Headlines

மூன்று ஆசனங்கள் கொண்ட பேருந்துகளை தடை செய்யக் கோரிக்கை

கடந்த காலங்களில் இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மூன்று ஆசனங்களைக் கொண்ட பேருந்துகளை தடை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளின் ஆசனங்களால் பொது மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. இந்த விசாரணைகளுக்காக பிரதி மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் மற்றும் மத்திய போக்குவரத்துச் சபை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தப் பேருந்துகள் தூர பயணங்களுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் எனவும் இனிமேல் இவ்வாறான பேருந்துளை இறக்குமதி செய்வது தடை செய்யப்படும் எனவும்…

Read More

கிணற்றில் விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை பரிதாபமாக பலி…!!

ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை கிணற்றில் விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளது. பாலாவி வடக்கு கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த இராசசேகரன் கோபினா பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது. தாயார் கிணற்றடியில் பாத்திரங்கள் கழுவிக்கொண்டிருந்த போது, குழந்தை தாய்க்கு முன்பாக நின்று விளையாடிக் கொண்டிருந்துள்ளார். சிறிது நேரத்தின் பின்னர் குழந்தையை காணவில்லை என தாயார் அயல் வீடு முழுவதிலும் தேடிய போது குழந்தையை காணவில்லை. பின்னர் கிணற்றிற்குள் பார்த்த போது, குழந்தை கிணற்றில் சடலமாக மிதந்துள்ளது. குழந்தை கிணற்றிற்குள் விழுந்து உயிரிழந்தமை…

Read More

மன்னார் ஆயர் இல்லம்,திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சஜித் பிரேமதாச விஜயம்!!!

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று காலை (08) மன்னார் ஆயர் இல்லம்,திருக்கேதீஸ்வர ஆலயம் ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டார். அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரிலேயே இந்த விஜயம் அமைந்தது. ஆயர் இல்லத்திற்கு விஜயம் செய்த சஜித் பிரேமதாச குழுவினர் மன்னார் ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை சந்தித்து பேசினார்.சுமார் அரைமணிநேரம் நீடித்த இந்த சந்திப்பில் மன்னார் மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.சஜித் பிரேமதாசவுக்கு மன்னார் ஆயர்,ஆசி வழங்கினார். இதன் பின்னர் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு…

Read More

உயர்மட்ட தூதுக்குழுவை அனுப்பவுள்ள இலங்கை

– ரொபட் அன்டனி – ஜெனிவாவில் எதிர்வரும் ஜூன் மாதம்  13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்  32 ஆவது  கூட்டத் தொடரி்ல்  அமைச்சர்கள்  மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான தூதுக்குழுவை பங்கேற்கவைப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்திவருகின்றது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவமிக்கதாக கருதப்படுவதால்  அரசாங்கம் உயர்மட்ட தூதுக்குழுவை அனுப்பவுள்ளது. குறிப்பாக  32 ஆவது கூட்டத் தொடரில்   இலங்கையின் உள்ளக…

Read More

5000 ரூபாய் போலி பணத்தாள் பாவணையாளர் கைது

5000 ரூபாய் போலி பணத்தாள் கொடுத்து சிக்கரட் பெற்ற சந்தேக நபர் சிசிடிவி காணொளி   மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். வரகாபொல வர்த்தக நிலையமொன்றில் கடந்த 7 ஆம் திகதி இவர் குறித்த போலி பணத்தாள் பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. அலவ்வ பிரதேசத்தினை சேர்ந்த 23 வயதான நபரே குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

நீர்ப்பாசன, குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட அரச அதிபர்களின் பங்கேற்புடன் உயர்மட்டக் கூட்டம்! முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவு!

வன்னி மாவட்டத்தின் நீர்ப்பாசனத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தடைகளைத் தீர்க்கும் வகையில், ஒருமாத காலத்துக்குள் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு அரசாங்க அதிபர்கள் பங்கேற்கும் உயர்மட்டக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து, உரிய தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் முன்வைத்த ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான அங்கீகாரமும் வழங்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று காலை (25) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில், அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வடமாகாண முதலமைச்சர்…

Read More

பொலிஸாருக்கு புதிய சீருடை – பிரதமர்

இலங்கை பொலிஸாருக்கு புதிய சீருடையை அரசு அறிமுகப்படுத்த இருப்பதாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார். மேலும் பொலிஸாருக்காக புதிய பல சேவைகளை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

