Headlines

யாழ்.தேவியின் பரிட்சார்த்த ஓட்டம் தொடர்கிறது

யாழ்ப்பாணத்திற்கான சேவையினை முழுமையாக வழங்கும் வகையில் யாழ்தேவியின் பரீட்சார்த்த ஓட்டம் இன்றும் தொடர்ந்தது.பளை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை இன்று பகல் 11 மணியளவில் வந்தடைந்தது. இன்றைய வெள்ளோட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், ஆளுநரின் செயலர் இளங்கோவன் மற்றும் புகையிரத திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.இன்றும் ரயிலைப் பார்க்கும் ஆர்வத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததைக் காணக்கூடியதாக…

Read More

அத்தியாவசியப் பொருட்களுக்கு வெற் கிடையாது -அமைச்சர் றிஷாத்

சுஐப் எம் காசிம் அத்தியாவசியப் பொருட்களுக்கு வெற்(vat)கிடையாது. அமைச்சரவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடி முக்கிய முடிவுகளை எடுக்கும். -அமைச்சர் றிஷாத் பாராளுமன்றத்தில் அறிவிப்பு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 12ம் திகதி அமைச்சரவையில் அமைச்சர்கள் கூடி முடிவு எடுக்கவுள்ளதாகவும் இந்தப் பொருட்களுக்கு வெற்(VAT) பெறுமதி சேர்வரி சேர்க்கப்படமாட்டாதெனவும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிஷாத் பதியூதீன் பாராளுமன்றத்தில் அறிவித்தார். “ஆயினும் வெற் பெறுமதி சேர்க்கை குறிப்பிட்ட சில பண்டங்களுக்கே அமுல்படுத்தப்படும் எனவும் அவர்…

Read More

ஒஸ்மானியா கல்லூரியில் எல்லே விளையாடிய சமந்தா பவர்

இலங்கை வந்துள்ள ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதிநிதி சமந்தா பவர், நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது யாழ் ஒஸ்மானியா பெண்கள் கல்லூரியின் புதிய கட்டடத்தை சமந்தா பவர் திறந்து வைத்துள்ளார். இவ்விழாற்கு பிரதம அதிதிகளாக வருகை தந்திருந்த சமந்தா பவர் மற்றும் சீ.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் கட்டிடத்தை திறந்து வைத்துள்ளனர். இதன்போது, ஒஸ்மானிய கல்லூரி மாணவிகளுடன் சமந்தா பவர் எல்லே விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.

Read More

ஜீவன் மெண்டிஸ் சிரித்தது ஏன்? ; வெளிவந்தது உண்மை

உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது லீக் போட்டியில் இலங்கை அணியின் ஜீவன் மெண்டிஸ் நியூஸிலாந்து வீரரின் பிடியெடுப்பொன்றை நழுவ விட்டதோடு சிரித்துகொண்டு இருந்தமை சர்ச்சையை தொற்றியிருந்தது. கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற இப் போட்டியில் நியூஸிலாந்து வீரர் கொரி ஹெனடர்சன் 43 ஓட்டங்களுடன் இருந்த போது ஜீவன் மெண்டிஸ் அவரின் பிடியெடுபை நழுவ விட்டார். இதனையடுத்து அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஹென்டர்சன் 75 ஓட்டங்களை பெற்றதோடு போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார். போட்டியின் தன்மையை மாற்றியமைத்த கொரி…

Read More

பாதிப்புக்குள்ளான முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்துங்கள்-ஹுனைஸ் பாரூக்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் தலைமையில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், முசலிப்பிரதேச சபைத் தலைவர் எஹியான் மற்றும் பிரதேச சபை ஆளும், எதிர் கட்சி உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் மன்னார் மாவட்ட செயலகத்தில் சந்தித்து முசலிப் பிரதேசத்தின் மீள்குடியேற்றம் மற்றும் அதிலுள்ள இடர்பாடுகள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.  இதன் போது எழுத்து மூல மகஜர் ஒன்றும் மாவட்ட…

Read More

நெடுந்தீவு மக்கள் சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- திருகோணமலை மாவட்டத்தின், கிண்ணியா பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் பூவரசந்தீவு வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் ராஸிக் பரீட் தலைமையில், நெடுந்தீவு பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.      

Read More

தொடர்ச்சியாக எட்டு வாகனங்களை முட்டித்தள்ளிய பஸ்!

அவிசாவளையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று எட்டு வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பஸ்சில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து இரண்டு லொறிகள், கார், முச்சக்கர வண்டி மற்றும் வேன் போன்ற வாகனங்களுடன் தொடர்ச்சியாக மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த விபத்தின் காரணமாக கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்த மூவர் சிகிச்சைகளுக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்…

Read More

சீமெந்து வாங்க முன்னர் பொதியுறையைப் பாருங்கள்

சீமெந்துக்காக அதிகரிக்கப்பட்ட புதிய விலையானது, புதிய கையிருப்புகளுக்கு மாத்திரமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூன் முதலாம் திகதி முதலான கையிருப்புகளுக்கு மாத்திரம் 930 ரூபாய் விலையினைச் செலுத்துமாறு, நுகர்வோர் அதிகார சபை, பொதுமக்களைக் கேட்டுள்ளது. 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையொன்றின் விலை, 60 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை காலமும் 870 ரூபாய்க்கு காணப்பட்ட சீமெந்து மூடையொன்று, 930 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சீமெந்து நிறுவனங்கள் பலவற்றின் வேண்டுகோளுக்கு இனங்கவே, சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதென அதிகாரசபை மேலும் கூறியது.

Read More

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் புவிடத்தில்தீவு – பெரியமடு பாதை புனரமைப்பு பணிகள் நிறைவுறும் – அமைச்சர் றிஷாத் உறுதி (photos)

 மன்னார் மாவட்டத்தின் மாந்தைமேற்கு பிரதேச சபைக்குட்பட்ட மஹலிக்குளம் – பள்ளமடு வீதி, விடத்தில்தீவு சந்தியிலிருந்து பெரியமடு வரைக்குமான 12 கிலோ மீட்டர் பாதை காபர்ட் பாதை புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியான 450 மில்லியன் ரூபா நிதியில் இந்த பாதை புனரமைப்பு செய்யப்படவுள்ளது. கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீனின் முயற்சியினால் இந்த நிதி பெறப்பட்டது. இந்த நிகழ்வு வடமாகாண போக்குவரத்து,மற்றும் வர்த்தக அமைச்சர் பா.டெனீஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது….

Read More

அதிகாரங்களை தக்கவைப்பதற்காக தமிழ் – முஸ்லிம் உறவு மலரவேண்டுமென்ற மனோபாவம் மாறவேண்டும் – நிந்தவூரில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

(சுஐப் எம் காசிம்) அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், பதவிகளை அடைய வேண்டுமெ ன்பதற்காகவும் தமிழ்  – முஸ்லிம் உறவு மேலோங்கவேண்டுமென்ற மனோபாவம் மாற்றப்பட்டு, இரண்டு சமூகங்களினதும் அடிநாதப்பிரச்சினைகளைத் தீர்க்கப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு இனநல்லுறவு வழிசமைக்க வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறைமாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மூத்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம்;. சலீமின் 50வருட சேவையை பாராட்டும் விழாவும், ‘பொன்விழா காணும் சலீம்’  எனும் நூல் வெளியீடும் நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற…

Read More

2மில்லியன் பெறுமதியான பொதுநோக்கு மண்டபம் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது

மன்னார் பெரியமடு காயாநகர் மக்களுக்கான பொதுநோக்கு மண்டபம் இன்று (10) முன்னாள் வடமாகாண சபை உறுப்பி றிப்கான் பதியுதீன் அவர்களினால் மக்கள் பாவனைக்கு இன்று கையளித்தார் இந்த பொதுநோக்கு மண்டபமானது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவ ரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்களது நிதி ஒதுக்கீட்டிலிருந்து வழங்கப்பட்ட நிதியாகும். மேலும் இந்த நிகழ்வு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ரபீக் சேர் தலைமையில் இடம்பெற்றது நிகழ்வில் மாந்தை பிரதேச சபை தவிசாளர் சந்தியோகு…

Read More

“அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பாதுகாப்பை பலப்படுத்துங்கள்” – ஜனாதிபதி, பிரதமரிடம் தவிசாளர் தாஹிர் கோரிக்கை!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தொடர்பில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் கவனம் செலுத்தி, அமைச்சரின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென  நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தற்போது ஊடகங்களில் பகிரங்கப்படுத்தப்பட்டு வரும் அமைச்சர் ரிஷாட் படுகொலை தொடர்பான செய்தியானது, முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பெரும் அச்சத்தை…

Read More