Headlines

இனி சீன நீர் மூழ்கிகளுக்கு இடமில்லை – அமைச்சர் மங்கள அதிரடி

சீன நீர்­மூழ்கிக் கப்­பல்கள் கடந்த ஆண்டைப் போல மீண்டும் கொழும்புத் துறை­மு­கத்­துக்கு வருகை தரு­வ­தற்கு இலங்­கையின் புதிய அர­சாங் கம் அனு­ம­திக்­காது என்று, வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­துள்ளார். சீனா­வுக்கு இரண்டு நாள் பய­ணத்தை மேற்­கொண்ட வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, சீனப் பிர­தமர் லி கிகியாங், சீன வெளி­வி­வ­கார அமைச்சர் வாங் யி ஆகி­யோரை சந்­தித்துப் பேச்சு நடத்­தி­யி­ருந்தார். நேற்று பீஜிங்கில் செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்த அவ­ரிடம், முன்­னைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவைப் போல, சீன நீர்­மூழ்­கிகள் இலங்கைத் துறை­மு­கத்தை அணுக…

Read More

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த தயாராகும் வடகொரியா

அமெரிக்காவுடன் போரிடுவதற்கு ஆயத்தமாக இருக்குமாறு இராணுவ வீரர்களுக்கு வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தலைநகர் பியாங்யாங்கில் உள்ள போர் நினைவு அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரங்கத்தை நேற்று திறந்து வைத்து அவர் உரையாற்றினார். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் போருக்கு எப்போதும் ஆயத்தமாக இருக்குமாறு கிம் ஜாங்-உன் உத்தரவிட்டுள்ளார். தேசத்தை மீண்டும்ஒன்றிணைக்க வேண்டிய சூழல் தற்போது நிலவி வரும் நிலையில், ஒட்டுமொத்த இராணுவமும் சித்தாந்தப்படியும்,…

Read More

கேரளாவை ராட்சத எரிகல் தாக்கியதா? மர்மத்தால் பீதியில் உறைந்த மக்கள்

கேரள மாநில வான்வெளியில் நேற்றிரவு மிகப்பெரிய எரிகோளத்தை கண்டதாக மக்கள் பீதியடைந்துள்ள நிலையில், எர்ணாகுளம் மாவட்டத்தில் இன்று எரிகல் தாக்கி பள்ளம் ஏற்பட்டதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ராட்சத வெடிகளை கொளுத்தியதுபோல் தோன்றிய அந்த எரிகோளம் மெதுவாக நகர்ந்து சென்றது என்றும் அப்போது அங்குள்ள வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்கள் அதிர்ந்தது எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கரிமல்லூர் கிராமத்தில் இன்று ராட்சத எரிகல் விழுந்ததைப் போல் மிகப்பெரிய…

Read More

நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு துணிகர தலைமை அமைச்சர் றிஷாத் பதியுதீன் -அமீர் அலி

இர்ஷாத் றஹ்மத்துல்லா தேசியத்தில் ஒரு மாற்றத்தை செய்து காட்டியவர்கள் முஸ்லிம்கள்.மஹிந்த ராஜபக்ஷ என்கின்றவர் இந்த நாட்டில் நீ்ண்ட நாட்களாக ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைத்த போது இந்த நாட்டு மக்கள் அந்த மனிதரை மாற்ற வேண்டும் என்று நினைத்த போது அதற்கு முதன் முதலில் முஸ்லிம்கள் ரீதியில் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியவர் எமது கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பது தான் உண்மை என்கின்றார் சமூர்த்தி,வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி. குருநாகலயில்…

Read More

அமைச்சர் றிஷாத்  பதியுதீனின் எண்ணக்கருவுக்கு அமைய 3000 யுவதிகளுக்கு இலவச தையல் பயிற்சி

இர்ஷாத் றஹ்மத்துல்லா தேசியத்தில் ஒரு மாற்றத்தை செய்து காட்டியவர்கள் முஸ்லிம்கள்.மஹிந்த ராஜபக்ஷ என்கின்றவர் இந்த நாட்டில் நீ்ண்ட நாட்களாக ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைத்த போது இந்த நாட்டு மக்கள் அந்த மனிதரை மாற்ற வேண்டும் என்று நினைத்த போது அதற்கு முதன் முதலில் முஸ்லிம்கள் ரீதியில் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியவர் எமது கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பது தான் உண்மை என்கின்றார் சமூர்த்தி,வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி. குருநாகலயில்…

Read More

ஹம்பாந்தோட்டை வாடி வீடு திறப்பு

-எம். இஸட். எம். இர்பான்- ஹம்பாந்தோட்டை வாடி வீடு சபாநாயகர் சமல் ராஜபக்ஸவினால் நேற்று திறந்துவைக்கப்பட்டது. மாநகர மேயர் எராஜ் ரவீந்திர தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெரும் திரளானோர் கலந்துசிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.  

