில் வழக்கு ஒன்றை நேற்று தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த சந்தேகநபர்கள் அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்திற்கு…

Read More

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம் இந்த அழைப்பாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டமைக்கு எதிராக அத்தநாயக்க மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு எதிர்வரும் 19ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Read More

இந்திய வௌிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எதிர்வரும் 05 ஆம் திகதி (நாளை மறு தினம்) இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு வருகை தரவுள்ளார் என வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 09 ஆவது அமர்வில் பங்குகொள்ளும் பொருட்டே எதிர்வரும் 05 ஆம் திகதி வருகைதரவுள்ள இவர் 06 ஆம் திகதி வரையான இரண்டு நாட்கள் நாட்டில் தங்கியிருப்பார். இந்தியா – இலங்கை கூட்டு ஆணைக்குழுவுக்கு இலங்கை வௌிவிவகார அமைச்சர் மங்கள…

Read More

உள்ளூராட்சித் தேர்தல் படிப்பினையைக் கொண்டு மாகாணத் தேர்தல் முறைமையை மாற்றும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்.. ஸ்திரமான ஆட்சிக்கு மக்கள் காங்கிரஸ் ஆதரவளிக்கும் – அமைச்சர் ரிஷாட்  

  உள்ளுராட்சித் தேர்தலை படிப்பினையாகக் கொண்டு மாகாண தேர்தல் முறைமை, பாராளுமன்றத் தேர்தல் முறைமை தொடர்பில் அரசாங்கம் கொண்டுவரவுள்ள மாற்றங்களை உடனடியாகக் கைவிட்டு பழைய முறையிலான தேர்தல்களை நாடாத்த வேண்டுமென ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் அகில இலங்கை மகள் காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்துவதாகவும், எதிர்கட்சித் தலைவர், ஏனைய கட்சித் தலைவர்களும் இந்த விடயத்தில் கரிசனை செலுத்த வேண்டுமென அக்கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை ஆகியவை…

Read More

‘மொஹமட் ஷியாம் கொலை’ சாட்சியாளராக ஜனாதிபதி மைத்திரி

பம்பலப்பிட்டி கோடிஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் கொலை வழக்கின் சாட்சியாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெயரிடப்பட்டுள்ளார். முன்னாள் பிரதி பொலிஸ் அதிகாரி வாஸ் குணவர்தனவுடன் குற்றம் சுமத்தப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பிரியந்த சஞ்சீவவுக்கு சாட்சி வழங்குவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சாட்சிகாரர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட ஏழு பேர் பெயரிடப்பட்டுள்ளனர். எப்படியிருப்பினும் வழக்கிற்கான சாட்சிகளை விசாரிப்பதற்காக ஜனாதிபதி உட்பட 07 பேரை அழைப்பதா இல்லையா என்பதனை நீதிபதியின் தீர்ப்புக்கு பின்னரே தீர்மானிக்கப்படும். சமீபத்தில்…

Read More

போராளிகளின் பிடியில் லிபியா (வரைபடம் இணைப்பு)

1.சிவப்பில் இருப்பது :  லிபியாவின் உண்மையான புரட்சியாளர்கள் வசமுள்ள பகுதிகள். கடாபிக்கேதிராக போராடி உருவாக்கிய புரட்சியை பாதுகாக்கும் புரட்சிப் படைகள்தான் லிபியாவின் பெரும்பாலான நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றன. 2.மஞ்சளில் இருப்பது :  இந்தப் புரட்சிப் படைகள் ஏனைய குழுக்களுடன் இணைந்து கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலப்பகுதி. 3.பச்சையில் இருப்பது: புரட்சியைக் தோற்கடிக்க கலீபா ஹப்தர் எனும் முன்னால் இராணுவ ஜெனரலின் படைகள் வசமுள்ள நிலப்பகுதி. இந்த அமெரிக்க ஏஜென்டை வைத்து லிபிய புரட்சியை புதைகுழிக்குள் தள்ள எமிரேட்ஸ், சீசி…

Read More

தாஜூடின் கொலை: சந்தேகநபர்களை கைது செய்யுமாறு உத்தரவு

ரக்பி வீரர் வசீம் தாஜூடினின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதிவான் நிஷாந்த பீரிஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். தாஜூடினின் மரணமானது கொலையென உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான சந்தேகநபர்களை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் வசீம் தாஜூடீன் மரணம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்ட பாதுகாப்பு கெமராக்களில் பதிவான காட்சிகளை வெளிநாடு ஒன்று அனுப்பி மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து…

Read More

மீள்குடியேற்ற மக்களுக்கு சமுர்த்தி முத்திரை வழங்கப்பட வேண்டும் அப்துல்லா மஹ்ரூப் கோரிக்கை

  மூதூர் கிழக்கு சம்பூர் போன்ற மீள்குடியேற்ற மக்களுக்கு சமுர்த்தி உணவு முத்திரை வழங்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் லாஹ் மஹ்ரூப் கோரிக்கை விடுத்தார். திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் (நேற்று) 21, திங்கட்கிழமை நடைபெற்ற போது இப்பிரச்சினையை முன்னிலைப்படுத்தி அவர் கருத்து தெரிவித்தார். இக்கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, பாராளுமன்ற உறுப்பினார்களான அப்துல் லாஹ் மஹ்ரூப், இம்ரான் மஹ்ரூப், எம்.எஸ்.தௌபீக், கே. துரைரெத்தினசிங்கம், மாகாண அமைச்சர்களான…

Read More

யானை தாக்கி கிண்ணியா அப்துல் மஜீத் ரகீப் வபாத்

திருகோணமலை, கிண்ணியாப் பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி அப்பிரதேசத்தைச் சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையான அப்துல் மஜீத் ரகீப் (வயது 36) என்பவர் வபாத்தானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். மேற்படி பிரதேசத்தில் உள்ள மணியரசன்குளத்தில் மீன்பிடித்துக்கொண்டு 03 பேர் நேற்று (29) புதன்கிழமை இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். இதன்போது, வழியில் மேற்படி நபரை யானை தாக்கிய வேளையில் ஏனைய 02 பேரும் தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், வவுனியா ஆண்டியாபுளியங்குளத்தில் (வாழவைத்த குளம், ஆண்டியாபுளியங்குளம், புதுக்குளம்) ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தையல் பயற்சியை நிறைவு செய்த யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள், அமைப்பாளர் தாவூத் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.  

Read More

மைத்திரியின் ”100 நாட்களுக்குள் புதிய தேசம்” தேர்தல் விஞ்ஞாபனம் – மின்சாரமும் துண்டிக்கப்பட்டது

புதிய ஜனநாயக முன்னணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின், 100 நாட்களுக்குள் புதிய தேசம் எனும் தொனிப்பொருளில் வடிவமைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் கொழும்பு, விகாரமகாதேவி பூங்காவில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இவ்வைபவத்தில் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, அதுரலியே ரத்ன தேரர், சம்பிக்க ரணவக்க, ரவி கருணாநாயக்க, ஆர்.யோகராஜன், துமிந்த திசாநாயக்கா உட்பட பலர் கலந்துகொண்டனர். இவ்வெளியீட்டின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More