Headlines

மனைவியின் குற்றச்செயலை மறைத்து சிங்கள மக்களிடம் அனுதாபம் தேட விமல் வீரவங்ச முயற்சி: மனோ கணேசன்

தனது மனைவியின் குற்றச்செயலை மறைத்து சிங்கள மக்கள் மத்தியில் அனுதாபம் தேடுவதற்கு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்ச முயற்சிக்கின்றார் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல், பயங்கரவாதத்தை ஒழித்தவர்கள் இன்று சிறை செல்ல வேண்டியுள்ளது என்று கூறி இனவாதத்தையும் கிளப்ப விமல் வீரவங்ச முயற்சிக்கின்றார் என்று அவர் தெரிவித்துள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில்…

Read More

இலங்கை வெளிவிவார அமைச்சர் சீனாவிற்கு விஜயம்

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றிரவு மங்கள சமரவீர சீனாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமையவுள்ளது. சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியொருவர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் உயர் அதிகாரியொருவர் சீனாவிற்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும். பொருளாதாரம் மற்றும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அமைச்சர் மங்கள சமரவீர, சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை…

Read More

வரிக்குறைப்பு அடிப்படையில் வாகனங்களை விற்பனை செய்யாத நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு!– நிதி அமைச்சர்

புதிய அரசாங்கம் அண்மையில் சமர்ப்பித்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் சில வகை வாகனங்களுக்கான வரியை குறைத்திருந்தது. வாகன என்ஜினின் வலு 1000ற்கும் குறைந்த வாகனங்களுக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை கொள்வனவு செய்யும் பொதுமக்களுக்கு பாரியளவில் நன்மைகள் கிடைக்கும். எனினும் ஒரு சில நிறுவனங்கள் இந்த சலுகையை வழங்குவதில்லை, சிறு தொகையை மட்டும் குறைத்து வழங்குகின்றன என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இவ்வாறு உரிய முறையில் மக்களுக்கு வாகன வரிக் குறைப்பு நலனை வழங்காத…

Read More

அமெரிக்காவில் பெண்களுக்கான மஸ்ஜித்

அமெரிக்காவில் பெண்களுக்கான மஸ்ஜித் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் விரைவாக வளர்ந்து வரும் இஸ்லாமும் ஒன்றாகும். அமெரிக்காவில் உள்ள 1,200 பள்ளிவாசல்களில் பெரும்பாலானவை கடந்த 12 ஆண்டுகளில் கட்டப்பட்டவையாகும். இதில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பெண்களுக்கான பிரத்யேக பள்ளிவாசல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மக்கள் மேன்மை ‘முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதை யாராலும் தடுக்க முடியாது’

-அஸ்ரப் ஏ. சமத்- நாட்டில் உள்ள பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகள் அணியும் ஹிஜாப் அல்லது பர்தா ஆடையை யாராலும் தடுக்க முடியாது என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவாசம் தெரிவித்தார். குறித்த ஆடையினை தடுப்பதற்கு எந்தவொரு அரசாங்க பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு எந்தவித உரிமை கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆடை முஸ்லிம் பெண்களது இஸ்லாமிய, கலை கலாசார ஆடையாகும். அதனை அவர்கள் அணிவதற்கு உரிமை உண்டு. எனினும் அதனை அணிய வேண்டாம்…

Read More

மின் கட்­டணம் குறைக்கப்படும் – பாலித ரங்கே பண்­டார

நாட்டில் பல தரப்­பி­னரும் நன்­மை­ய­டையும் வகையில் மின் கட்­டணம் மற்றும் இயந்­தி­ரங்­களை இயக்க பயன்­ப­டுத்தும் எண்­ணெயின் (எஞ்சின் ஒயில்) விலை குறைக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்கும் மின்­வலு சக்தி ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்­டார மின் இணைப்பு பெற்­றுக்­கொள்ளும் முறையும் இல­கு­வாக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்தார். கொழும்பு தெமட்­ட­கொடை இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்; நூறு நாள் வேலைத் திட்டம் வெற்றிப் பாதையில் பய­ணித்துக் கொண்­டி­ருக்­கி­றது. அதற்­கி­ணங்க நாட்டின்…

Read More

மீண்டும் இனவாதிகளின் கைகளில், ஆட்சியினை கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கமாட்டோம்

தேசிய பிரச்­சி­னை­களை தாண்டி ஒன்­று­பட்ட இலங்­கை­யினை கட்­டி­யெ­ழுப்பும் ஒரே நோக்­கத்­திற்­கா­கவே தேசிய அர­சாங்­கத்­தினை அமைத்து ஆட்சி நடத்­து­கின்றோம். சிங்­கள பௌத்த உரி­மை­களைப் போல் தமி­ழரின் உரி­மை­க­ளுக்கும் உணர்­வு­க­ளுக்கும் மதிப்­ப­ளிக்­கப்­பட வேண்டும் என ஜாதிக ஹெல உறு­மய கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். கிடைத்­தி­ருக்கும் வாய்ப்­பினை மீண்டும் சர்­வா­தி­கா­ரி­களின் கைகளில் கொடுத்து நல்­லாட்­சியின் பாதை­யினை மாற்­றி­ய­மைக்க நாம் தயா­ரா­க­வுள்ளோம் எனவும் அவர் தெரி­வித்தார். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை மீண்டும் ஆட்சி பீடத்­திற்கு கொண்டு…

