Headlines

‘பொலிஸார் மீது உரிய நடவடிக்கை’ முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் உறுதி! இன்று மாலை மீண்டும் பேச்சு!

-சுஐப் எம்.காசிம்- அம்பாறையில் பள்ளிவாசல் மீதும், முஸ்லிம்களின் சொத்துக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களோடு தொடர்புபட்ட சந்தேகநபர்களுக்கு, பொலிஸார் பிணை வழங்க உடந்தையாக இருந்தமை மற்றும் அவர்களின் பாரபட்ச நடவடிக்கைகள் குறித்தும், சற்று முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஷிம் ஆகியோர் கடுந்தொனியில் சுட்டிக்காட்டிய போது, இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு, அம்பாறை பொலிஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் உறுதியளித்தார். சிரேஷ்ட பிரதி…

Read More

எனக்கு எதிரான முறைப்பாட்டை துரிதமாக விசாரிக்குக – அமைச்சர் றிஷாத்

ஊடகப் பிரிவு எனக்கு எதிராக ,லஞ்சம் அல்லது ஊழல் சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டை அவசரமாக விசாரணை செய்து நாட்டு மக்களுக்கு முடிவுகளை அறிவிக்குமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஆணைக்குழு தலைவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிராக இன்று வியாழக்கிழமை (06) ,லஞ்சம் அல்லது ஊழல் சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதற்கு இணங்கவே அமைச்சர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் அவ் விசாரணைக்காக…

Read More

சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படையினர் ஒத்திகை

இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படையினரின் ஒத்திகை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினம் நாளை மறுதினம் கொண்டாடப்படவுள்ளது. காலி முகத்திடலில் இடம்பெறவுள்ள இவ்வைபவத்திற்கான முப்படையினரின் ஒத்திகைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், கொழும்பின் பிரதான மற்றும் குறுக்கு வீதிகளில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

உலகில் முதல் ஜன்னல் இல்லாத விமானம் தயார்

உலகிலேயே முதன்முறையாக ஜன்னல் இல்லாத,  பயணிகள் வான்வெளியைப் பார்த்து ரசிக்கும் வகையில் வடி வமைக்கப்பட்ட விமானம் பயன் பாட்டுக்குவரவுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த புத்தாக்க செயல்முறை மையம் (சிபிஐ) என்ற நிறுவனம், விமானத்தின் ஜன்னல்களுக்கு பதிலாக எடை குறைவான ஸ்மார்ட்ஸ்கிரீனை பொருத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் எரிபொருள் செலவு மிச்சமாவதால், விமானக் கட்டணமும் குறையும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கிரீனுக்கு வெளிப்புறத்தில் கேமராக்கள் பொருத்தப்படும். இத்துடன் ஆர்கானிக் ஒளி உமிழும் டயோடு (ஓஎல்இடி) தொழில் நுட்பத்தின் மூலம்…

Read More

மண்முனை தென் மேற்கு பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

மண்முனை தென் மேற்கு   பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி  பாராளுமன்ற உறுப்பினர் அமல்  ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் திருமதி தினேஷ்   அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் , கிழக்கு  மாகாண சபை விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம்   மாகாண சபை உறுப்பினர்களான துரைரெட்னம், வெள்ளிமலை, பிரசன்னா ,…

Read More

வெளிநாடு வாழ் தொழிலாளர் சகோதரர்களே !

– எம்.வை.அமீர் – இனி நமக்காக நாமே பேசுவோம். வெளிநாடுகளில் பணி புரியும் அப்பாவி இலங்கை ஏழைத் தொழிலாளர்களின் நலன்களைப் பற்றி சிந்தித்தவர் எவருமில்லை. மத்திய கிழக்கில் மாத்திரம் சுமார் ஏறத்தாள 15 லட்சம் இலங்கை தொழிலாளர்கள் இருக்கின்றனர். மாறி மாறி எத்தனை ஆட்சிகள் தோன்றினாலும் எந்தவொரு அரசாங்கமும் எமது விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்ததுமில்லை . எனவே நாம் வாக்களிக்கும் வசதியைப் பெற்றுக்கொண்டால் மட்டுமே , அரசாங்கமோ அல்லது அரசியல் கட்சிகளோ, இந்த புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குகளை மையமாகக்கொண்டு,…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு மக்கள் அமோக ஆதரவு