Read More

கம்மன்பிலவின் கருத்தால் சபையில் கடும் சர்ச்சை

நாட்டை பிரிக்க ஆயுத முனையில் முடி­யாது போனதால் அர­சியல் ரீதி­யாக அதனை முன்­னெ­டுக்க ஆயுதக் குழுக்­களின் அர­சியல் பிர­திநி­திகள் முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­வ­தாக உதய கம்­மன்­பில எம்.பி. நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தெரிவித்ததால் முதல் நாள் சபை அமர்­வி­லேயே சர்ச்சை தலை­தூக்­கி­யது. இவ்­வாறு சபையில் ஆயு­தங்கள் தொடர்­பாக உரை­யாற்ற முடி­யாது என உதய கம்­மன்­பில எம்.பி.யின் உரைக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது எதிர்ப்பை வெளி­யிட்டார். எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தின்முத­லா­வது சபை அமர்வு, சபா­நா­ய­க­ராக தெரி­வான கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் நேற்று இடம் பெற்­றது. இதன்…

Read More

அகமதுவை ஃபேஸ்புக் அலுலகத்துக்கு அழைக்கும் FACEBOOK மார்க்!

இடது: மாணவர் அகமது | வலது: மார்க் ஸக்கர்பெர்க் | கோப்புப் படங்கள் கடந்த சில தினங்களாக சிறுவன் அகமது குறித்த செய்திகள் பரவலாக பேசப்படுகின்றன. அமெரிக்காவில் வசிக்கிறார் சிறுவன் அகமது. இவர் கைக்கடிகாரம் ஒன்றை தானே செய்து அதை பள்ளிக்கு எடுத்துச் சென்றததற்காக போலீஸாரால் கைவிலங்கிடப்பட்டவர். எல்லாம் ‘பெயர்க்காரணம்’ என சமூகவலைத்தளங்களில் பலர் கொந்தளித்துக் கொண்டிருக்க ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் ரத்தினச் சுருக்கமாக ஒரு ஸ்டேட்டஸ் போட்டு தனது ஸ்டேட்டஸை நிரூபித்துள்ளார். இதோ அந்த…

Read More

நிந்தவூர் மாட்டு வண்டில் உரிமையாளர் சங்கத்தினருடனான கலந்துரையாடல்!

நிந்தவூரில் செயற்படும் மாட்டு வண்டில் உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை (08) தவிசாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, மாட்டு வண்டில் உரிமையாளர்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களது வாழ்வாதார முன்னேற்றம் தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. -முர்ஷித்-    

Read More

சிரிய உள்நாட்டுப் போரில் 190 000 பேர் பலி

2011 மார்ச் மாதம் அமைதியான முறையில் சிரியாவில் ஆரம்பித்த மக்கள் புரட்சி உள்நாட்டுப் போராக வெடித்ததில் இதுவரை பலி எண்ணிக்கை 191 000 ஐத் தாண்டி விட்டதாகவும் கடந்த வருடம் பலி எண்ணிக்கை முன்னைய் வருடத்தின் இரு மடங்கை விட அதிகமாக இருந்ததாகவும் வெள்ளிக்கிழமை ஐ.நா இன் மனித உரிமைகள் அலுவலகம் அறிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் தலைமை அதிகாரி நவிபிள்ளை சிரியாவில் இந்த தீவிர மனிதப் படுகொலை நிகழ்ந்ததற்கு முக்கிய காரணமாக மேற்குலகின் அலட்சியப்…

Read More

எபோலாவைக் கட்டுப்படுத்த பேஸ்புக் நிறுவுநர் உதவி

கொடிய உயிர்க்கொல்லி நோயான எபோலாவை கட்டுபடுத்த போராடும் நாடுகளுக்கு பேஸ்புக் நிறுவுநர் மார்க் ஷுக்கர் பெர்க் ரூ.150 கோடி நிதி உதிவி அளிக்க போவதாக அறிவித்துள்ளார். எபோலா நோய் தாக்கி மேற்கு ஆபிரிக்க நாடுகளில் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயரிழந்ழள்ளனர். 9,000 பேர் அந் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எபோலா பரவாமல் தடுக்க உலக சுகாதார நிறுவனம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் எபோலா நோய் தாக்கி மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளான கினியா, லைபீரியா,…

Read More