Headlines

பொய் சொல்கிறார் நாமல் : பொலிஸ் பேச்சாளர் கூறுகின்றார்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பொய்யுரைப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர குற்றம் சுமத்தியுள்ளார். அண்மையில் ஹம்பாந்தோட்டை அங்குனுகொலபெலஸ்ஸவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டமொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்தார். இந்தக் கூட்டத்திற்குள் இராணுவ கேப்ரல் ஒருவர் ஆயுதத்துடன் பிரவேசித்து ஜனாதிபதிக்கு அருகாமையில் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த இராணுவ கோப்ரல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் எனவும், அன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின்…

Read More

வீடொன்றின் மீது மண் மேடும் கற்பாறையும் சரிந்து வீழ்ந்ததில் தாயும் குழந்தையும் பலி

பசறை பிபிலேகம பகுதியில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக இரவு 8.00 மணியளவில் பசறையில் உள்ள வீடொன்றின் மீது மண் மேடும் கற்பாறையும் சரிந்து வீழ்ந்துள்ளது. கற்பாறை சரிந்து வீழ்ந்தபோது வீட்டுக்குள் இருந்த 2 பெண்களும், 8 மாத குழந்தையும் படுகாயமடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது 54 வயதான பெண்ணும், 8 மாத குழந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், 22 வயது பெண் தொடர்ந்தும் பசறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் தொடர்பில்…

Read More

வெகுசன ஊடகச் சீர்திருத்தங்கள் தொடர்பான தேசிய மாநாடு இன்றும் நாளையும்

கருத்து வெளியிடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் எமது நாட்டின் ஊடகத்துறையினை அபிவிருத்தி செய்வதற்கான முறையினை உருவாக்கும் நோக்கிலும் வெகுசன ஊடகச் சீர்திருத்தங்கள் தொடர்பான தேசிய மாநாடு இன்றும் (13) நாளையும் (14) கொழும்பு சிறிலங்கா பவுன்டேஸன் இன்சிரியுற்றில் (Sri Lanka Foundation Institute) இடம்பெறவுள்ளது. இம் மாநாட்டினை வெகுசன ஊடாக அமைச்சு, கொழும்பு பல்கலைக்கழகம், இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், சர்வதேச ஊடக ஒத்துழைப்பு (IMF) ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இம்மாநாட்டின் இறுதி அமர்வு நாளை 14…

Read More

தமிழக அகதி முகாம்களில் வாழ்ந்த 65 இலங்கையர்கள் இன்று நாடு திரும்புகின்றனர்

நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவியபோது, தென்னிந்தியாவிற்கு சென்று, அங்கு தங்கியிருந்த 65 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பவுள்ளனர். தமிழகத்தின் அகதி முகாம்களில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த இவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய தலையீட்டினால், நாடு திரும்பவுள்ளனர். இலங்கையர்கள் இரண்டு விமானங்கள் மூலம் இன்று முற்பகல் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த இந்த மக்கள், அவர்களின் சொந்த இடங்களில்…

Read More

கையும் களவுமாக பிடிபட்ட அதிபர் இறுதியில் உண்மையை ஒத்துக் கொண்டார்

பிள்ளையை பாடசாலையில் சேர்த்து கொள்வதற்காக அவருடைய அம்மாவிடம் பாலியலை இலஞ்சமாக கேட்டேன் என்ற குற்றச்சாட்டை, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து, அதிபர் ஏற்றுக்கொண்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அயிராங்கனி பெரேரா முன்னிலையில், தனது குற்றத்தை ஏற்றுக்கொண்ட அதிபருக்கு எதிரான வழக்குக்கு தீர்ப்பு வழங்குவதற்காக, நீதிபதி அந்த வழக்கை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். இந்த தாய், தன்னுடைய பிள்ளையை பாடசாலையில் சேர்த்துகொள்வதற்காக கொட்டாவை பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலைக்கு சென்றுள்ளார். அச்சந்தர்ப்பத்தில், தன்னுடன் ஹோட்டலுக்கு வருவதற்கு…

Read More

இலங்கை அதிபர் சேவை தரம் III போட்டிப் பரீட்சைக்கான வழிகாட்டல் செயலமர்வு -கண்டி

இலங்கை அதிபர் சேவையின் 3 ஆம் வகுப்பில் நிலவும் 4431 வெற்றிடங்களை நிரப்புவதற்காக மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை நாட்டின் சகல பாகங்களிலும் யூலை மாதம் நடைபெறவுள்ளது. கிரகித்தல், பாடசாலை நிருவாகம் மற்றும் பொதுஅறிவு, (நூண்ணறிவு உற்ட்பட) ஆகிய 3 பாடங்களில் 5 மணித்தியாலங்கள்  நடைபெறும் இப்பரீட்சைக்காக  ஆசிரியர்களைத் தயார் படுத்தும்  நோக்கில் தலைசிறந்த வளவாளர்களைக் கொண்டு பரீட்சை வழிகாட்டி செயலமர்வுகளை “Young Friends” அமைப்பு  ஏற்பாடு  செய்துள்ளது. ஒரு சமூக சேவை அமைப்பாகச் செயற்படும் “Young Friends” இலங்கை நிர்வாக…

