Headlines

ஜோன் அமரதுங்க மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேறினால் பாராளுமன்றம் கலைக்கப்படும்: ரணில்

சிறிகொத்தவில் நடைபெற்ற கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையினால் 100 நாள் வேலைத்திட்டத்தினூடாக கொண்டுவரவுள்ள யாப்புச் சீர்திருத்தம், இல்லாமல் போகும் நிலை உருவாகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். வத்தளை பிரதேச சபை தலைவர் உட்பட பொ.ஐ.ம.கூட்டணியின் உறுப்பினர்கள் சிலர் மீது தாக்குதல் நடாத்தியதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Read More

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டும்! பிரதம நீதியரசரிடம் கோரிக்கை

சுவிஸிலிருந்து இளைஞரொருவரே, நாமல் ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை வேண்டும் என கடிதம் ஒன்றின் மூலம் இந்தக் கோரிக்கையை பிரதம நீதியரசரிடம் விடுத்துள்ளார். சட்டத்துக்கு புறம்பாகவே நாமல் ராஜபக்ச, சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். 2010ம் ஆண்டு துஸார, இறுதி சட்டப் பரீட்சையை எழுதிய வேளையில் நாமல் ராஜபக்சவுக்கு தனியான குளிரூட்டப்பட்ட அறையில் வைத்து பரீட்சை நடத்தப்பட்டது. இது முழுமையாக சட்டமீறல் சம்பவமாகும். இந்தநிலையில் சட்டப்பரீட்சையின் வினாத்தாள்கள், நாமல் ராஜபக்சவுக்கு முன்கூட்டியே கிடைக்கப் பெற்றதாகவும் துஸார குற்றம் சுமத்தியுள்ளார்….

Read More

பிரிட்டனுக்கு பயணமானார் வெளிவிவகார அமைச்சர்

பிரிட்டனின் உயர் அதிகாரிகள் பலருடன் அமைச்சர் சமரவீர பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இதேவேளை, பிரிட்டன் விஜயத்தின் பின்னர் அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார். அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியை இலங்கைக்கு அழைக்கும் நோக்கில் இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்படுகிறது

Read More

மாற்றத்தை சந்தித்துள்ள இலங்கைக்கு அமெரிக்கா உதவும்: சூசான் ரைஸ்

இலங்கையில் வெளிப்படைத் தன்மையுள்ள ஜனநாயக சமூகத்தை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பை அமெரிக்கா வழங்கும் என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கான ஆலோசகர் சூசான் ரைஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் தேசிய பாதுகாப்புக் கொள்கை தொடர்பிலான உரை குறித்த தனது உரையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மாற்றத்தை சந்தித்திருக்கும் இலங்கை, மியன்மார், துனீசியா போன்ற நாடுகளுக்கு அமெரிக்கா உதவும் என்றுள்ளார். இதேவேளை, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பிரதிப்பேச்சாளர் மேரி ஹர்வ், நல்லிணக்கம் மற்றும் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக…

Read More

விபத்தில் சிக்க முன் டிரான்ஸ் ஏசியா விமானத்தில் எந்திரக் கோளாறு ஏற்பட்டது உறுதி!

டிரான்ஸ் ஏசியா விமான நிறுவனத்தைச் சேர்ந்த GE235 என்ற விமானம் 58 பேருடன் புதன்கிழமை தாய்வான் தலைநகர் தாய்பேயில் டேக் ஆஃப் ஆகி சில நிமிடங்களுக்குள் கட்டங்களை உரசியவாறு பாலத்தை உடைத்துக் கொண்டு ஆற்றில் வீழ்ந்து விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை இன்று சனிக்கிழமை 40 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் குறித்த டிரான்ஸ் ஏசியா விமானம் விபத்தில் சிக்க முன் அதன் இரு எஞ்சின்களுமே அவற்றிட்கான எரிபொருள் துண்டிக்கப் பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த…

Read More

மொங்கோலியாவில் கண்டு பிடிக்கப் பட்ட மம்மி துறவி இன்னமும் தியான நிலையில்?

கடந்த வாரம் கண்டுபிடிக்கப் பட்ட மொங்கோலியாவில் கோயில் ஒன்றில் பாதுகாக்கப் பட்டு வைக்கப் பட்டிருந்த துறவி போன்ற வடிவத்திலுள்ள மம்மி இறக்கவில்லை எனவும் தொடர்ந்து நூற்றுக் கணக்கான வருடங்களாக இன்னமும் தியான உணர்விலேயே இருப்பதாகவும் மூத்த பௌத்தத் துறவிகள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மம்மி துறவி சடலமானது கால்நடைகளின் தோலினால் போர்க்கப் பட்டும் பத்மாசனத்தில் உட்காந்திருப்பது போன்ற நிலையிலும் கண்டு பிடிக்கப் பட்டிருந்தது. ஏற்கனவே இத்துறவி மம்மி ஒரு மர்ம நபரால் கருப்புச் சந்தையில் விற்கப்படுவதற்காகத்…

Read More

தகவல் அறியும் உரிமை சட்டப்படி கணவனின் ஊதியத்தை மனைவி அறியலாம்!

