Headlines

மூன்று இலங்கையர்கள் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டனர்!

யேமனில் இடம்பெறும் மோதலால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் மூவர் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்தோனேஷிய படகினால் குறித்த இலங்கையர்கள் அழைத்துவரப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும் இலங்கையர்கள் ஐவரை பாதுகாப்பாக அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Read More

சிகரெட் புகையை சுவாசிப்பவர்களுக்கு பக்கவாத நோய்!

புகை பிடிப்பதினால் பின்வரும் பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவ உலகம் கூறுகிறது. •∗ காச நோய் •∗ நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் •∗ இருதய நோய் மற்றும் குருதிக் (இரத்தக்) குழல் நோய் •∗ புற்று நோய் •∗ ஆண்மை குறைவிற்கான சாத்தியக் கூறுகள் .இந்நிலையில் புகைப்பழக்கம் இல்லாத அதே சமயம் சிகரெட் புகையை சுவாசிப்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 30 சதவீதம் அதிகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. தென் கரோலினா மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் 22…

Read More

சந்திரிக்காவுக்கு, அமைச்சர் றிஷாத் அனுப்பிய கடிதம்

மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறையில் அமைந்துள்ள கடற்படைத்தளத்தினை வேறு இடத்திற்கு இடமாற்றுவதன் மூலம், அப்பிரதேச மக்களும், வர்த்தகர்களும் சுதந்திரமாக செயற்படுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும், அதேவேளை இப்பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் வந்து குடியமர முடியும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன், தேசிய ஐக்கியம், மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அமைப்பின் தலைவியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமைச்சர் றிஷாத்…

Read More

மன்னார் மாவட்டத்தில் முதலாவதாக துணிச்சலுடன் மீள்குடியேறிய மக்கள் புதுக்குடியிறுப்பு மக்கள் – அமைச்சர் றிஷாத்

இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார் மாவட்டத்தில் முதலாவதாக துணிச்சலுடன் மீள்குடியேற்றத்தை சந்தித்த மக்கள் புதுக்குடியிறுப்பு மக்கள் என பாராட்டு தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்.வணித் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் சில நாட்கள் அரசியல் பதவி இல்லைாமல் இருந்ததால் இந்த மக்களுக்கு கிடைக்கவிருந்த வீடமைப்பு திட்டத்தினையும் திருப்பி அனுப்பிய சம்பவத்தையும் காணமுடிந்ததாகவும் கூறினார். மன்னார் மாவட்டத்தில் புதுக்குடியிறுப்பு கிராமத்தில் இடம் பெற்ற அல்-ஹாபிழ் பட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு…

Read More

அஸ்கிரிய பீடத்தின் புதிய மகாநாயக்கராக ஞானரத்ன தேரர் தெரிவு

பௌத்த பீட சியாமோபாலி மகா நிகாயாவின் அஸ்கிரிய பிரிவின் அனுநாயகத் தேரரான வண. வரகாகொடை ஞானரத்தன தேரர் இன்று மாலை  அஸ்கிரிய பீடத்தின் 22 வது மகாநாயக்கத் தேரராக தெரிவு செய்யப்பட்டார். அஸ்கிரிய பீடத்தின் பௌத்த தேரர்களது நிர்வாக சபையினர் ஒன்று கூடி அவரைத் தெரிவு செய்தனர்.  ஆஸ்கிரிய பீடத்தின் 21 வது மகாநாயக்கராக பதவிவகித்து மரணமான கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி அவர்களது இடத்திற்கே இவர் 22 வது மகாநாயக்கராகத் தெரிவானார். ராஜகருனா நவரத்தன அத்தபத்து வாசல…

