Headlines

‘ஸ்திரமான ஆட்சியே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவும்’ புல்மோட்டையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

-ஊடகப்பிரிவு- அரசாங்கம் இன்று விழுந்துவிடும், நாளை விழுந்துவிடும் என ஊடகங்கள் கட்டியங்களையும், ஊகங்களையும் வெளிப்படுத்தி வரும் நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாட்டின் ஸ்திரமான ஆட்சி ஒன்றையே வலியுறுத்துவதாக அக்கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கை கனிய மணல் நிறுவனத்தின் 60 வது வருடப் பூர்த்தியை முன்னிட்டு, நேற்று மாலை (01) புல்மோட்டையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஆட்சியின் ஸ்திரம்…

Read More

நாட்டின் நலன் கருதி எவருடனும் இணையத் தயார்-பிரதமர்

நாட்டின் நலன் கருதி அரசாங்கம் எந்தக்கட்சியுடனும் இணைந்து செயற்பட தயாராக இருக்கிறது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை அதிகரிக்கும் நோக்கில் பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபோதே  இந்தக் கருத்தை வெளியிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது ஜே.வி.பி என்று எந்தக்கட்சி முன்வந்தாலும் அந்த கட்சிகளுடன் இணைந்து செயற்பட அரசாங்கம் தயாராகவுள்ளது. மற்றவர்கள் அனைவரும் எதிர்ப்பை வெளியிடும்போது அரசாங்கம் மாத்திரமே திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை…

Read More

குளியாப்பிட்டிய பிரதேச சபையை மொட்டும், மயிலும் இணைந்து கைப்பற்றியது! பிரதித் தவிசாளராக மக்கள் காங்கிரஸ் இர்பான்!

-ரிம்சி- குருநாகல் மாவட்ட குளியாப்பிட்டிய பிரதேச சபையின் ஆட்சியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் (மொட்டு), அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றிக்கொண்டது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த (மொட்டு) விஜயசிறி ஏக்கநாயக்க 21 வக்குகளைப் பெற்று தவிசாளராகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த எம்.சி.இர்பான் எதுவித போட்டியுமின்றி, ஏகமனதாகப் பிரதித் தவிசாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.   தவிசாளரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மஹிந்த புஷ்ப குமார 16 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டார்….

Read More

நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு துணிகர தலைமை அமைச்சர் றிஷாத் பதியுதீன் -அமீர் அலி

இர்ஷாத் றஹ்மத்துல்லா தேசியத்தில் ஒரு மாற்றத்தை செய்து காட்டியவர்கள் முஸ்லிம்கள்.மஹிந்த ராஜபக்ஷ என்கின்றவர் இந்த நாட்டில் நீ்ண்ட நாட்களாக ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைத்த போது இந்த நாட்டு மக்கள் அந்த மனிதரை மாற்ற வேண்டும் என்று நினைத்த போது அதற்கு முதன் முதலில் முஸ்லிம்கள் ரீதியில் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியவர் எமது கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பது தான் உண்மை என்கின்றார் சமூர்த்தி,வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி. குருநாகலயில்…

Read More

பெயருக்காக பணியாற்றும் கட்சியல்ல மக்கள் காங்கிரஸ். முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவிப்பு.

ஊடகப்பிரிவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது பெயரில் மாத்திரமின்றி கொள்கையிலும் மக்களுக்காகவே பணியாற்றி வருவதாக  முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தேவன்பிட்டி கிராமத்திற்கான தேவாலய சுற்றுப்புற பற்றைக்காடுகளை துப்பரவு செய்யும் நிகழ்வு  மாந்தை பிரதேச சபைத் தவிசாளர் ஆசிர்வாதம் சந்தியோகு தலைமையில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்… தமிழ், முஸ்லிம், என்ற இன வேறுபாடு, மத வேறுபாடு, மொழி வேறுபாடு என்ற…

Read More

மன்னார் பிரதேசபைக்குட்பட்ட கிராமங்களின் வீதிப்புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பிரதேசபை எல்லைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு,பேசாலை மற்றும் சிறுதோப்பு கிராமங்களின் வீதிப்புனரமைப்பு வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.. இந்த நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியோக செயலருமான றிப்கான் பதியுதீன் மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர் மற்றும் மன்னார் மாவட்ட இளைஞ்சர் விகாரபொறுப்பாளர் முனவ்பர் பிரதேசபை உறுப்பினர்கள் கட்சி முக்கியஸ்தர்கள் ஊர்மக்களும் கலந்துகொண்டார்…

Read More

ISIS இற்கு எதிரான யுத்தத்தில் சிங்கப்பூர்!

