Headlines

ஹம்பாந்தோட்டை வாடி வீடு திறப்பு

-எம். இஸட். எம். இர்பான்- ஹம்பாந்தோட்டை வாடி வீடு சபாநாயகர் சமல் ராஜபக்ஸவினால் நேற்று திறந்துவைக்கப்பட்டது. மாநகர மேயர் எராஜ் ரவீந்திர தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெரும் திரளானோர் கலந்துசிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.  

Read More

ஜனாதிபதியின் கிளிநொச்சி விஜயம் ஒரே பார்வையில்…

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவினர் வரவேற்றனர். உலங்குவானூர்தியில் நேற்றய தினம் வந்திறங்கிய ஜனாதிபதி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வரவேற்றார்.                       இக்குழுவில் வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், பாராளுமன்ற உறுப்பினர்களான சில்வேஸ்த்திரி அலென்ரின் (உதயன்) உனைஸ் பாரூக்,…

Read More

கலிமாச்சொன்னது தவறா? கண்ணீர் சிந்தினார் இஷாக் எம்.பி

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டில் இப்பொலோகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கல்லஞ்சியாகம அ/கல்லஞ்சியாகம அரபா முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிய வகுப்பறைக்கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் இன்று பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் நடப்பட்டது. பாடசாலை அதிபர் எஸ்.எ.நுவைஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இப்பொலோகம பிரதேச சபை உறுப்பினர் நளீம், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் ஊர்மக்கள் பலரும் கலந்துகொண்டனர். குறித்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இஷாக்…

Read More

தபால் விநியோகம் சீர்குலைவு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தபால் திணைக்களத்தின் பணிகள் பெரும்பாலும் சீர்குலைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கொட்டும் கடும் மழை காரணமாக அப்பகுதிகளில் விநியோகிக்க வேண்டிய தபால் பொதிகள் மற்றும் கடிதங்கள் தற்போது தபால் திணைக்களத்தின் தலைமையகத்தில் தேங்கத் தொடங்கியுள்ளன. நேற்று மாலை வரை சுமார் ஐந்து லட்சம் கடிதங்களும் பொதிகளும் தேங்கியிருப்பதாக தபால் திணைக்களத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இவற்றில் சாதாரண தபால் பொதிகள் மட்டுமன்றி பதிவுத் தபால் பொதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது….

Read More

சுயதொழில் பயிற்சிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட சுய தொழில் பயிற்சிகளை நிறைவு செய்தவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள  இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழ் மற்றும் தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (27) காலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளர் ரிப்கான் பதியுதீன் கலந்துகொண்டார். சர்வதேச தொழில் அமைப்பின் (ஐ.எல்.ஓ) நிதி உதவியுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரனையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள…

Read More

மூன்று அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள மூன்று அமைச்சுக்களுக்கு புதிதாக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர்  பீ.பி.அபேகோனிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். வெளிவிவகார அமைச்சு, பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு மற்றும்  தபால் சேவைகள் அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக்களுக்கே புதிதாக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக திரு.எசல வீரகோன் நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் இராஜதந்திர சேவையில் உள்ள சிரேஷ்ட அதிகாரியான எசல வீரகோன், 1988இல் வெளிவிவகார சேவையில் இணைந்துகொண்டதுடன் அவர்…

Read More

மோடி இலங்கை வரப் போகிறாரார் – சுவாமி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வருட ஆரம்பத்தில் இலங்கைக்கு வரலாம் என பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்துள்ள 4வது பாதுகாப்பு கருத்தரங்கு நேற்று கொழும்பில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.  இதில் கலந்துகொண்ட சுப்ரமணியன் சுவாமி ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிடும் போதே இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை இந்த நவம்பர் மாதமளவில் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விஜயம் செய்வார் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.  இலங்கை…

Read More

இலங்கை -இந்தியா அணு ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா வரவேற்பு

சர்வதேச அணு சக்தி முகாமை விதிகளுக்கு அமைய பாதுகாப்பாகவும் ஏனைய சர்வதேச வரம்புகளுக்கு உட்பட்டும் இந்த உடன்டிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என அமெரிக்கா இராஜாங்க திணைக்களப் பேச்சாளர் ஜென் ப்சக்கி தெரிவித்துள்ளார். இலங்கை – இந்திய அணு ஒப்பந்தம் குறித்து தாம் விழிப்புடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் இந்தியாவுடன் அணுசக்தி உள்ளிட்ட நான்கு அம்ச உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

தமிழக மீனவர்களுக்கு நாளை விடுதலை

இருவேறு குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மூன்று பேர் நாளை (13) புதன்கிழமை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். மீனவர்கள் மூவரும் நாளை காலை 8.00 மணிக்கு இலங்கைக் கடற்படையினரின் பாதுகாப்பில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதுவர் நடராஜன் தெரிவித்தார். குறித்த மீனவர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டமை மற்றும் கடற்படையினரின் படகுகளை சேதப்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டனர். தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று மீனவர்களும் இரண்டு…

Read More

இலங்கையுடனான உறவு நிலைத்திருக்கும்: மோடி

இந்தியா இலங்கை இடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா சார்பில் 50.61 கோடி ரூபாய் செலவில் புதிய ஆம்புலன்ஸ்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டன. இந்த திட்டத்தின் தொடக்க விழா நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதற்கு பிரதமர் நரேந்திரமோடி வீடியோ செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: இந்தியா உதவியுடன் இலங்கையின் பல பகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியா இலங்கை இடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும். இவ்வாறு மோடி…

Read More

“மக்கள் ஆணையை உரிய முறையில் நாட்டுத் தலைவர்கள் நிறைவேற்றத் தவறினால், தேர்தலில் தக்கபாடம் கிடைக்கும்” வரக்காபொலையில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- நல்லாட்சிக்குக் கிடைத்த மக்கள் ஆணையை ஜனாதிபதியும், பிரதமரும் உரிய முறையில், நிறைவேற்றத் தவறினால் அடுத்த தேர்தலில் நாட்டு மக்கள் தகுந்த பாடத்தைக் கற்பிப்பர் எனவும், ஆட்சியில் எஞ்சியிருக்கும் காலத்தையாவது மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயற்படுமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாசவின் வேண்டுகோளின் பேரில், கைத்தொழில், வர்த்தக அமைச்சினூடாக வாழ்வாதார உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வு வரக்காப்பொலயில் நேற்று (30) இடம்பெற்ற போது, பிரதம…

Read More

சவுதி அரேபியாவில் 10 ஆயிரம் அறைகளுடன் அமைய உள்ள உலகின் மிகப்பெரிய ஹோட்டல்!

சவுதி அரேபியாவில் 10 ஆயிரம் அறைகளுடன் அமைய உள்ள உலகின் மிகப்பெரிய ஹோட்டல் சவுதி அரேபியாவில் மக்கா மத்திய மண்டலத்தில் மனாபியா பகுதியில் அப்ரஜ் குடை எனும் உலகின் மிகபெரிய ஹோட்டல் அமைக்கப்பட உள்ளது. சுமார் 1.4 மில்லியன் சதுர மீட்டர் பரப்ப‌ளவில் 12 கோபுரங்களுடன் அமைய உள்ள இந்த ஹோட்டலில் 10 ஆயிரம் அறைகள்,70 உணவகங்கள் , மேல் தளங்களில் ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன.பாலைவனத்தில் கோட்டை போன்று வடிவமைப்பில்…

Read More