மண் அகழப்படுவதை உடனடியாக நிறுத்தப்படவேண்டும் கோறளைப்பற்று மத்தி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் .எம். எஸ்.எஸ்.அமீர் அலி
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலைக்காடு குளத்தில் மண் அகழப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோறளைப்பற்று மத்தி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோரின் இணைத் தலைமையில் திங்கட்கிழமை (25.09.2017) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பாலைக்காடு குளத்தில் மண் அகழப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் மண் அகழ்வதற்கு வழங்கப்பட்ட இடத்தில் மண் அகழாமல் அதனை…