Read More

மீண்டும் நேபாளத்தை உலுக்கிய 7.3 ரிக்டர் நிலநடுக்கம்: பலி 42 ஆக உயர்வு

நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8 ஆயிரம் பேரை இழந்து, அதன் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் படிப்படியாக மீண்டு வரும் நிலையில் நேற்று மீண்டும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதியம் சுமார்12.30 மணியளவில் தலைநகர் காத்மாண்டில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் வடகிழக்கு பகுதியில் 7.3-ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 22 ஆக இருந்தது…

Read More

நேபாளத்தில் 8 பேருடன் அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர் மாயம்

நிலநடுக்கத்தால் பாதிக்கபட்ட பகுதியில் நிவாரண பணியில் ஈடுப்பட்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அதில் பயணம் செய்த 8 பேருடன் மாயமாகியுள்ளது. அமெரிக்க கடற்படை கேப்டன் கிறிஸ் சிம்ஸ் தெரிவித்துள்ள தகவலின் படி ஹ்யூ என்ற அந்த ஹெலிகாப்டர் செவ்வாய்க்கிழமை அன்று நேபாளத்தின் சாரிகோட் அருகே நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த்து. அப்போது ஹெலிகாப்டரில் 6 அமெரிக்க கடற்படையினர் மற்றும் 2 நேபாள ராணுவ வீரர்கள் இருந்துள்ளனர். மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணியும், காணாமல் போனதற்கான காரணம் குறித்தும்…

Read More

1959 இல் பண்டாரநாயக்காவை படுகொலை செய்தது போன்று, மைத்திரியை படுகொலைசெய்ய முயற்சி – ராஜித சேனாரத்ன

-எம்.ஏ. எம். நிலாம்- ஜனாதிபதியின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக  நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்த சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன, அன்று 1959 பண்டாரநாயக்கா படுகொலை செய்யப்பட்டது போன்றதொரு முயற்சி இன்றும் காணப்படுவதால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய பாரிய கடப்பாட்டை மக்கள் கொண்டிருப்பதாக தெரிவித்தார். நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற சர்வதேச தாதியர் தின வைபவத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அண்மைக் காலமாக சில சக்திகள் ஜனாதிபதி…

Read More

சம்மாந்துறை ; அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மக்கள் சந்திப்பு

கலைமகன்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கட்சியின் கொள்கை விளக்கம் மற்றும்  மக்கள் சந்திப்போன்று அண்மையில்  சம்மாந்துறையில்  இடம்பெற்றது. இந்த சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சர்வதேச விடயங்களுக்கான பணிப்பாளரும் கிழக்கு மாகாண அமைப்பாளருமான  கணணி  பொறியலாளர் அன்வர் எம் முஸ்தபா கலந்துகொண்டார். 100க்கும் அதிகமான தமிழ் ,முஸ்லிம் பெண்களை உள்ளடக்கிய மகளிர் அமைப்பொன்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த மக்கள் சந்திப்பில் மக்களின் மத்தியில் தற்போதைய சூழ்நிலையில் எமது சமுகத்தின் தேவைப்பாடுகள் சம்பந்தமாகவும் எதிர்வரும்…

Read More

திருமலை ஊடகவியலாளர் யாசீம் தாக்கப்பட்டமைக்கு கிழக்கு ஊடக சங்கம் கண்டனம்

திருகோணமலை மாவட்ட செய்தியாளரான அப்துல் சலாம் யாசீம் செய்தி சேகரிக்கச் சென்ற வேளையில் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டமை குறித்து கிழக்கு ஊடக சங்கம் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. கிழக்கு ஊடக சங்கத்தின் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், பொதுச் செயலாளர் வி. பத்மசிறி ஆகியோர் கைnழுத்திட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள இக்கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திருகோணமலை, ரொட்டவௌ மதரசா மண்டபத்தில் நடைபெற்ற விவசாய சங்கத்தின் கூட்டத்திற்கு செய்தி சேகரிப்பதற்காகச் சென்றிருந்த திருகோணமலை மாவட்ட செய்தியாளர் அப்துல் சலாம் யாசீம்…

Read More

வில்பத்து விவகாரம் விளக்கமளிக்கும் நிகழ்வு வெள்ளவத்தையில்

ஏ.எஸ்.எம்.ஜாவித் கடந்த 25 வருடங்களாக அகதிகளாக இருந்து தற்போது மன்னார் சிலாவத்துறைப் பகுதியில் மீள் குடியேறும் மக்கள் வில்பத்துக் காணிகளை சட்ட விரோதமாக பிடிக்கின்றார்கள் என பல ஊடகங்களில் இனவாதிகள் பொய்ப்பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அதன் உண்மை நிலைகளை கண்டறிய “உடநடித் தீர்வுக்கான குழு” எனும் அமைப்பு சிலாவத்துறைப் பகுதிக்கு நேரடியாகச் சென்று அதன் அறிக்கைகளை பொதுமக்கள், கல்விசார் சமுகம், புத்தி ஜீவிகள், ஊடகவியலாளர்கள், சட்ட அறிஞர்கள் என்போருக்கு விளக்கும் நிகழ்வு RRTஅமைப்பின் தலைவர் சட்டத்…

Read More