‘தமிழில் தேசியகீதம் இசைக்கப்போவதில்லை என தம்பட்டம் அடித்து பேரினவாதிகளை திருப்திப்படுத்த முயற்சி’ – ரிஷாட்
சுதந்திர தினத்தன்று தமிழிலே தேசியகீதம் இசைக்கப்போவதில்லை என மமதையுடனும் பெருமையுடனும் பெரும்பான்மை இனத்தை திருப்திப்படுத்துபவர்கள், தமிழ் பேசும் சமூகத்துக்கும் தமிழுக்கும் எவ்வாறு அந்தஸ்தை வழங்கப் போகிறார்கள்? என்று முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கேள்வியெழுப்பினார். முசலி, காயக்குழி கிராம மக்களுடன் இன்று (02) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது உரையாற்றிய அவர், மேலும் கூறியதாவது, “அரசியலமைப்பில் தமிழும் சிங்களமும் அரசகரும மொழியாகும் என குறிப்பிடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட போதும், இந்த அரசு தமிழை இரண்டாந்தர மொழியாக, வேண்டாவெறுப்புள்ள மொழியாக பாராமுகமாக…