அமைச்சர் றிஷாட் பதியுதீனை கொழும்பு மக்கள் அங்கிகரித்துள்ளனர் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பலத்த போட்டிக்கு மத்தியில் முதல் முறையாக தனது சொந்த சின்னத்தில் தனித்து களமிறங்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி 15491 வாக்குகளைப்பெற்று மேல்மாகாண சபையில் ஆசனமொன்றினை கைப்பற்றியுள்ளது.  கடந்த காலத்தில் இடம்பெற்ற இனவாத அடக்குமுறைகளுக்கு எதிராக செயற்படுவதற்கு மக்களின் ஆணையை கோரிய கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களுக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் என்பது யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாதவொன்று என…

Read More

வட்டமடு விவசாயிகளுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, வட்டமடு காணியில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோர் நேற்று மாலை (14) சந்தித்துக் கலந்துரையாடினர்.                  

Read More

கொரியாவில் நடைபெற்ற இலங்கை கலாசார நிகழ்வு!

தென்கொரியாவில் இலங்கை நாட்டின் கலை கலாசார நிகழ்வொன்று கடந்த 11 ஆம் திகதி சியோல் கிரான்ட் பார்க்கில் நடைபெற்றது. கொரியாவின் இலங்கைக்கான தூதரகமும், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகமும் இணைந்து ஏற்பாடு செய்த இவ் கலாசார நிகழ்வில் கடந்த 2010 ஆம் ஆண்டு இலங்கை நாட்டினால் தென்கொரியாவுக்கு வழங்கப்பட்ட இரண்டு யானைக்குட்டிகளின் பிறந்தநாள் நிகழ்வும் கொண்டாடப்பட்டது. இலங்கை நாட்டின் கலாசார அம்சங்களை கொரிய விருந்தினர்கள் மற்றும் சிறுவர்களுடன் பல்வேறுபட்ட வழிகளில் பரிமாற்றி நாட்டின் கலாசாரத்தினை ஒருங்கிணைப்பதே இந்நிகழ்வின்…

Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் தனித்தும், இணைந்தும் போட்டியிட்டு 159 ஆசனங்களை தனதாக்கிக்கொண்டுள்ளது… பல சபைகளின் ஆட்சியும் அமைச்சர் ரிஷாட்டின் கட்சியின் வசமாகின்றது…

-ஊடகப்பிரிவு-   அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 15 மாவட்டங்களில் போட்டியிட்டு சுமார் 159க்கு மேற்பட்ட உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, புத்தளம், அனுராதபுரம் மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய 09 மாவட்டங்களில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் களமிறங்கியது. மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளில் 34 ஆசனங்களையும், வவுனியா மாவட்டத்தில் 17 ஆசனங்களையும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 ஆசனங்களையும், யாழ்…

Read More

அல்கொய்தாவுடன் தொடர்பான இலங்கையர்;மரண தண்டனை விதிக்கப்பட்டு நாட்டை விட்டு ஓடிய முன்னாள் அரசியல்வாதி

மலேஷியாவிலிருந்து புதன்கிழமை நாடு கடத்தப்பட்ட மொஹமட் ஹுசைன் மொஹமட் சுலைமான் என அடையாளம் காணப்பட்ட, அல்கொய்தாவுடன் தொடர்பான இலங்கையர், 2002 இல் செய்யப்பட்ட கொலைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நீர்கொழும்பு மாநகரசபை உறுப்பினர் என விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. அப்போது, ஆட்சியிலிருந்த மக்கள் கூட்டமைப்பின் பிரதிநிதியாக அவர் 1998 தொடக்கம் 2002 வரையான காலப்பகுதியில் நீர்கொழும்பு மாநகரசபை  உறுப்பினராக இருந்துள்ளார். நால்வருடன் சேர்ந்து 2002 இல் ஒரு முஸ்லிம் வர்த்தகரை கொலை செய்த இவர், நாட்டை விட்டு ஓடினார்….

Read More

பொதுபல சேனா இரகசிய கூட்டம்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் முக்கிய பிக்குகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை நேற்று காலை தியவன்னா தியத்த பூங்காவில் நடைபெற்றுள்ளது. பொதுபல சேனா அமைப்பின் எதிர்காலத் திட்டம் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறித்த அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகேவும் இக் கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளார்.

Read More