Headlines

சிறைக்கைதிகள் நாளை விடுதலை

இலங்கையின் 67 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பு அடிப்படையில் சிறை கைதிகள் சிலர் விடுதலை செய்யப்படவுள்ளனர். சிறை தண்டனை பெற்று வரும் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள் நாளை (04) விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் போது சிறு குற்றங்களிற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள், மற்றும் தண்டப்பணம் செலுத்த முடியாதவர்களே விடுதலை செய்யப்படவுள்ளனர். மேலும் தற்போது சிறை தண்டனை பெற்றுள்ளவர்களின் சிறை தண்டனை காலத்தில் ஒரு வாரத்தை குறைப்பதற்கும் சுதந்திர தினத்தை முன்னிட்டு…

Read More

இறுதிக் கட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை அறிக்கை தயார்!

யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறித்த அறிக்கை எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படும் என காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். அதற்கு திகதி ஒன்றை வழங்குமாறு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும்.இந்தச் சந்திப்பில் ஆணைக்குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இந்த சந்திப்பில்…

Read More

பைசர் முஸ்தபாவுக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு

தம்மை உடனடியாக சந்திக்குமாறு சிவில் விமான சேவைகள் அமைச்சர் பைசர் முஸ்தாபாவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார். சிவில் விமான சேவை அமைச்சிற்கு உரிய சில விடயங்கள் நீக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் பைசர் முஸ்தபா அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவராக அஜித் டயஸ் நியமிக்கப்பட்டமை குறித்து தமக்கு அறிவிக்கப்படவில்லை என முஸ்தபா தெரிவித்திருந்தார். இவ்வாறான ஓர் நிலையில் கடந்த நில நாட்களாகவே அமைச்சிற்கு சென்று கடமைகளை செய்யாதிருந்த…

Read More

மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு

முன்னிலை சோஷலிஸ கட்சியினால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, தேர்தல்கள் ஆணையாளர் கோராத நிலையில் இராணுவத்தினரை அழைத்தமைக்கு எதிராகவே இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆயுத படைகளுக்கு பொலிஸாரின் அதிகாரங்களை வழங்கியே இராணுவம் அழைக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது. அன்றிருந்த அரசு 2011ஆம் ஆண்டு, அவரசகாலச்சட்ட ஒழுங்குவிதிகளை நீக்கியது. அவ்வாறு இருந்த நிலையில், மக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் 12ஆம் பிரிவை பயன்படுத்தி முழு நாட்டையும்…

Read More

துருக்கி-இலங்கை நட்புறவு அமைப்பின் சுதந்திர நிகழ்வு

அஸ்ரப் ஏ சமத் – துருக்கி-இலங்கை நட்புறவு அமைப்பினால் நிர்வகிக்கப்படும் லேணியம் சர்வதேச பாடசாலையின் மாணவர்களுடன் இலங்கையின் சுதந்திர தினத்தினை முன்ணிட்டு பெப்ரவரி 6ஆம் திகதி காலை 09.00 – 11.00 மணிவறை கொழும்பு -7 சுதந்திர சதுக்கத்தில் சுதந்திர தின வைபவங்கள் கொண்டாப்பட உள்ளது. இக் கல்லூரியில் பயிலும் 400 மாணவர்களும் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்களும் கலந்து கொள்வார்கள். இவ்விடயம் சம்பந்தமாக ராஜகிரிய லேனியம் பாடசாலையில் ஊடகவியலாளர் மாநாடொன்று இன்று நடைபெற்றது. இங்கு கருத்து தெரிவித்த…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு கல்முனை நற்பிட்டிமுனை மக்கள் வரவேற்பு

இர்ஷாத் றஹ்மத்துல்லா கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில்,வணிக மற்றும் வாணிப துறை அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு கல்முனை நற்பிட்டிமுனை மக்கள் பெரும் வரவேற்பு நிகழ்வொன்றினை நேற்று நடத்தினர். நுடை பெற்றுமுடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ள தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் நற்பிட்டி முனை பிரதான வீதி ஊடாக விழா இடம் பெறும் இடத்துக்கு ஊர்வலமாக அழைத்து சென்றனர். கல்முனை மாநாகர…

Read More

அமைச்சர் சஜித் பிரேமதாச வின் அரசியல் முன்மாதிரி

அஸ்ரப் ஏ சமத் முன்னாள் அமைச்சர்களாக பதவி வகித்த விமல் வீரவன்ச மற்றும் பேரியல் ;அஸ்ரப் மற்றும் காலம் சென்ற அமைச்சர் எம்.எச்.எம் அஸ்ரப் ஆகியோர்கள் கபினட் அமைச்சர்களாக பதவி வகித்தபோது வாழ்ந்த கொழும்பு 7 ஸ்டோமோ கிரசன்ட் வீதியில் உள்ள வாசஸ்தலத்தை இன்று வீடமைப்பு சமுத்தி அமைச்சர் சஜித் பிரேமதாச இவ் வீட்டை மீள அமைச்சின் செயலாளாருக்கு பொறுப்பளித்தார். இவ் வீட்டுகாக பல மில்லியன் ரூபாய்களை செலவழித்து கடந்த காலத்தில் அமைச்சர் விமல் வீரவன்ச அழகுபடுத்தியுள்ளார்….

