பாகிஸ்தான்: பலி எண்ணிக்கை 141ஆக உயர்வு (வீடியோ இணைப்பு)
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில், வார்சாக் ரோட்டில் ராணுவ பப்ளிக் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்திற்குள் ராணுவ சீருடை அணிந்த, அரபி மொழி பேசிய 6 தற்கொலைப்படை தீவிரவாதிகள், நுழைந்து, ஈவிரக்கமின்றி அப்பாவி மாணவ, மாணவிகள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார்கள். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நேரத்தில் பள்ளிக்கூடத்தில் 500 மாணவர்களும், ஆசிரியர்களும் இருந்தனர். தீவிரவாதிகள்தான் தாக்குதல் நடத்துகிறார்கள் என்பதை உணர்ந்த ஆசிரியர்கள் உஷார் ஆனார்கள். மாணவர்களை தரையில் படுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினர். பல மாணவர்கள் பள்ளிக்கூடத்தின் பின்புற…
