Headlines

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தேவையற்ற வீதி சோதனை சாவடிகளை அகற்றி பாதுகாப்பு கெடுபிடிகளிலிருந்தும் கிண்ணியாவில் உள்ள சிற்பி தொழில்களை செய்ய அனுமதியளியுங்கள்_பாராளுமன்றத்தில் அப்துல்லாஹ் மஃறூப் எம்.பி

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தேவையற்ற வீதி சோதனை சாவடிகளை அகற்றுவதுடன் பாதுகாப்பு கெடுபிடிகளிலிருந்தும் நிம்மதியாக வாழ வழி விடுங்கள் என தெரிவித்த திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் கிண்ணியாவில் உள்ள சிற்பி தொழிலாளர்களுக்கான அனுமதியினை முன்னையவாறு பிரதேச செயலாளருக்கு அதன் நிருவாக முறையையையும் வழங்க வேண்டும் . பாதுகாப்பு படையினர் சிற்பி தொழிலாளர்களிடம் கைப்பற்றிய பொருட்களை அவர்களிடம் மீள ஒப்படையுங்கள் எனவும் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கேட்டுக் கொண்டார். பிரேரனை ஒன்றின் போது நேற்று…

Read More

தோப்பூர் அல் ஹம்ரா மத்திய கல்லூரியின் ஆறாந்தர புதிய மாணவர் அனுமதி ஆரம்ப நிகழ்வு

தோப்பூர் அல் ஹம்றா மத்திய கல்லூரியில் தரம் ஆறு புதிய மாணவர்களை வரவேற்கும் விழா இடம் பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தோப்பூர்  வட்டாரக் குழு தலைவர் முஜாஹித் தலைமையில் இன்று (06) நடைபெற்ற இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னால் துறை முகங்கள் கப்பற் துறை பிரதியமைச்சரும்,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் அவர்கள் கலந்து சிறப்பித்தார். பாடசாலை மாணவர்கள் பாராளுமன்ற உறுப்பினரை உற்சாக வரவேற்பளித்தார்கள். பாடசாலை வளாகத்தில் இதன் போது மரம்…

Read More

தோப்பூர் நூரிய்யா அறபுக் கல்லூரிக்கு புதிய நிருவாக கட்டிடமும் தளபாடங்கள் வழங்கும் நிகழ்வும்

தோப்பூர் நூரிய்யா அறபுக் கல்லூரிக்கான புதிய நிருவாகக் கட்டிடமும், தளபாடங்கள் கையளிக்கும் வைபவமும் இன்று இடம் பெற்றது.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தோப்பூர் வட்டாரக் குழு தலைவரும் முன்னால் வேட்பாளருமான முஜாஹித் தலைமையில் இடம் பெற்ற இவ் வைபவத்தில் முன்னால் துறை முகங்கள் கப்பற் துறை பிரதியமைச்தரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் அவர்கள் கலந்து சிறப்பித்தார் பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து 5 இலட்சம் ரூபா செலவில் நிருவாக அலுவலகமும்…

Read More

விஜேதாச ராஜபக்சவின் வெட்டுப் புள்ளி தொடர்பான பிரேரனை தோற்கடிக்கப்படும்,சிறிய கட்சிகளுக்கும் பாதிப்பு_ முன்னால் துறை முகங்கள், கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் எம்.பி

முன்னால் அமைச்சர் விஜேதாச ராஜபக்சவினால் கொண்டுவரப்படுகின்ற பிரேரனைகள் தோற்கடிக்கப்படும் 19 ஆவது திருத்தங்கள் 20,21 ஆவது திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்பது நாடாளுமன்றில் தோற்கடிக்கப்படும் என முன்னால் துறை முகங்கள் கப்பற் துறை பிரதியமைச்சரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். முள்ளிப்பொத்தானையில் இன்று (05) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில் இவரினால் கொண்டு வரப்படும் விகிதாசார தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்களின்…

Read More

“மீள்குடியேற்றம் மற்றும் தீர்வு முயற்சிகள் தொடர்பில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை” பாராளுமன்றில் ரிஷாட்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் உட்பட நிரந்தரமான தீர்வு முயற்சிகள் குறித்து, ஜனாதிபதியின் அக்கிராசன உரையில் குறிப்பிடப்படாமை வேதனையளிப்பதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், முஸ்லிம்கள் குறித்த சரத் பொன்சேகாவின் உரை கண்டனத்துக்குரியது எனவும் குறிப்பிட்டார். ஜனாதிபதியின் அக்கிராசன உரை தொடர்பில், பாராளுமன்றத்தில் இன்று (08) உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர்  ரிஷாட் பதியுதீன் மேலும் கூறியதாவது, “ஜனாதிபதியின் அக்கிராசன உரையிலே சொல்லப்பட்ட நல்ல விடயங்களை நாங்கள் வரவேற்கின்றோம். நானும் எனது கட்சியும்…

Read More

‘சிறுபான்மையினரின் அரசியல் பலத்தை தகர்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்’ மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு!

