Headlines

ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை

சொத்து எப்படி சம்பாதிக்கப்பட்டது என்பதை வெளியிட முடியாது போன மேலும் ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அரசுடமையாக்கும் நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொள்ள பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவருகிறது. ஒருவரிடம் இருக்கும் சொத்து எப்படி வாங்கப்பட்டது என்பதை அவர் உறுதிப்படுத்த தவறினால், பணச் சலவை சட்டத்தின் கீழ் அந்த சொத்து அரசுக்கு சொந்தமாகும். அத்துடன் அவ்வாறான சொத்துக்களை கொள்வனவு செய்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் ஏற்பாடுகள்…

Read More

“நாம் இறைவனை நம்புகின்றவர்கள், ஆயுதங்களை நம்பிவாழ்கின்றவர்கள் அல்ல” அமைச்சர் றிஷாத் (வீடியோ)

இந்த நாட்டில் வாழ்கின்ற எந்த ஒரு முஸ்லிமும் இந்த நாட்டைப்பிரிக்கவோ அல்லது நாட்டில் இன்னொரு யுத்தம் மூலம் இரத்த ஆறு ஓடுவதையோ ஒருபோதும் விரும்பவும்மாட்டோம் அதற்கு இடமளிக்கவும் மாட்டோம். நாம் இறைவனை நம்புகின்றவர்கள் ஆயுதங்களை நம்பிவாழ்கின்றவர்கள் அல்ல என அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

Read More

வெற்றிக்கு பிற்பாடு எனது ஆதரவாளர்கள் அமைதிகாக்க வேண்டும் – அமீர் அலி

நாம் இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளமையானது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விடயமக இருக்கின்ற அதே நேரத்தில் தேர்தல் காலங்களில் இடம்பெற்ற வாய்த்தை பிரயோகங்கள், விடயங்கள், தனிபட்ட விடயங்களை மனதில் வைத்துக்கொண்டு எதிரணி ஆதரவாளர்களின் மனங்கள் புன்படும் வகையில் நடந்து கொள்ளவோ அல்லது அவர்களுக்கு எதிரான வார்த்தை பிரயோகங்களில் ஈடுபடுவதனையோ முற்றாக தவிர்த்துக் கொள்ளுமாறும், அவ்வாறு எவராவது செயற்படும் பட்சத்தில் அதற்கு தான் பொறுப்பில்லை என்பதாக முன்னாள் பிரதி அமைச்சரும் தற்பொழுது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மட்டக்களப்பு…

Read More

மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் வட்டாரத்துக்கான மத்திய குழுத் தெரிவு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் வட்டாரத்திற்கான மத்திய குழு தெரிவு அறிவித்தல் வழங்கப்பட்டதன் படி கடந்த வெள்ளிக்கிழமை (03-08-2018) பி.ப 7.00 மணியளவில் மஃரிப் தொழுகையை தொடர்ந்து மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு அக்கரைப்பற்று பட்டின பள்ளி வீதியில் அமைந்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்11ம் வட்டார செயற்பாட்டுக் காரியாலயத்தில் அதன் முதற்செயற்பாட்டு நிகழ்வாக இடம் பெற்றது. அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் வட்டாரத்திற்கான 2018 நடப்பு வருட உத்தியோகத்தர் தெரிவும் இங்கு…

Read More

ஜோதிடம் பார்த்து தேர்தலுக்கு நாள் குறிப்பவன் நானில்லை

நான் ஜோதிடம் பார்த்து, நேரம் பார்த்து தேர்தல் தினத்தை தீர்மானிப்பவனில்லை. அதற்கான பொறுப்பு தேர்தல்கள் ஆணையாளருக்கே உள்ளது. புத்தர் ஜோதிடத்தை சார்ந்திருக்கவில்லை என்றால் நாம் எப்படி அதைச் சார்ந்திருக்க முடியும்? – இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார். கொழும்பு – 07 இல் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் விசேட செய்தியாளர் மாநாட்டின்போது “ஜோதிடத்தில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப்…

Read More

பணத்திற்காக சோரம் போன ஹூனைஸ்! முசலித் தவிசாளர் எஹ்யா குற்றச்சாட்டு

வடமாகாண முஸ்லிம்களின் கௌரவமான குடியேற்றத்தையும் அந்த மக்களுக்கு தலைமை  தாங்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீனையும் அற்ப சொற்ப சலுகைகளுக்காக ஹூனைஸ் எம்பி காட்டிக் கொடுத்து விட்டதாக முசலி பிரதேச சபைத் தவிசாளர் எஹ்யாபாய் குற்றம் சுமத்தியுள்ளார். வன்னி மாவட்ட அ.இ.ம.கா நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறுக் இன்று ஐ.தே.க வில் இணைந்து கொண்டமை தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே தவிசாளர் எஹ்யா பாய் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். வடக்கு முஸ்லிம்களுக்கும் அந்த மக்களின் தலைவரான அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும்,…

Read More

குடி நீர் பிரச்சினைக்கு தீர்வு!!!

