Headlines

இஸ்ரேலுக்கு எதிரான போட்டி – பலஸ்தீன கொடியை ஏந்திய, ஸ்காட்லாந்து ரசிகர்கள்

கிளாஸ்கோ செல்டிக் அணி மற்றும் இஸ்ரேலின் ஹபோயல் பீர் சேவா அணிகளுக்கு இடையேயான காலபந்து போட்டியில் ஃபலஸ்தீன் கொடியை ஏந்தி ஸ்காட்லாந்து கால்பந்து ரசிகர்கள் ஃபலஸ்தீனை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாம்பியன்ஸ் லீக் போட்டி துவங்கும் முன்பு ஃபாலஸ்தீனிய ஆதரவாளர்கள் ஃபலஸ்தீன் கொடியினையும் அந்-நக்பா (பேரழிவு) குறித்த செய்திகள் அடங்கிய நோடீஸ்களையும் விநியோகம் செய்துள்ளனர். நக்பா என்பது 1948 இல் நிகழ்ந்த இஸ்ரேல் உருவாவதற்கு காரணமாகவும் லட்சக்கணக்கான ஃபலஸ்தீனியர்கள் தங்கள் சொந்த நாட்டில் அகதிகளாக மாற…

Read More

தொழில் நுட்ப மற்றும் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டன: மீண்டு கல்வி நடவடிக்கை 29ல்ஆரம்பம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும்  பின்வரும் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிலையங்கள்  உடனடியாக மூடப்படுவதுடன்  எதிர்வரும் திங்கட்கிழமை (29)ஆம் திகதி அன்று மீண்டும் வழமையான கல்வி நடவடிக்கைகளுக்காக அவற்றை  திறக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பணிப்புரை விடுத்துள்ளார். 1- இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை 2- தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை 3- வரையறுக்கப்பட்ட திறன்கள் அபிவிருத்தி நிலையம் 4- இலங்கை-ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி…

Read More

ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் எதிரெதிரே.. பாரிய விபத்து தவிர்ப்பு

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் ரஜரட்ட ரெஜின ரயிலும் மாத்தறை இலக்கம் 872 ரயிலும் கிங்தோட்டை தர்மபால வித்தியாலயத்துக்கு அருகில், ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே பயணித்த போது இடம்பெறவிருந்த பாரிய விபத்தொன்று ரயில் சாரதிகளின் முயற்சியால் தடுக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது, ரயில்களுக்கு இடையில் சுமார் 10 அடி தூர இடைவெளி மாத்திரமே இருக்கையில் விபத்து தடுக்கப்பட்டுள்ளது. இவ்விரு ரயில்களில் ஒன்று வருவதை தூரத்தில் வைத்தே அவதானித்த ரயில் கடவை காவலாளி, சிவப்புநிறக் கொடியை…

Read More

39ஆவது சட்டமா அதிபரின் 7ஆவது சிரார்த்த தினம்

நாட்டின் 39ஆவது சட்டமா அதிபராக பதவிவகித்த மறைந்த கே.சி.கமலசபேஷனின் 7ஆவது சிரார்த்த தினம், சட்டக்கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் சட்டமா அதிபர் பாலித்த பெர்னண்டோ பங்கேற்றார். சிறப்பு விருந்தினராக வருகைதந்த நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Read More

தர்கா நகர் , இஸ்னாபுள்ள வீதியில் மிக நீண்ட காலமாக சேதமாகி இருந்த வடிகான், புனர்நிர்மாணம்

கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர்  ரிஷாத் பதியுதீனின்  வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைவாக, பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்காரினால், தர்கா நகர் , இஸ்னாபுள்ள வீதியில் மிக நீண்ட காலமாக சேதமாகி இருந்த வடிகான் , பிரதேச வாசிகளது வேண்டுகோளிற்கிணங்க , புனர்நிர்மாணம் செய்யப்பட்டு , செவ்வாய்க்கிழமை (26) மக்கள் பாவனைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பேருவளை பிரதேச சபை…

Read More

மீண்டும் பிறந்தார் இளவரசி டயானா

இங்கிலாந்தின் குட்டி இளவரசிக்கு சார்லட் எலிசபத் டயானா என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், கேம்ப்ரிட்ஜின் மதிப்பிற்குரிய இளவரசி சார்லட் என்று அவர் அழைக்கப்படுவார் எனவும் கென்சிங்டன் அரண்மனை அதிகாரப்பூர்வமாக தகவலை அறிவித்துள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ்–டயானா தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம் (வயது 32). ஸ்காட்லாந்து செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, கேட் மிடில்டனை சந்தித்தார். இருவரும் காதலித்து, 2011 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதிதி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு…

Read More

பலஸ்தீனத்திற்கு பணம் சேர்த்தவர்கள் மரிச்சிக்கட்டிக்கு மெளன‌ம் காப்பது ஏனோ…..?

