Headlines

கோத்தா, துமிந்த, தன­சிறி, உபாலி உள்­ளிட்ட 9 பேருக்கு ஜனா­தி­பதி ஆணைக்குழு அழைப்பு

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ, முன்னாள் பாராளுமன்ற உறுப்­பினர் ஆர்.துமிந்த சில்வா, மேல் மாகாண சபை அமைச்சர் உபாலி கொடி­கார, தெஹி­வளை – கல்­கிஸை மாந­கர மேயர் தன­சிறி அம­ர­துங்க உள்­ளிட்ட ஒன்­பது பேர் நாளையும் நாளை மறு தினமும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு­வி­னரால் விஷேட விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர். கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது மஹிந்த ராஜ­பக் ஷவின் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்­காக ரக்ன லங்கா பாது­காப்பு நிறு­வ­னத்தின் ஊழி­யர்­களை ஈடு­ப­டுத்­தி­ய­மை­ உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்பில்…

Read More

வற் வரி மறு அறி­வித்தல் வரை நிறுத்­தி­வைப்பு.!

ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி முதல் 15 சதவீத­மாக அதி­க­ரிக்­கப்­ப­ட­வி­ருந்த பெறு­மதி சேர் வரி மறு அறி­வித்தல் வரை தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில், உள்­நாட்டு இறை­வரித் திணைக்­க­ளத்தின் ஆணை­யாளர் நாயகம் கல்­யாணி தஹ­நா­யக்க வெள்­ளிக்­கி­ழமை வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் இந்த வரி அதி­க­ரிப்பு நிறுத்­தப்­பட்­டுள்ள விடயம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதற்­க­மைய, மறு அறி­வித்தல் வரை முன்னர் இருந்­தது போன்று 11 சதவீத­மான பெறு­மதி சேர் வரியே நடை­மு­றையில் இருக்கும் என்றும், யாரும் 15 சதவீத­மாக வரியை அறி­விடக் கூடாது…

Read More

மகளீர் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முன்வரவேண்டும் பிரதியமைச்சர் அமீர் அலி

அரசியல் மாற்றம், குடும்ப மாற்றம், போதை மாற்றம், பிள்ளைகள் கல்வியில் வளர வேண்டும் என்ற மாற்றங்களை மகளீரை வைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்;க்கின்றேன் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட மகளீர் சுயதொழில் கூட்டுறவுச் சங்க பிரதிநிகளுடனான சந்திப்பு ஒட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் நேற்று நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- மது பாவனையில் மட்டக்களப்பு…

Read More

மாத்தறையில் நடைபெற்ற கூட்டதில் எதிரணி பிரமுகர்கள் ஆற்றிய உரைகள்..!

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாத்றையில் நேற்று பொதுக்கூட்டம் இடம்பெற்றது. பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பல அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் பலவும் இதன் போது கூடியிருந்தன. இதன்போது கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேன வருவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காகவே. நாங்கம் மிகவும் சவாலான தேர்தலுக்கு முகங்கொடுத்தாலும் வெற்றி நிச்சயமே என அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட…

Read More

“அனைத்து பேதங்களையும் மறந்து இணைந்து பணியாற்றுவோம்” மன்னார் பிரதேச சபை விழாவில் அமைச்சர் ரிஷாட் அழைப்பு!

-சுஐப் எம்.காசிம்-   வன்னி மாவட்டத்தில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 14  சபைகளில், 13 சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து ஆட்சியை உருவாக்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது தொடர்பான இணக்கப்பாடு தனக்கும், சுமந்திரன் எம்.பிக்கும் ஏற்பட்ட போதும், இறுதி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலைவாரியதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் பிரதேச சபையின் தவிசாளர், பிரதிதித் தவிசாளர்…

Read More

செல்பி மோகத்தைப் போக்க ஆன்டிசெல்பி மாத்திரைகள்

செல்பி எடுக்கும் மோகத்தைப் போக்க ஆன்டி-செல்பி மாத்திரைகள் தற்போது வெளிவந்துள்ளன. நம்மை நாமே புகைப்படம் எடுத்துக்கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்துக்கொண்டே போகின்றது. சிறப்பான செல்பி எடுக்கும் முயற்சியில் உலகெங்கிலும் பலர் இதுவரை உயிரிழந்துள்ளனர். எனினும், நாம் அதிகளவில் செல்பி எடுப்பதை நிறுத்துவதாக இல்லை. இந்நிலையில், இங்கிலாந்தில் செல்பி மோகத்தைப் போக்கும் மாத்திரைகள் என்ற பெயரில் (‘மிண்ட்ஸ்’ – புதினா வாசனையுடன் கூடிய இனிப்பு) விற்பனைக்கு வந்துள்ளன. இந்திய மதிப்பில் சுமார் ஆயிரம் ரூபாய்க்கு தற்போது…