தகவல் அறியும் உரிமை சட்டப்படி கணவனின் ஊதியத்தை மனைவி அறியலாம் என்று, தகவல் அறியும் உரிமை ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. தனி நபர் ஒருவரின் ஊதியத்தை அறியும் உரிமை யாருக்கும் இல்லை என்று சட்டத்தில் இருக்கும் பட்சத்தில், கணவனின் ஊதியம் குறித்து அறிந்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு பெண்மணி தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தகவல் அறியும் உரிமை ஆணையம், இனி கணவனின் ஊதியத்தை அறிந்துக்கொள்ளும் உரிமை…

Read More

சிறு எதிர்ப்புமின்றி இந்தியா செல்லும் இலங்கைத் தலைவர் என்ற பெருமையை பெறுகிறார் ஜனாதிபதி மைத்திரிபால

இதுவரை காலமும் இலங்கைத் தமிழருக்காக எனக் குரல் கொடுத்து தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய மத்திய அரசாங்கத்திற்கும் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து வந்த தமிழக அரசியல் கள நிலவரத்தில் தற்போது அமைதியானதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. முன்னரைப் போன்று இலங்கை அரசாங்கத்தின் தலைவர்கள், அமைச்சர்கள், விசேட பிரதிநிதிகள், அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் எனப் பல தரப்பினரும் தமிழகத்திற்கு அல்லது அந்நாட்டின் ஏதேனும் ஒரு பகுதிக்கு வருகை தரும் போது ஆயிரம் பேரை ஒன்று திரட்டி விமான நிலையத்திலும்,…

Read More

மாணவர்களை 16 ஆம் திகதிக்கு முன்னர் இணைத்துக் கொள்ளவும் ; கல்வி அமைச்சு

பிரபல பாடசாலைகளுக்கு தரம் ஐந்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமைக்கு முன் முடித்துக் கொள்ளுமாறு கல்வி அமைச்சு குறித்த பாடசாலைகளின் மேலதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது. மேலும் 05 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பிரபல பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படாத மாணவர்களின் மேன் முறையீட்டுக்காக 16 ஆம் திகதிக்குப் பின்னர் இரண்டு வாரங்கள் அளவில் வழங்குவதற்கும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பாடசாலைகள் கிடைக்காமை, வேறு பாடசாலைகளை பெற்றுக் கொள்ளல், விண்ணப்பிக்காத பாடசாலைகளை பெற்றுக் கொள்ளல்,…

Read More

யாழ் முஸ்லீம் பகுதி கடைகளில் இன்னும் பழைய விலையில் சிற்றுண்டி மற்றும் பால் விற்பனை

பா.சிகான் யாழ். நகரப்பகுதியில் உள்ள உணவகங்களில் விற்கப்பட்ட சில உணவு வகைகளுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளதால் கிராமப்புறங்கள் மற்றும் நகரப்பகுதியில் உள்ள உணவகங்களும் விலைகளை உடனடியாக குறைக்குமாறு யாழ். வணிகர் கழக தலைவர் ஆர்.ஜெய்சேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். நகரப்பகுதியில் உள்ள உணவக உரிமையாளர்களுடன் இன்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் போது உணவக உரிமையாளர்கள் விலை குறைப்பினை மேற்கொள்வதாக தீர்மானம் எடுக்கப்பட்டது. அதனடிப்படையில், முன்னர் 15 ரூபாவிற்கு விற்பனை செய்த தேனீர் 10 ரூபாவிற்கும்இ பால் தேனீர் 30…

Read More

சதாமை தூக்கிலிட்ட கயிறு ஏலத்தில்

ஈராக் முன்னாள் மாவீரன் சதாம் ஹுஸைனை தூக்கலிடபயன்படுத்திய தூக்கு கயிறு 70 லட்சம்வரை ஏலம் விடப்பட உள்ளது. ஈராக் முன்னாள் அதிபரும் ராணுவ மாவீரன்யுமான சதாம் உசேன் மீது கடந்த 1982-ம் ஆண்டு முதல் ஆட்சி காலத்தில் பலரை இனப்படுகொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. தலைமறைவாக இருந்த சதாம் உசேன், அமெரிக்க, பிரிட்டன் கூட்டு படைகளால் கடந்த 2003-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் நடந்த விசாரணையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாக்தாத்…

Read More

பள்ளிவாயலினுள் நின்ற இராணுவ வீரர் துப்பாக்கிச் சூட்டில் பலி

காத்தான்குடி, 5ஆம் குறிச்சி பகுதியில் இன்று மாலை 4.10 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 5ஆம் குறிச்சி பகுதியில் உள்ள பள்ளிவாயல் ஒன்றில் நடைபெற்ற வைபவமொன்றில் கடமையிலிருந்தபோதே  மேற்படி இராணுவ வீரர் துப்பாக்கிச் சூட்க்கு இலக்காகி பலியாகியுள்ளார். சம்பவத்தில், கோவில்குளம் இராணுவ முகாமில் கடமையாற்றிய மதவாச்சியைச் சேர்ந்த 22 வயதுடைய டபிள்யூ.எம்.கருணாரத்ன என்ற இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சக இராணுவ வீரர்கள் இறங்கிச் சென்றதன் பின்னர்   இவர்…

Read More