Read More

பதியப்படாத விமானத்தை பயன்படுத்திய சஜின்வாஸ்

நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு சொந்தமான கொஸ்மோஸ் லங்கா நிறுவனத்துக்குச் சொந்தமான பொருள்களை ஏற்றிச் செல்லும் சரக்கு விமானத்திற்கு பதிவுச் சான்றிதழ் இல்லை என்று கூறப்படுகின்றது. போயிங் 727 ரக விமானத்தை சஜின்வாஸ் குணவர்தனவுக்கு சொந்தமான நிறுவனம் பயன் படுத்தி வந்துள்ளது. இந்த விமானம் 2000 ஆம் ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் வர்த்தகர் ஒருவர் அதனை கொள்வனவு செய்திருந்தார் என்றும் கூறப்படுகின்றது. ஆரம்பத்தில் இந்த விமானம் ஏரோ லங்கா என்ற பெயரில் இரத்மலானை…

Read More

எலிசபெத் மகாராணியின் அழைப்பையேற்று ஜனாதிபதி பிரித்தானியா பயணம்!

இங்கிலாந்தின் மகாராணி எலிசபெத்தின் விசேட அழைப்பினை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி பிரித்தானியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். பிரித்தானியாவுக்கான நான்கு நாள் விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி, எலிசபெத் மகாராணியுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதுடன், மகாராணி அளிக்கும் பகல் போசன விருந்துபசாரத்திலும் கலந்து கொள்ளவுள்ளார். மார்ச் 9ஆம் திகதி இலண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘பொதுநலவாய தினம்’ நிகழ்வுகளில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்கு சிறப்புரை ஒன்றையும் ஆற்றவுள்ளார்….

Read More

உங்களது வாழ்க்கை வளம் பெற வேண்டும் – அமைச்சர் றிஷாத்

இர்ஷாத் றஹ்மத்துல்லா வடக்கில் நலிவுற்றிருக்கும் யுவதிகளின் வாழ்வாதார மேம்பாட்டுகளுக்காக எமது அமைச்சின் கீழ் இலவச தையல் பயிற்சிகளை வழங்குவதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் இவ்வாறான பயிற்சிகளை கற்பதற்கு பெறும் தொகை பணத்தினை செலவழித்து செல்வதை காணமுடிவதாகவும் கூறினார். மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பெரியமடு கிராமத்த்தில் யுவதிகளுக்கான தையல் தையல் பயிற்சி நிலையத்தினை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த…

Read More

போர் வெற்றியைக் காட்டி குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது: சோபித தேரர்

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் உண்மை நிலை கண்டறியப்பட வேண்டியது அவசியம். போர் வெற்றிகளைக் காரணம் காட்டி குற்றமிழைத்தவர்கள் எவரும் தண்டனைகளிலிருந்து தப்பிப்பதற்கு இடமளிக்கக் கூடாது என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், கோட்டை நாக விகாரையின் விகாராதிபதியுமான மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். பாப்பரசர் முதற்கொண்டு உலகத் தலைவர்கள் பலரும் உண்மையைக் கண்டறிய வேண்டும் என தெரிவித்த கருத்துடன் தான் உடன்படுவதாகத் கூறிய சோபித தேரர், மறைப்பதற்கு இவ்விடயத்தில் ஏதுமில்லையல்லவா? என்று…

Read More

ஒபாமா எந்த மதம்?- ஆய்வால் அமெரிக்க அரசியலில் சலசலப்பு

அமெரிக்க அதிபர் ஒபாமா எந்த மதத்தைச் சேர்ந்தவர்? என்று கேள்வியை எழுப்பிய ஆய்வின் முடிவால் அமெரிக்க அரசியலில் பெரும் சலசலப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் வெளிவந்த செய்தியின் விவரம்: அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் தியோடாரிடிஸ் தனது முனைவர் பட்டத்துக்காக, அமெரிக்க செனட்சபை தேர்தல் குறித்த ஆய்வை தொடங்கினார். அதில் ஒரு கட்டமாக அமெரிக்க அதிபர் ஒபாமா எந்த மதத்தைச் சேர்ந்தவர்? என்ற கேள்வியை பலதரப்பட்ட அமெரிக்கர்களிடம்…

Read More

குப்பை பிரச்சினையை தீர்த்து கொழும்பை அழகுபடுத்திய கோத்தபாயவிற்கு நன்றி: ஏ.ஜே.எம் முஸம்மில்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு கொழும்பு நகர அபிவிருத்திக்காக வழங்கிய ஆதரவிற்காக அவருக்கு நகரசபை சார்பில் அவருக்கு பாராட்டுக்கள் வழங்க வேண்டும் என கொழும்பு நகர முதல்வர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நகரசபையின் மாதாந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கொழும்பு நகரத்தில் காணப்பட்ட மெட்ரிக்டொன் அளவான குப்பைகளை அகற்றி குப்பை பிரச்சினையை முழுமையாக தீர்த்து வைத்ததன் காரணமாக இன்று கொழும்பு நகரம் அழகுடன் காணப்படுகின்றது. அது நகர…

Read More