Read More

மட்டு-குருக்கள்மடம் புதை குழியினை விரைவாக தோண்டுவதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு நீதவான் உத்தரவு

பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் மனிதப்புதைகுழி தோண்டப்பட வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கினால் தாக்கல் செய்யப்பட வழக்கின் தொடர்ச்சியான வழக்கு விசாரணை கடந்த ஜனவரி மாதம் 29ம் திகதி களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஏற்கனவே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கினால் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தினை பூமிக்கு கீழேயுள்ள எச்சங்களை கண்டறிய ஸ்கேன் கருவியினூடாக குறிப்பிட்ட அந்த பகுதியினை ஆய்வு செய்யுமாறு களுவாஞ்சிக்குடி…

Read More

குஜராத்தில் பிறந்த வேற்றுகிரகவாசி: பீதியில் உறைந்த மக்கள்

வேற்றுகிரவாசிகள் தொடர்பான நம்பிக்கை, கட்டுகதைகள் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த கதைகளுக்கு வலுசேர்க்கும் விதமாக கடந்த வருடம் சூரத் நகரில் ஒரு சம்பவம் நடந்தது. இது தொடர்பான செய்திகள் மக்களை பயத்தில் உறைய வைத்தது. சூரத் நகரில் பிறந்த அந்த குழந்தையை பார்த்து மருத்துவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஏனெனில் அந்த குழந்தை சிவப்பு நிறத்தில், கண்கள் பெரிதாக, அவை தலையின் மேற்பகுதியில் ஒட்டியவாறு வேற்றுகிரகவாசியின் குட்டி போல காட்சியளித்தது. சில தினங்களில் இது தொடர்பான படங்கள்…

Read More

ஜனாஸா: காத்தான்குடியைச் சேர்ந்த மௌலவி எம்.ஐ.எம்.ஹஸ்ஸாலி (பலாஹி) வபாத்

கட்டாரில் இருந்து பழுலுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) காத்தான்குடி-1ம் குறிச்சியைச் சேர்ந்த மௌலவி எம்.ஐ.எம்.ஹஸ்ஸாலி (பலாஹி) (வயது 55) நேற்று புதன்கிழமை காத்தான்குடியில் வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன். ஒரு ஜனாஸா தொழுகைக்காக அவர் சென்ற போதே இம்மரணம் ஏற்பட்டுள்ளது. காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக்கல்லூரியில் பட்டம் பெற்று வெளியாகிய இவர், கட்டார் கொழும்பு ரெஸ்டுரண்டில் பல வருடங்களாக பணிபுரிந்தது மட்டுமல்லாமல் பல்வேரு சமூக சேவைகளில் ஈடுபட்டும் வந்துள்ளார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றி இதுவரை எவ்வித…

Read More

இஸ்லாத்தை பற்றி ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்

அண்மையில் இஸ்லாத்தை பற்றி உலகில் முன்னணி ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித் பேட்டி ஒன்றில் கீழ் கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் “சமீபத்தில் நான் இந்தியாவிற்கு சென்றிருந்தேன். அங்கு, ஒரு நாளைக்கு ஐந்து முறை தொலுகைக்காக பாங்கு சத்தம் ஒலிக்கும் போதெல்லாம் என்னுடைய படுக்கையில் அமர்ந்து நான் யோசித்து கொண்டே இருந்தேன். ஆனால், ஒரு விசயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. தன்னை படைத்த இறைவனுக்காக ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழும் இவர்கள் உண்மையிலயே சிறந்தவர்கள்.”

Read More

பொதுபலசேனாவுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு தடையாக இருந்தால் பதவி துறப்பேன்!

முஸ்லிம் மக்களுக்கு ஆதரவான எனது குரலை நசுக்குவதற்காகவே பொதுபலசேனா அமைப்பினர் எனது அமைச்சுக்குள் நுழைந்தார்கள். ஆனால் மேலும் ஒருபடி மேலே சென்று பொதுபல சேனாவின் அடாவடித்தனத்துக்கு எதிராக நான் குரல் கொடுப்பேன்.அதற்காக எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ அவறையெல்லாம் நான் மேற்கொள்வேன். இந்த நடவடிக்கைகளுக்கு எனது அமைச்சுப் பதவி தடையாக இருந்தால் அதனையும் துறப்பதற்கும் நான் தயாராக இருக்கின்றேன். நாட்டில் சிறுபான்மையினர் கௌரவமாக வாழ்வதற்காக எவ்வாறான தியாகத்தையும் மேற்கொள்வதற்கும் நான் தயாராக இருக்கின்றேன் என்று கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத்…

Read More