Read More

மக்களுக்காக பணியாற்றவில்லை என்றால் மக்கள் அணிதிரளமாட்டார்கள் – றிஷாத் பதியுதீன்

ஊடகப் பிரிவு எந்தக்கட்சியாக இருந்தாலும் அவை மக்களுக்காக பணியாற்றவில்லை என்றால் அதன் பின்னால் மக்கள் அணிதிரளமாட்டார்கள் என சுட்டிக்காட்டியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஏனைய கட்சிகளுடன் வ ஒப்பீட்டு பார்க்கும் போது எமது கட்சிக்கு மக்கள் வழங்கிய அரசியல் பலத்தினால் ஆற்றியுள்ள பணிகளை நீங்கள் எடை போட்டு பார்க்கலாம் என மக்களிடத்தில் எடுத்துரைத்தார். வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம் பிரதேச சபைக்குட்பட்ட வாழவைத்த குளம் பஸ் தரிப்பு நிலையம்,மற்றும் பொது விளையாட்டு…

Read More

எந்த தடைகள் வந்தாலும் அவற்றை தாண்டி அதனை நாம் பெற்றுக் கொடுப்போம் – எஹியான்

ஊடகப் பிரிவு அமைச்சர் றிசாத் பதியுதீனின் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பயணத்தில் எந்த தடைகள் வந்தாலும் அவற்றை தாண்டி அதனை நாம் பெற்றுக் கொடுப்போம் என முசலி பிரதேச சபை தவிசாளர் எஹியான் தெரிவித்தார். முசலி பிரதேசத்தின் தம்பட்டை முதலியார் கட்டு கிராம பள்ளிவாசல் முன்றலில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது கலந்து கொண்டு உரையாற்றும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு மேலும் தவிசாளர்…

Read More

தையல் பயிற்சி நிலையம் திறப்பு

Shm Wajith மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்தில் உள்ள யுவதிகள் கைத்தொழில் துறையில் வேலைவாய்ப்புகளை பெற்று கொள்ளும் நோக்குடனும் கடந்த 21,22ஆம் திகதி 18 தையல் பயிற்சி நிலையங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரும்,கைத்தொழில் வாணிப துறை அமைச்சருமான றிஷாத் பதியுதின் திறந்து வைத்தார். இன் நிகழ்வில் அமைச்சர் தெரிவிக்கும் போது கடந்த காலத்தில் எமது சமுகம் பல்வேறுபட்ட அழிவுகளையும்,இழப்புகளையும் எதிர் நோக்கின சமுகமாக இருக்கின்றது. நீங்கள் எல்லோரும் மிகவும் அதிஷ்ட சாலிகள்   ஓவ்வெரு…

Read More

இவரை பற்றிய தகவலை கோருகிறது பொலிஸ்;.!

சர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான ‘வேலே சுதா’வுடன் தொடர்புடைய தலைமறை வாகியுள்ள மொஹமட் மக்கீம் மொஹமட் சித்தீக் என்பவரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்து தகவல்களை தந்துதவுமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது. தற்போது துபாய் அல்லது பாகிஸ்தானில் தலைமறைவாகியிருக்கும் மொஹமட் சித்தீக் என்பவருக்கு சர்வதேச பொலிஸாரூடாக விடுக்கப்பட்டுள்ளதுடன் இவர் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதுவாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கையில் அவரது பெயரில் அசையும் அல்லது அசையா சொத்துக்கள் இருக்குமாயின்…

Read More

கனடாவில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம சுரங்க பாதை!

கனடாவில் மர்மமான சுரங்கபாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ரொறொன்ரோவில் Pan Am விளையாட்டுக்கள் நடைபெறவுள்ள‌ இடத்திற்கு அருகே இந்த சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரொறொன்ரோவின் றெக்சால் சென்ரர் மற்றும் யோர்க் பல்கலைகழகத்தின் கீழ் வளாகம் ஆகிய பகுதிகளிற்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் இந்த சுரங்கபாதை தோண்டப்பட்டுள்ளது. இந்த சுரங்கபாதையானது ஒருவர் நிற்பதற்கு போதுமான அளவுடையதாக 2.5 மீற்றர்கள் உயரம், கிட்டத்தட்ட 7 மீற்றர்கள் நீளமுடையதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கபாதைக்குள் ஒரு ஜெனரேட்டர் மூலம் விளக்குகள் இயக்கப்படுவதுடன்…

Read More