Headlines

யானை தாக்கி ஆசிரியர் இர்பான் வபாத்

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நைனாகாடுப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை காலை யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கருவாக்கல் பகுதியைச் சேர்ந்த கலந்தர்லெப்பை முஹம்மத்தம்பி முஹம்மத் இர்பான் (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் இறக்காமம், வரிப்பத்தாஞ்சேனையிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்பிக்கின்றார். நைனாகாடு பள்ளக்காடு பகுதியிலுள்ள தனது வயலுக்குச் சென்றபோதே, இவர் யானையின் தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

நாடு திரும்பினார் பிரதமர்.!

சீனாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை 12.15 மணியளவில் நாடு திரும்பியுள்ளதாக, எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை மீள ஆரம்பித்தமை, அதன் அருகில் விஷேட பொருளாதார வலயத்தை நிறுவுதல் போன்ற தீர்மானங்களுக்கு, சீனப் பிரதமர் மற்றும் ஜனாதிபதி இந்த சந்தர்ப்பத்தில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

VIDEO- முத்து முஹம்மட் எம்.பியின் பாராளுமன்ற கன்னி உரை!

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நோன்பு காலத்தில் வருவதால், முஸ்லிம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால், அரசாங்கம் இதுதொடர்பில் கருத்திற்கொண்டு, பரீட்சை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான M.I.முத்து முஹம்மட் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (07) இடம்பெற்ற, வருட ஆரம்ப நிதிநிலை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு, தனது கன்னி உரையை ஆற்றுகையிலேயே, மேற்கண்டவாறு தெரிவித்தார்….

Read More

மக்களுக்கு சேவை செய்வதே இஸ்லாமிய அரசின் நோக்கம் மக்கள் சேவையில் அலட்சியம் காட்டும் எவருக்கும் எனது அமைச்சரவையில் இடமில்லை சவுதி மன்னர் சல்மான் அதிரடி

சவுதி அரேபியாவின் சுகாதார துறை அமைச்சராக இருந்தவர் அஹ்மத் கதீப் இவர் சவுதி அரேபியவின் தென்பகுதியில் உள்ள மருத்துவமனைகளை பராமரிப்பதில் அலட்சியம் காட்டினார் என்றும் அவரை சந்திக்க விரும்பிய பொது மக்களை சந்திக்க மறுத்தார் என்றும் அவரின்மீது சுமத்த பட்ட குற்றசாட்டு மன்னர் சல்மானின் கவனத்திர்கு கொண்டு செல்ல பட்டதை தொடர்ந்து அவரை அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கி விட்டு முஹம்மது என்பவரை புதிய சுகாதரா துறை அமைச்சர் மன்னர் சல்மான் நியமித்துள்ளார் பொது மக்களுக்கு சேவை…

Read More

ராஜிவ் காந்தியை தாக்கியவர்தான், பொதுபல சேனாவின் தலைமை வேட்பாளர்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியைத் தாக்கிய இலங்கை கடற்படையின் முன்னாள் சிப்பாய் விஜித் ரோகண விஜேமுனி கம்பஹா மாவட்டத் தலைமை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார். பொது பல சேனாவின் அரசியல் கட்சியான பொது ஜன பெரமுன (பி.ஜே.பி) சார்பிலேயே இவர் கம்பஹா மாவட்ட தலைமை வேட்பாளராக போட்டியிடுகிறார். அதேவேளை, BJP கட்சியின் தேசிய அமைப்பாளர் வண.விதாரந்தெனிய நந்த தேரர், கொழும்பு மாவட்டத்தில் தலைமை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார்.

Read More

பாவம் காதர் ஹாஜியார்!

இரண்டு மாத கால­மாக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த நான் உயி­ருடன் இருக்­கின்­றேனா அல்­லது இறந்து விட்­டேனா என்று கூட எனது கட்­சிக்­கா­ரர்கள் எவரும் கண்டு கொள்­ள­வில்லை, என்னை எட்­டியும் பார்க்­க­வில்லை என கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.ஆர்.எம்.காதர் தெரி­வித்தார். கண்­டி­யி­லுள்ள அவ­ரது செய­ல­கத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் கூறு­கையில், கடந்த 27 வரு­டங்­க­ளாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்து வரு­கின்­ற­போதும் என்னை எவரும் தேடிப்­பார்க்­க­வில்லை தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டுள்ள அதில்…

