Headlines

10 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் விரைவில் குறைப்பு

மொஹம்மத் சனாஸ்  எதிர்வரும் 29ம் திகதி பத்து அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க  தெரிவித்துள்ளார் . நாட்டின் நிதி நிலைமை குறித்து அறிக்கை ஒன்றை கோரியுள்ளேன். இது வரை காலமும் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பொய்யான பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது.உண்மை நிலைமை குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. மக்களுக்கு மிகவும் அவசியமான பத்து பண்டங்களின் விலைகள் குறைக்கப்படும் என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு…

Read More

உலக நாடுகள் அனைத்தும் எங்களுடன் இணைந்துள்ளது! – ராஜித

உலக நாடுகள் அனைத்தும் இன்று எங்கள் நாட்டிற்கு நிதி உதவி வழங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்டவர், அன்று எங்கள் நாட்டிற்கு எதிராக செயற்பட்ட மேற்கத்திய நாடுகள் உட்பட இன்று எங்களுடன் இணைந்துள்ளது. இலங்கை தற்போது சர்வதேசத்தினுள் பெயர் ஒன்றினை பெற்றுகொண்டுள்ள நிலையில் ஜனவரி 08ஆம் திகதி ஏற்பட்டட புரட்சியுடன் உலகினை வெற்றி கொள்ள முடிந்துள்ளது….

Read More

யுத்தமில்லா சமூகத்தை கட்டியெழுப்ப உங்களது எழுத்துக்களை பயன்படுத்துங்கள்

மீண்டும் ஒரு யுத்தம் இல்லாத ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக உங்களது எழுத்துக்களை பயன்படுத்துங்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலை இலக்கியத்துறையை சேர்ந்தவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யுத்தம் எப்போதும் உண்மையை அழித்துவிடும் என்றும் யுத்தம் எப்போதும் மனிதர்களை அழித்துவிடும் என்றும் இப்பூமியில் எப்போதும் இரத்தம் சிந்தப்படுவதே யுத்தத்தின் அடிப்படை என்றும் யுத்தத்தினால் பௌதீக வளங்கள் மட்டுமன்றி நீதி, நேர்மை, ஒழுக்கம், பண்பாடு ஆகிய நல்ல விடயங்களும் அழிந்து போவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். நேற்று முந்தினம் (20)…

Read More

பிரதமரை விட மஹிந்தவின் பாதுகாப்பு அதிகமானது!

பிரதமரின் பாதுகாப்பை விட அதிகமான பாதுகாப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசாங்கமானது வழங்கியுள்ளது. அந்தவகையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இது தொடர்பில் மக்கள் மத்தியில் குழப்பகரமான கதைகளை பரப்பிவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன தெரிவித்தார். சிறிகொத்தாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

நெல்சன் மண்டேலாவின் பேரன் இஸ்லாத்தை தழுவினார்!

இறைவனின் மாபெரும் கிருபையினால் நெல்சன் மண்டேலாவின் பேரன் மண்ட்லா மண்டேலா அவர்கள் சில தினங்களுக்கு முன் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார். ஆப்பிரிக்காவில் கறுப்பின மக்கள் மீது அடக்குமுறைகள் ஏவி விடப்பட்ட காலக்கட்டத்தில் மண்ட்லா மண்டேலாவின் தாத்தா நெல்சன் மண்டேலா நிறவெறிக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டவராவார். தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். இன அழிவு நீங்க இஸ்லாமே சரியான தீர்வு என்பதை…

Read More

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக டாக்டர் லலித் நிமல் செனவீர!!!

கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழான நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் லலித் நிமல் செனவீர அவர்களுக்கான நியமனக் கடிதம் இன்று (08) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. அமைச்சில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ரஞ்ஜித் அசோகவும் கலந்து கொண்டார்.