திங்கட்கிழமை சிங்கப்பூர் அரசு ஈராக் மற்றும் சிரியாவில் ISIS இற்கு எதிரான போரில் தனது பங்களிப்பையும் நல்கப் போவதாக அறிவித்துள்ளது.ஏற்கனவே ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த முக்கிய சில நாடுகளும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு அரபு தேசங்களும் ISIS மீது வான் தாக்குதல்களைத் தீவிரப் படுத்தி வருகின்றன. தரை வழியாக ஈராக்கின் குர்து பேஷ்மெர்கா படையும் தாக்குதலைத் தொடுத்து வருகின்றது. இந்நிலையில் மத்திய கிழக்கில் ISIS உடன் போராடி வரும் சர்வதேச கூட்டணி நாடுகளுக்கு ஆலோசகர்கள் அளித்தல்…

Read More

பஸ் கட்டணங்களையும் குறைக்க நடவடிக்கை

தனியார் பயணிகள் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுன விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார். கட்டணங்கள், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அட்டவணைகளின் அடிப்படையில் குறைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2013ஆம் ஆண்டு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில் கடந்த வருடம் தனியார் பயணிகள் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஒஸ்ரியா பயணம்

எ.எச்.எம்.பூமுதீன் கைத்தொழில், வாணிபத்துறை அமைச்சரும் அ.இ.ம.கா. தேசிய தலைவருமான றிஷாத் பதியுதீன் இன்று (03/11/2014) அதிகாலை ஒஸ்ரியா பயணமானார். ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு ஏற்பாடு  செய்துள்ள கைத்தொழில் அபிவிருத்தி மாநாடொன்றில் கலந்துகொள்ளும் பொருட்டே அமைச்சர் ஒஸ்ரியா பயணமானார். ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் பணிப்பாளர் நாயகத்தின் அழைப்பை ஏற்று சென்றிருக்கும் அமைச்சர், நாளை (04/11/2014) இடம்பெறும் குறித்த மாநாட்டில் இலங்கையின் கைத்தொழில் துறையின் தற்கால செயற்பாடுகள், கைத்தொழில் துறையில் இலங்கை  அடைந்துவரும் முன்னேற்றங்கள்,…

Read More

ஜனாதிபதி செயலகத்தினுள் CSN அலுவலகம் கண்டுபிடிப்பு

கொழும்பு, கோட்­டையில் அமைந்­துள்ள ஜனா­தி­பதி செய­ல­கத்­தினுள் சீ.எஸ்.என் தொலைக்­காட்சி நிறு­வ­னத்தின் அலு­வ­லகம் ஒன்றும் இயங்கி வந்­துள்­ளமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் காலத்தில் இந்த அலு­வ­லகம் ஜனா­தி­பதி சர்­வ­தேச ஊடகப் பிரிவு என்ற பெயரில் இயங்­கி­வந்­துள்­ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் புதல்வர்களான நாமல் ராஜ­பக்ஷ, யோஷித்த ராஜ­பக்ஷ, மற்றும் சில யுவ­திகள் மட்­டுமே இங்கு வந்­து­போ­யுள்­ளனர். எனினும் ஜனா­தி­பதி ஊடகப் பிரி­வுடன் எந்த வகை­யிலும் தொடர்­பு­ப­டாத நிலையில் இயங்கி வந்த இந்த அலு­வ­ல­கத்தின் மூலம் நடை­பெற்ற…

Read More

மக்கள் காங்கிரசின் கிழக்குமாகாண இளைஞர் அமைப்பாளர் முசர்ரப் தலைமையில் பொத்துவில் கிளையின் விசேட கூட்டம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பொத்துவில் கிளையின் விஷேட கூட்டம் 2019-04-07 அன்று மாலை, அதன் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர், சட்டத்தரணி முசர்ரப் அவர்களின் தலைமையில் அவரின் இல்லத்தில் இடம் பெற்றது. நள்ளிரவு வரை தொடர்ந்த கூட்டத்தில், அ.இ.ம.கா பிரமுகர்கள், அரசியல் ஆர்வலர்கள், புத்திஜீவிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள், வர்த்தகர்கள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர். கூட்டத்தில் கட்சியினால் முன்னெடுக்கப்படுகின்ற, முன்னெடுக்கப்பட இருக்கின்ற அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியும் எதிர்வரும் தேர்தல்களை…

Read More

சு.கவின் கலவான தொகுதி அமைப்பாளர் இராஜினாமா

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கலவானத் தொகுதி அமைப்பாளர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக வக்கும்புர இராஜினாமா செய்துள்ளார்.

Read More