Read More

ரமழான் மாதத்தில் தாக்குதல் மைத்திரி கண்டனம்

ஆப்கானிஸ்தான் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலை இலங்கை அரசாங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சார்க் வலய அங்கத்தவ நாடொன்றின் நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வருந்தத் தக்கது என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான தாக்குதல்கள் காரணமாக ஆப்கானிஸ்தானின் ஜனநாயகத்தை சீர்குழைக்க முடியாது என என அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த நாட்டின் செயற்பாடுகளை ஸ்தம்பிதமடைய செய்யும் முயற்சியாக இது அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Read More

தாருல் உலூம் வித்தியாலய மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு

ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயத்தில் 2018, 2019 ஆம் ஆண்டுகளில் தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதி சித்தியடைந்த மற்றும் சிறப்புப் புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (29) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.எல்.எம். பைசல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதோடு ஏனைய அதிதிகளாக  மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, மட்டக்களப்பு மத்தி…

Read More

கைப்பையுடன் கண்டெடுத்த பெறுமதியான பொருட்களை உரியவரை தேடி ஒப்படைத்த வண்டித் தொழிலாளி எஸ்.எம்.பரீத்.. இலங்கையில் தான்

தோப்பூர் சந்தைக்கு அருகில் வைத்து காணாமல் போன கைப் பையிலிருந்த பெறுமதியான பொருட்களை கண்டெடுத்து உரியவரிடம் மாட்டு வண்டில் தொழிலாளி ஒருவர் ஒப்படைத்தச் சம்பவ ஒன்று இன்று செவ்வாய் கிழமை தோப்பூர் பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. -தோப்பூர் நிருபர் நஹீம் முஹம்மட் புஹாரி- தோப்பூர் பொதுச் சந்தையில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக செல்வநகர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்ற போது அவரின் கை பையிலுந்த 7500 ரூபா பணம்,கையடக்க தொலைபேசி1,வங்கியில் அடகு வைத்த இரண்டு அடகு…

Read More

மதில் விழுந்ததில் 16 மாணவர்கள் காயம்

லுணுகல முஸ்லிம் வித்தியாலத்தின் மதிலொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சரிந்து விழுந்ததில், பாடசாலைக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று லுணுகல பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலையில் இடம்பெற்ற மேலதிக வகுப்புக்கு வந்திருந்த மாணவர்களே இந்த அனர்த்தத்தில் சிக்கிக்கொண்டனர். பாதிக்கப்பட்ட மாணவர்களில் நால்வர், மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Read More

வெல்பொதுவெவ இளைஞர்களுக்கான ஒன்றுகூடலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸில் இனைவு மற்றும் வட்டாரக்கிளை அமைக்கும் நிகழ்வும்.

நிகவெரட்டிய தேர்தல் தொகுதிக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிமுகம் மற்றும் வட்டாரக் கிளை அமைக்கும் நிகழ்வுமும் நேற்று (03) மாவட்டத்தலைவரும் சதொச பிரதித்லைவரும் , முன்னால் மாகாணசபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் தலைமையில்  நடைபெற்றது. கொபோகன பிரதேசசபைக்கு உற்ப்பட்ட வல்பொதுவெவ பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அதிகமான இளைஞர் யுவதிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸில் இனைந்து கொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கினங்க குருநாகல் மாவட்டத்தில் அகில…

Read More

ஐ.எஸ் களைக் காட்டி இந்நாட்டு முஸ்லிம்களை பயங்காட்ட முயற்சி

வடக்கில் புலிகளைக் காட்டி தெற்கிலுள்ளவர்களை தூண்டிவிடுவதற்கும், வெளிநாட்டிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்.  பயங்கரவாதிகளைக் காட்டி இந்நாட்டு முஸ்லிம்களை அச்சமூட்ட முனைவதற்கும் சிலர் முயற்சித்து வருகின்றனர் என ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க  தெரிவித்தார். “சலகுன” எனும் தனியார் தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார். இந்த நாட்டை சமஸ்டியாக மாற்றுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்க மாட்டோம். வடக்கிலுள்ள தமிழர்கள் தெற்கிலுள்ள சிங்களவர்களை ஒதுக்கி தனியாக பிரிந்து நின்று வாழ்வதற்கு…

Read More