சிறுபான்மை சமூகத்தின் அரசியல் பலத்தை தகர்ப்பதற்கான பேரினவாத சிந்தனைகளின் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார் சிறுபான்மை சமூகத்தின் குறிப்பாக, முஸ்லிம் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதும் அதன்மூலம், சமூகத்துக்காக குரல்கொடுக்கும் பிரதிநிதிகளின் குரல்வளையை நசுக்குவதுமே இவர்களின் உள்ளார்ந்தத் திட்டம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். முசலியில் நேற்று (01) இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உரையாற்றினார். அவர் மேலும் கூறியதாவது, “வரவிருக்கின்ற பொதுத்…

Read More

சாதனை மாணவி முஷாதிகாவை நேரில் சென்று மனமாற வாழ்த்துக்களைத் தெரிவித்தார் முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்!!!

இவ்வருடம் வெளியிடப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் விஞ்ஞானப் பிரிவில்  மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று வைத்தியத் துறைக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் திருகோணமலை மாவட்டம் மூதூர் சாபி நகரை சேர்ந்த மாணவி எம்.எப் முஸாதிகாவின் வீட்டுக்கு  நேற்று மாலை (28. 12. 2019) முன்னாள்  பிரதி அமைச்சர்  அப்துல்லா மஹ்ரூப் எம்.பி அவர்கள் நேரில் சென்று குறித்த மாணவிக்கும் அம்மாணவியின் பெற்றோருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு பரிசில்களையும் வழங்கி கௌரவபடுத்தி உள்ளார். குறித்த மாணவி எதிர்காலத்தில்…

Read More

குச்சவெளியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பதிவு செய்யப்பட்டு தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்கள் மற்றும் சங்கங்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது நேற்று (24) குச்சவெளி பிரதேச செயலகத்தில் வைத்து பிரதேச செயலாளர் தனேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றுள்ளது. இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் துறை முகங்கள் கப்பற் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து   பாராளுமன்ற உறுப்பினரால் உரிய உபகரணங்கள்…

Read More

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மு.கா. மற்றும் அ.இ.ம.கா இணைத்து புத்தளமாவட்டத்தில் போட்டியிடுவது தொடர்பான கலந்துரையாடல்

எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் புத்தளம் தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,கூட்டிணைவு சம்பந்தமான முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த   (23) புத்தளம் நகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இப்பேச்சுவார்த்தையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவட்ட அமைப்பாளர் கே.ஏ.பாயிஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம்,கட்சியின் பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியா,மற்றும் இரு கட்சியினதும் புத்தள மாவட்ட உயர்பீட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Read More

ரிஷாத் பதியுதீன் CIDயினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு விடுவிப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் எம்.பி. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஒன்றுக்கு இன்று சி .ஐடியினரால் அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார். நீண்ட நேரம் இடம்பெற்ற இந்த விசாரணையின் பின்னர் அவர் வெளியேறினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு தொடர்பு இருப்பதாக இனவாத சக்திகளும் சில கடும்போக்குவாத பெளத்த தேரர்களும் தொடர்ந்தேர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருவதுடன் அவரை விசாரணைக்குட்படுத்தி கைது செய்யுமாறு தொடர்ந்து வலியுறுத்தியும் வலுவான போராட்டம்…

Read More

ஒட்டமாவடி பல நோக்கு கூட்டுறவு சங்க பாலர் 36வது பாடசாலை மாணவர் வெளியேற்று விழா நிகழ்வு 21.12.2019 தலைவர் ஜிப்ரி கரீம் தலைமையில் இடம்பெற்றது .

ஒட்டமாவடி பல நோக்கு கூட்டுறவு சங்க பாலர் 36வது பாடசாலை மாணவர் வெளியேற்று விழா நிகழ்வு 21.12.2019 தலைவர் ஜிப்ரி கரீம் தலைமையில் இடம்பெற்றது . இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளர் காதர், முன்னாள் முகாமையாளர் முஸ்தபா , உதவி தலைவர் நியாஸ் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Read More

அரச அதிபர்களிடம் முன்னாள் அமைச்சர் றிஷாட் வேண்டுகோள்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம் மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவுகளை வழங்கி வைக்குமாறும் அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக நிற்கும் மக்களுக்கு உதவுமாறும் முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். புத்தளம் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் இந்த அவசர வேண்டுகோளை அவர் விடுத்திருப்பதுடன். வெள்ளத்தின் காரணமாக அழிவுக்குள்ளானோரின் சொத்துக்களுக்கான நஷ்டஈட்டை வழங்க வேண்டுமெனவும் அரசையும் வேண்டியுள்ளார். “பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மாத்திரமன்றி மழைநீர் காரணமாக நிரம்பிய…

Read More