Read More

கிழக்கு முதலமைச்சர் மக்கள் விருப்பப்படியே – றிஷாத் பதியுதீன்

ஏ.எச்.எம்.பூமுதீன் -நியாயமான தீர்வுக்கு தமிழ் தலைமைகளை அழைக்கிறேன். -100 நாட்களுக்குள் கைத்தொழில் புரட்சி – அமைச்சர் ரிசாத் பதியுதீன் கிழக்கு மக்கள் எந்த முதலமைச்சரை விரும்புகின்றார்களோ அவருக்கு நாம் ஆதரவளிப்போம். யார் முதலமைச்சர் என்பதை கட்சித் தலைவர்கள் கூடி 20 ஆம் திகதிக்கு முன்னர் தீர்மானிக்கப்படும் என அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். தமிழ் தேசிய நாளிதழ்களின் ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்து உரையாடும் போதே மேற்படி கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஊடகவியாலாளர்களுக்கும் அமைச்சருக்குமான சந்திப்பு…

Read More

கொழும்பில் மிதந்துவந்த மீனுடன் விளையாடிய 21 பேர், வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பின் புறநகர் கல்கிஸ்ஸை கடலில் மிதந்து வந்த நச்சுத்தன்மை கொண்ட ஜெலி மீன் (நுங்கு மீன்) ஒன்றை வைத்து விளையாடிய 21 பேர் கொழும்பு தெற்கு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்தநிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கடுமையான சொறி, எரிச்சல், தடிப்பு மற்றும் வலி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எவரது உயிருக்கும் ஆபத்து இல்லை என்று வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது.

Read More

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தரைவழி பாதை

இலங்கை – இந்தியாவை தரை வழி மார்க்கத்தால் இணைக்கும் திட்டத்தை இரு நாடுகளும் இணைந்து செயற்படுத்த விரும்புவதாக இந்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுடன் இந்தியா மோட்டார் வாகனங்களுக்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நிதின் கட்காரி இத்தகவலை வெளியிட்டார். இந்தியாவின் தனுஸ்கோடிக்கும் இலங்கை எல்லைக்கும் இடையிலான 23 கிலோமீற்றர் தூரத்தை பாலம் வழியாக இணைப்பது அல்லது பாம்பன்…

Read More

வாசுதேவ நாணயக்கார பொது எதிரணியில் இணைகிறார்(?)

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அரசாங்கத்திலிருந்து விலகி பொது எதிரணியில் இணைந்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதா, இல்லையா என்ற முடிவை அவர் இன்று புதன்கிழமை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைகள் தன்னைக் கவர்ந்துள்ளதாக ஏற்கனவே வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

Read More

ஊவா மாகாண சபையை வெல்ல அரசு கையாண்ட உத்தியைக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் அரசு கையாள முயற்சிக்கிறதா..?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் ஊவா மாகாண சபையை அரசு வென்றெடுக்க முஸ்லிம்களின் வாக்குக்களை கிஞ்சித்தும் கணக்கெடுக்காது பெரும்பான்மையின மக்களின் வாக்குகளையே அரசு குறிவைத்திருந்ததனை பதுளை மாவட்டத்தில் அரசு முஸ்லிம் வேட்பாளர்கள் எவரையும் களமிறக்காதது தெளிவாக சுட்டி நின்றது.முஸ்லிம்களின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்காது என்பதனை அரசும் நன்கே அறியும்.அப்படி இருக்க அரசு முஸ்லிம்களிடம் தனது நேரத்தினை வீண் விரயம் செய்யாது பெரும்பான்மை இன மக்களை குறிவைத்து தங்களது காய்களை நகர்த்துவதே அரசின் வெற்றி வாய்ப்புக்களை உறுதிப்படுத்தப் போகிறது….

Read More

மண்சரிவால் 10 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பண்டாரவளை கல்வி வலயத்துக்குட்பட்ட 10 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ( 03) வரை மூடப்படும். தற்போது இடம்பெற்றுள்ள மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காகவே பாடசாலைகள் மூடப்படுமென பண்டாரவளை வலய கல்வி பணிப்பாளர் அரியதாஸ ரட்ணநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்சவினால் வழங்கப்பட்ட பணிப்புரையின் கீழ் ப+ நாகல பாடசாலைகள், மீறியாபெரா வித்தியாலயம், ஆனோல்ட் வித்தியாலயம், நகேடிய வித்தியாலயம், சிறி…

Read More