அண்ணாவுக்கு டொபி, தம்பிக்கு குளிர்பானம்: துஷ்பிரயோகம் செய்த 67 வயது முதியவர்
சிறுவன் ஒருவருக்கு குளிர்பானம் கொடுத்து 67 வயதுடைய முதியவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்டுபத்திய சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, புதிய காத்தான்குடி 2ஆம் குறிச்சி பகுதியில் 10வயது சிறுவன் ஒருவன் தனது சகோதரனுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5மணியளவில்; தனது வீட்டுக்கு அருகில் நின்று விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். இதன்போது அருகிலுள்ள தேனீர் கடையொன்றின் 67 வயதுடைய உரிமையாளர் குறித்த சிறுவனையும் அவரது சகோதரனையும் அழைத்துள்ளார். பின்னர் சிறுவனின் சகோதரனுக்கு…