– எழுத்தாளர் இஸ்ஸதீன் றிழ்வான்- இலங்கை மற்றும் உலக நாடுகளிலிருந்துகொண்டு சர்வதேச முஸ்லிம் சமூகத்தின் அவலங்களில் போது குரம்கொடுத்த பலர் இன்று மெளனித்துவிட்டனர் மரிச்சிக்கட்டி விடயத்தில். பலஸ்தீனம் நமது 2வது கிப்லா உண்மைதான், அதனை யூதர்களிடத்திலிருந்து பாதுகாப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் பிரார்த்திக்கவேண்டும், குரல்கொடுக்கவேண்டும். அதுபோல், மரிச்சிக்கட்டி என்பது 100 வீதம் முஸ்லிம்கள் செரிந்து வாழ்ந்த வரலாற்று பூமி. நீண்ட நாள் பேசி தீர்ப்பதற்கோ, பெரிய போராட்டங்கள் செய்து உறுதிப்படுத்துவதற்கோ அல்லது வழக்காடி நிரூபிப்பதற்கோ தேவையற்ற ஆதாரங்கள் நிறைந்த…

Read More

விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு!

-ஊடகப்பிரிவு- அனுராதபுர மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தனது சொந்த நிதியிலிருந்து  விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார். அனுராதபுரம் ரம்பேவ பிரதேச சபைக்கு உட்பட்ட 10 விளையாட்டு கழகங்களுக்கு, கரப்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் இஷாக் ரஹ்மான் எம்.பியினால்  வழங்கி வைக்கப்பட்டது. இளைஞர்களது விளையாட்டுத் திறனை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இன, மத, கட்சி பேதமின்றி ரம்பேவ பிரதேசத்தில் வசிக்கின்ற பௌத்த, முஸ்லிம் இளைஞர்களுக்கே இவ்விளையாட்டு உபகரணங்கள் வழங்கி…

Read More

மக்காவின் அபிவிருத்தி குறித்து மாறுபட்ட கருத்துக்கள்..!

புனித நகரங்களான மக்கா மற்றும் மதினாவிற்கு வாழ்வில் ஒரு முறையேனும் ஹஜ் என்னும் புனித யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் என்று முஸ்லிம் மக்கள் கருதுவர். உலகம் முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான முஸ்லிம் மக்களால் மக்கா நகரம் போற்றப்படுகின்றது. அனைவரும் ஒன்றுகூடும் இடமாக புனித மக்கா  விளங்குகின்றது. அதிகரித்து வரும் யாத்ரிகர்களின் வருகையை முன்னிட்டு இந்த நகரங்களுக்கான விஸ்தரிப்புப் பணியை கடந்த 2000-வது ஆண்டு மத்தியில் சவுதி அரசு தொடங்கியது. தற்போது இன்னும் இதன் பணிகள் முழுமையாக நிறைவடையாத…

Read More

சிறுநீரிலிருந்து பிறப்பிக்கப்பட்ட மின்சக்தி

சிறுநீரிலிருந்து பெறப்பட்டமின்சக்தியை கொண்ட எரிபொருள் கலமொன்றை பிரித்தானியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் விருத்தி செய்துள்ளனர். மேற்படி சிறுநீரால் செயற்படும் மைக்ரோபியல் எரிபொருள் கலமொன்று ஒரு டொலர் அளவான குறைந்த விலையைக் கொண்டதாகும். எடுத்துச்செல்லக்கூடிய, மீளப் புதுப்பிக்கக்கூடிய இந்தக் கலம் பின்தங்கிய பிராந்தியங்களுக்கு சுற்றுச்சூழல் நட்புறவுடைய சக்தி வளத்தைப் பெற்றுத் தருவதாக உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

Read More

6வது மாடியில் இருந்து விழுந்து 17 வயது சிறுமி பலி!

கொழும்பு – கிரான்ட்பாஸ் தொடர்மாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  நேற்றிரவு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 17 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

ஜனாதிபதியின் அறிவிப்புக்காக காத்திருக்கிறேன்!- தேர்தல்கள் ஆணையாளர்

தேர்தல் நிச்சயமாக ஜனவரி 2ம் திகதி நடைபெறாது. ஏனெனில் அது ஒரு வெள்ளிக்கிழமை அத்துடன் பௌர்ணமி தினம் என்று ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் தேர்தல் ஜனவரி 3ம், 7ம்  அல்லது 10ம் திகதிகளில் நடைபெறுமா? என்று கேட்ட போது அது கடவுளுக்கே தெரியும் என்று தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். எல்லாமே, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்பிலேயே தங்கியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Read More