இனி சீன நீர் மூழ்கிகளுக்கு இடமில்லை – அமைச்சர் மங்கள அதிரடி
சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் கடந்த ஆண்டைப் போல மீண்டும் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தருவதற்கு இலங்கையின் புதிய அரசாங் கம் அனுமதிக்காது என்று, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சீனாவுக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சீனப் பிரதமர் லி கிகியாங், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி ஆகியோரை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். நேற்று பீஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவைப் போல, சீன நீர்மூழ்கிகள் இலங்கைத் துறைமுகத்தை அணுக…