Read More

உஸ்தாத் மன்ஸூர் எழுதிய குர்ஆனிய சிந்தனை நூல் வெளியீட்டு விழா

– டீன் பைரூஸ் – காத்தான்குடி சமாதான ஒன்றியம் ஏற்பாடு செய்த உஸ்தாத் மன்ஸூர் எழுதிய குர்ஆனிய சிந்தனை தப்ஸீர் நூல் வெளியீட்டு விழா றாபிதத்தூன் நளீமிய்யீன் உடைய தலைவர் அஷ்ஷெய்ஹ் எஸ்.ஏ.கே. அப்துர் றாசீக் (நளீமி) தலைமையில் 16.10.2015 வெள்ளியிரவு காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் இடம் பெற்றது. இலங்கையின் வரலாற்றில் முதன் முதலாக எழுதப்பட்ட அல்குர்ஆன் விளக்கவுரை நூலான ‘குர்ஆனிய சிந்தனை’ எனும் நூல் இரண்டாவது வெளியீடாக காத்தான்குடியில் வெளியிடப்பட்டது. இதன் முதலாவது வெளியீடு கொழும்பில் இடம்…

Read More

கடத்தப்பட்ட எகிப்து விமானம் சைப்பிரஸில் தரையிறங்கியது

எகிப்தின் அலெக்ஸான்டிரியாவிலிருந்து புறப்பட்டு கெய்ரோவுக்குச் சென்று கொண்டிருந்த விமானம் கடத்தப்பட்டு, சைப்ரஸின் லர்னாகா விமானநிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்படி விமானத்தில் 80க்கு மேற்பட்டோர் உள்ளதாகவும், அதில் ஒருவர் ஆயுதங்களுடன் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

“பாடசாலையின் பொருளாதார நிலை பின்தங்கிய நிலையில் காணப்பட்டாலும் மாணவர்களின் கல்வி நிலையானது மிகவும் பாராட்டத்தக்கது” – இஷாக் எம்.பி!

அனுராதபுர மாவட்டம், மதவாச்சி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மஹ சியம்பலகஸ்கட அல்/அக்‌ஷா பாடசாலையின் சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (06) பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது. குறித்த பாடசாலைக்கு சுற்று மதில் இல்லாத காரணத்தினால் பாடசாலை சொத்துகளுக்கு விலங்குகளின் தொந்தரவுகள் மிக நீண்டகாலமாக நிலவி வந்தது. இது தொடர்பில், பாடசாலை சமூகத்தினர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானிடம் எடுத்துரைத்து, இதற்கான தீர்வினைப் பெற்றுத்தரும்படி வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவர்களின்…

Read More

டிசம்பர் 23, 24 இல் தபால் மூல வாக்களிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு டிசம்பர் 23 ஆம், 24 ஆம் திகதிகளில் நடைபெறுமென தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார். தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே கோரப்பட்ட நிலையில் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். இதேபோல ஏனைய வாக்காளர் பட்டியல்கள் அந்தந்த கிராம சேவகர் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள்…

Read More

இனவாத சக்திகளுக்கு எதிராக முழு முயற்சிகளையும் எடுத்து வருகின்றோம்-அமைச்சர் ரிசாத்

நாடு பிளவு படக்கூடாது என்பதற்காகவே வடமாகாண முஸ்லிம்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடவில்லை ஆனால் இன்று யுத்தம் நிறைவுக்கு வந்து ஓரளவு சமாதானக் காற்றை சுவாசிக்கலாம் என்ற வேளையில் சமயத்தைப் பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் இனவாதம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மிக மோசமாக திசை திருப்பப்பட்டு வருகின்றமை வேதனை அளிக்கின்றது. பொதுபல சேனா உள்ளிட்ட சில இனவாதக் குழுக்களின் செயற்படுகளே இதற்கு முக்கிய காரணங்களாகும். இவர்களால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற் கொள்ளப்படுகின்ற எல்லாவற்றையும் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு…

Read More

ஹக்கீம், ரிஷாட், அசாத் சாலி ஜனாதிபதியை சந்தித்து பேச்சு

நுரைச்சோலை வீட்டுத்திட்டம், மௌலவி ஆசிரியர் நியமனம் உட்பட முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் சிக்கலான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி திட்டவட்டமான முடிவுகளை மேற்கொண்டுள்ளார். தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத்சாலியின் வேண்டுகோளுக்கிணங்க இன்று மாலை ஆசாத்சாலி உட்பட அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் ஆகிய மூவரையும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து பேச்சு நடத்திய போதே, அவர்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தார். கடந்த மே மாதம் 12ஆம் திகதி ஆசாத்சாலி ஜனாதிபதிக்கு அனுப்பி…

Read More