Read More

கமலேஷ் சர்மா மங்களவுடன் பேச்சு

உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ் ஷர்மா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் . நேற்றையதினம் இலங்கையை வந்தடைந்தடைந்த கமலேஷ் சர்மா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்து பேச்சு வார்த்தையினை மேற்கொண்டுள்ளார். இதன்போது , புதிய அரசாங்கத்தினால் எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளவுள்ள வேலைத்திட்டம் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் வெளிவிவகார அமைச்சருக்கு பொதுநலவாய நாடுகளின் செயலாளர் அறிவுரை வழங்கியுள்ளார். மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள…

Read More

அலாஸ்காவில் நடுவானில் மோதிக் கொண்ட இரு விமானங்கள்!:இரு பைலட்டுக்களும் உயிர் தப்பினர்

வட அமெரிக்க மாநிலமான அலாஸ்காவில் நேற்று சனிக்கிழமை இரு சிறிய ரக விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்டுள்ளன. அலாஸ்காவின் மிக அதிக சனத்தொகையைக் கொண்ட அங்கோராகே (Anchorage) என்ற நகருக்கு வடக்கே இவ்விபத்து நடைபெற்றுள்ளது. விபத்தின் போது பாரஷூட் மூலம் விமானத்தில் இருந்து வெளியேறிய இரு பைலட்டுக்களில் ஒருவருக்கு மோசமான காயங்களும் மற்றையவருக்கு சாதாரண காயங்களும் ஏற்பட்டுள்ளன. இத்தகவல் அலாஸ்காவின் பொதுமக்கள் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் காயமடைந்த இரு பைலட்டுக்களும் பிராந்திய…

Read More

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவிற்காக 35 லட்சம் ரூபாவை செலவிட்ட மீரிகம பிரதேச சபை

பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலின் போது ஒரு வேட்பாளரின் பிரச்சாரத்திற்காக இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 35 லட்சம் ரூபாவிற்கு மஹிந்தவின் உருவப் படத்தை அச்சிட்டு அப்பியாசக் கொப்பிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். உரிய விலை மனுக் கோரல் விதிமுறைகள் பின்பற்றப்படாது அப்பியாசக் கொப்பிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும், கொடுப்பனவுகளை வழங்க வேண்டாம் எனவும் பொது நிர்வாக…

Read More

இசிப்பத்தான கல்லூரியில் முஸ்லிம் மாணவன் மீது தாக்குதல் ; ஊடகங்களுக்கு அறிவிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை

அஸ்ரப் ஏ சமத் -இசிப்பத்தான கல்லூரியின் உயர்தரம் கல்விகற்கும் முஸ்லிம் மாணவனுக்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பழையமாணவர் ஒருவர் அறைந்து காது வெடித்துள்ளது – குஸ்னி ஹக் – கல்கிசை இவர் கொழும்பு 5 இசிப்பத்தான கல்லூரியில் தரம் 1 இல் இருந்து தமிழ் மொழி முலம் கல்வி கற்று தற்பொழுது க.பொ.த. உயர்தரத்தில்; வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வருகின்றார். இம்; மாணவனுக்கு இக் கல்லூரியில் சிங்கள மொழி முலம் கல்வி பயின்ற பழைய மாணவர் ஒருவர்…

Read More

தலவாக்கலை இளைஞனின் சடலம் மீட்பு

-ஜி.கே.கிஷாந்தன்- பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் குதித்து காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது. தலவாக்கலை நகரில் நேற்று பாதுகாப்பு நடவடிக்கையில் இருந்த பொலிஸார் 20 வயதான மாரிமுத்து மனோஜ் எனும் இளைஞர் பாபுள் வெற்றிலையை வைத்திருந்ததாக கூறி கைது செய்ய முயற்சித்துள்ளனர். இதனால் குறித்த இளைஞன் பொலிஸாரிடமிருந்து தப்பித்து ஓடியுள்ளான். எனினும் குறித்த இளைஞனை  பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பின் தொடர்ந்துள்ளனர். இதனை அவதானித்த இளைஞன் மேல் கொத்மலை நீர்தேக்கத்தில்  நேற்று பி.ப…

Read More