Headlines

நீண்டகால தேவையாக இருந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு!

சாளைம்பைக்கேணி 01ஆம், 05ஆம் கொலனி (அமீர் அலி மைதானம்) பிரதேச மக்கள், மிக நீண்டகாலமாக குடிநீர் பெறுவதில் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக குழாய் கிணறை புனரமைத்து பாவனைக்கு உதவும் வகையில், செயற்படுத்த அதிக பிரயத்தனம் மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும், மயோன் சமூக சேவை அமைப்பின் தலைவருமான றிஸ்லி முஸ்தபாவின் கவனத்திற்கு இப்பிரச்சினை கிராமவாசிகளால் முன்வைக்கப்பட்டது. மக்களின் அத்தியாவாசிய தேவை…

Read More

டுபாயில் உலகின் உயரமான பார்வையாளர் தளம் திறப்பு

சர்வதேச அளவில் மிக உயரமான கட்டிடமான  துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் உயரமான  இடத்தில் பார்வையாளர் கூடம்  திறக்கப்பட்டது. இதன் மூலம் உலகின் மிக உயர்ந்த பார்வையாளர் தளம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இது கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பார்வையாளர் தளம், தரைமட்டத்திலிருந்து 555 மீட்டர் உயரத்தில் 148வது மாடியில் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பார்வையாளர்களுக்கான் தளம் 124வது மாடியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற‌ கின்னஸ் சாதனைப் புத்தக நிறுவனத்தின் மத்தியக் கிழக்கு, வட ஆப்பிரிக்க…

Read More

4 வயது சிறுமியை தாக்கிய தாய் கைது

க.கிஷாந்தன் நோர்வூட் – போற்றி தோட்டத்தில் 4 வயது சிறுமி ஒருவரை தாய் அடித்து துன்புறுத்தியமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து குறித்த தாயை நோர்வூட் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். மேற்படி தாயினால் இதற்கு முன்னரும் பல தடவைகள் இவ்வாறு சிறுமியை அடித்து துன்புறுத்தியுள்ளதாக குறித்த சிறுமியின் தாத்தா தெரிவித்துள்ளார். அதன்பின் நோர்வூட் பொலிஸாருக்கு சிறுமியின் தாத்தா செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த தாயை நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து…

Read More

வட்டக்கண்டல் வட்டாரத்தின் ஆலய வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட, வட்டக்கண்டல் வட்டாரத்தில் அமைந்துள்ள ஆலங்குளம் குழந்தை யேசு ஆலய உள்ளக வீதியை கொங்கிறீட் வீதியாக புனர்நிர்மாணிக்கும் வேலைத்திட்டம், மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஆசீர்வாதம் சந்தியோகு தலைமையில் ஆரம்பமாகியது. இந்த நிகழ்வில், மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முஜாஹிர் கலந்து சிறப்பித்ததுடன், மாந்தை மேற்கு பிரதேச சபை வட்டக்கண்டல் வட்டார உறுப்பினர்களான நைசர், செளந்தரராசா, ஆள்காட்டிவெளி வட்டார உறுப்பினர் பா.பிரபாநந்தன் மற்றும் உள்ளூர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்….

Read More

உயர் தரப் பரீட்சை குறித்து 40 முறைப்பாடுகள் : விசாரணைகள் ஆரம்பம்

க.பொ.த. உயர் தரப் பரீட்சை தொடர்பில் இதுவரை 40 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார். பரீட்சையின்போது மோசடியில் ஈடுப்பட்ட மாணவர்கள் தொடர்பிலேயே குறித்த முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Read More

அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் சிறு தையல் தொழிட்சாலை பயிற்சி நிலையம் , பயிற்சிகள் ஆரம்பம்.

சிறு தையல் தொழிட்சாலை பயிற்சி நிலையம் , பயிற்சிகள் ஆரம்பம். கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாட் பதீயுதீன் அவர்களால் திருகோணமலை மாவட்ட யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கானதிட்டத்தின் கீழ் சுய தொழிலை உருவாக்கிகொடுக்கும் நோக்கில், சிறு தையல் தொழிட்சாலை பயிற்சி நிலையங்கள், நேற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் அவர்களினால் கிண்ணியா , தம்பலகமம் பிரதேசங்களில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துவைக்கப்ட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் தம்பலகாமம் பிரதேச சபை…

Read More

புதிய தேர்தல் முறைமையை உடனடியாக அமுல்படுத்த முடியாது: மஹிந்த தேசப்பிரிய

புதிய தேர்தல் முறைமை ஒன்று அறிமுகம் செய்த உடனேயே அந்த முறைமையின் கீழ் தேர்தல் நடத்துவது ஜனநாயகமாகாது. புதிய தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்பட்டால் அது குறித்து மக்களை தெளிவுபடுத்த வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் ஒராண்டு காலமேனும் தேவைப்படும். புதிய தேர்தல் முறைமை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டால் அது குறித்து ஆராய்வதற்கு குறைந்த பட்சம் ஓராண்டு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். புதிய தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்பட்டால் அதனை அமுல்படுத்த எமது திணைக்களம் அர்ப்பணிப்புடன் செயற்படும்…