கிண்ணியா பிரதேச செயலக பிரிவின் பெரியாற்று முனை கரையோர பகுதிகளில் உள்ள பகுதிக்கு குடி நீர் இணைப்புக்களை பெறுவதற்கான குழாய் பதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க இன்று (01) குறித்த குழாய் நீருக்கான ஆரம்ப கட்ட வேலைகளை துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா ஆரம்பித்து வைத்தார். மக்களின் நீண்ட கால குடி நீர் பிரச்சினையை தீர்க்கும்…

Read More

நர்ஸாக மாறிய பூனை: நோயுற்ற பிராணிகளுக்கு ஆதரவாகவும் உதவியாகவும் இருக்கும் அதிசயம்

நோயுற்ற பிராணிகளுக்கு ஆதரவாகவும் அவற்றின் நோய் குணமாக உதவி செய்யும் அதிசய கருப்பு பூனை ஒன்று போலந்தில் உள்ளது. ராடேமேனேசா என்கிற அந்த கருப்பு பூனை போலந்தில் உள்ள ஒரு விலங்கு தங்குமிடத்தில் உள்ளது. இரண்டு மாத குட்டியாக இருக்கும் போது சுவாச பையில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக இந்த விலங்குகள் தங்குமிடத்திற்கு கொண்டுவரப்பட்டது. நோயிலிருந்து முழுமையாக குணமடைந்த பிறகு, அதற்கு நன்றி செலுத்தும் வகையில் ஒரு நர்ஸை போல செயல்பட தொடங்கியது அந்த பூனை. விலங்கு…

Read More

ஹஸன் மௌலவியின் மறைவு முஸ்லிம் சமுகத்திற்கு பேரிழப்பாகும் – அமைச்சர் ரிசாத் பதியுதீன்

கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் எஸ்.எல்.எச்.ஹஸன் மௌலவியின் மறைவு முஸ்லிம் சமுகத்திற்கு பேரிழப்பாகும் என அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்தார் மார்க்கப்பணியில் தன்னை அர்ப்பணித்து சிறந்த உலமாவாக இருந்ததுடன் முஸ்லிம் ஊர்களில் மத்ரசாக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அமைப்பதற்கு பல முயற்சிகளை முன்னெடுத்தார். பலகாலமாக அரசியலில் திகழ்ந்த இவர் கண்ணியமான அரசியலை முன்னெடுத்ததை  நாம் அறிவோம் தனிப்பட்ட வாழ்விலும் அரசியல் வாழ்விலும் மிகவும் பக்குவமானவராவும் நற்பண்புகளைக் கொண்டவராகவும் பல முன்மாதிரிகளைக் கொண்டவராகவும் திகழ்ந்தார்….

Read More

குவான்டனாமோ சிறையை மூட ஒபாமா திட்டம்

அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபாமா, குவான்­ட­னாமோ தடுப்பு சிறையை மூடு­வ­தற்­கான நீண்ட கால திட்­டத்தை வெளி­யிட்­டுள்ளார். குவான்­ட­னாமோ சிறை, அமெ­ரிக்­காவின் நற்­பெ­ய­ருக்கு இழுக்கு ஏற்­ப­டுத்­து­வ­தாக ஒபாமா கூறி­யுள்ளார். இது  கிளர்ச்­சி­யா­ளர்கள் உரு­வா­வ­தற்­கான இட­மா­கவும் அது அமைந்­து­விட்­ட­தென சுட்­டிக்­காட்­டிய அவர், அந்தப் பிரச்­சி­னை­களை அடுத்த ஜனா­தி­ப­தி­யிடம் ஒப்­ப­டைக்க விரும்­ப­வில்லை என்றும்  தெரி­வித்­துள்ளார். குவான்­ட­னாமோ தடுப்புச் சிறையில் உள்ள கைதி­களை மற்ற இடங்­க­ளுக்கு மாற்­றி­வி­டு­வ­தற்­கான திட்­டத்தை ஒபாமா வெள்ளை மாளி­கையில் வெளி­யிட்­டுள்ளார். அந்த குவான்­ட­னாமோ தடுப்பு சிறையை மூட கடந்த 8…

Read More

முஸ்லிம் அகதிகளும், மத மாற்றமும்..!

ஜேர்மனியை நோக்கிச் செல்லும் அகதிகளுக்கு, உண்மையிலேயே அங்கு சுதந்திரமாக வாழ்வதற்க்கான வழிகள் செய்து கொடுக்கப்படுகிறதா அல்லது செய்து கொடுக்கப்படுமா? பல இணைய தளங்களில் இருந்து பெறப்பட்ட அதிர்ச்சித் தகவல்களை சுருக்கமாகத் தருகிறேன். ஐரோப்பிய நாடுகளில் அனுமதிக்கப்படும் அகதிகளுக்கு அங்கே வாழும் முழுச் சுதந்திரம் வழங்கப்படுமா என்று கேட்டால், இல்லை என்பதே பதிலாக அமையும். காரணம் அவர்கள் அங்கே தற்காலிகமாகத்தான் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் அங்கு நிரந்தரமாக வாழ வேண்டுமென்றால் புகலிட (Asylum ) உரிமையைக் கோரி நீதிமன்றத்தில் பதிந்து,…

Read More

வடகொரியா அதிபருடன் பேசுவேன்: டொனால்டு டிரம்ப் அதிரடி

அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட பல மாதங்களுக்கு முன் பிரச்சாரத்தை தொடங்கிய டொனால்டு டிரம்ப் முஸ்லிம்களுக்கு எதிரான தனது சர்ச்சைக்குரிய பேச்சு மூலம் பிரபலமானார். தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டும் வருகிறார். அந்த வகையில் அமெரிக்காவிற்கு நேரடியாக சவால்விட்டு வரும் வடகொரியாவுடன் பேச்சு நடத்துவேன் என்று தெரிவித்துள்ளார். வடகொரியாவுடன் அமெரிக்காவின் உறவு குறித்து டிரம்பிடம் கேள்வி எழுப்பிய போது “நான் அவருடன் பேசுவேன்(கிம் ஜோங்). அவருடன் பேசுவதில் எனக்கு எந்த பிரச்சனையும்…

Read More