Read More

ஹமாஸ், அக்ஸாவை மீட்பதில் திட்டவட்டம்

– அபூஷேக் முஹம்மத்- பாலஸ்தீன முக்கிய போராட்ட அமைப்புகள் ஹமாஸ்,  பத்தாஹ் , இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புக்கள் இடையே லெபனானில் சந்திப்பு நடந்தது. சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் விவரமாவது, தற்பொழுது இஸ்ரேலுக்கு எதிராக நிகழும் பாலஸ்தீனர்களின்  மூன்றாம் கல் புரட்சிப் போராட்டத்தை சிறப்பாக வழிநடத்திச்செல்ல வேண்டும். அனைத்து அமைப்புகளும் ஒற்றுமையாக செயல்பட்டு  பாலஸ்தீன விடுதலைக்கு போராட வேண்டும் . அந்த வெற்றி மஸ்ஜித் அல்-அக்ஸாவை மீட்டப்படுப்பதில்  இருக்க வேண்டும். பாலஸ்தீனத்தில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின்  புனித…

Read More

அமெரிக்க சிறந்த ஆடை தேர்வில் முஸ்லிம் பெண் முதலிடம்!

ஹிஜாபை வெறுத்து அரைகுறையை ஆடையை ரசித்து ருசித்து பார்க்கும் கலியுகத்தில் ஓர் ஆச்சர்யம்..! மாஷா அல்லாஹ்! பலஸ்தீனத்தை பூர்வீகமாக கொண்ட அஃப்ரார் ஸஹின் என்னும் மாணவிக்கு சிறந்த ஆடை அணிந்த பெண் எனும் கெளரவ பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், பல்லின நாட்டு, பல்லின மதங்களை சேர்ந்த 1000 கணக்கான மாணவிகள் கல்வி கற்கும் Clifton high school ல் நடந்த சிறந்த ஆடை அணியும் தேர்வில்தான் அஃப்ரார் ஸஹின் எனும் பலஸ்தீன மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். “ஹிஜாபை…

Read More

என் நண்பனை புதைக்க நானே குழி தோண்டினேன் – ரோஹிங்க்யா முஸ்லிம் சகோதரர் கண்ணீர் ரிப்போட்

அபுஷெய்க் முஹம்மது 1.ஒரு வருடத்திற்கு முன்பு ரோஹிங்க்யா முஸ்லிம்களை கடத்திய கொடுமைக்காரர்களை விட்டும் அவர்களின் முகாம்களை விட்டும் தப்பி சென்று இருக்கின்றார் தோஹா . 2.தோஹா மற்றும் அவருடைய நண்பர்கள் முகாம்களை கண்காணிக்கும் நபர்களால் கொடூரமான முறையால் இரும்புத்தடி மற்றும் கட்டையால் பெற்ற தாக்குதல் பொறுக்க முடியாமல் தப்பிச்சென்று உள்ளனர் . 3.அடர்ந்த காட்டுப்பகுதியான மலேசியா -தாய்லாந்த் நாட்டின் எல்லையோரப் பகுதிகளான வாங் கெலிஅன் என்ற இடத்தில் முகாம்கள் அமைக்கப்பட்டு இந்த கொடுமைகள் அரங்கேறி உள்ளன ….

Read More

இந்நாட்டில் முஸ்லிம்களின் இருப்பை, அபிலாசைகளை, உரிமைகளை தக்க வைப்பதற்கு அரசியல் தேவையான விடயமாக காணப்படுகின்றது எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

இந்நாட்டில் முஸ்லிம்களின் இருப்பை, அபிலாசைகளை, உரிமைகளை தக்க வைப்பதற்கு அரசியல் தேவையான விடயமாக காணப்படுகின்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். குருநாகல் மாவட்டத்தில்; சிறிய ஆடை தொழிற்சாலைகள் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்! தனது கட்சிக்காரர் வெல்லாவிட்டாலும் பரவாயில்லை வேறு கட்சிக்காரர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று சில…

Read More

பொருட்களின் விலைகள் குறையும் சாத்தியம்

சீன சந்தையின் வீழ்ச்சியினாலும் எரிபொருளுக்கான கேள்வியில் ஏற்பட்ட வீழ்ச்சியினாலும் இலங்கையில் பெரும்பாலான பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடையுமென நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் பால்மாவின் விலை பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளபோதும் இலங்கைச் சந்தையில் ஓரளவு விலைக்குறைப்பையே பால்மாவிற்கு மேற்கொள்ள முடியுமென நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. கொழும்பில் அமைந்துள்ள நுகர்வோர் அதிகார சபை அலுவலகத்தில் புதன்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஆர்.எம்.கே. ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.(tkl)

Read More