Headlines

உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்

கொடிய உயிர்க்கொல்லி நோயான மலேரியா காய்ச்சலை தடுத்து, கட்டுப்படுத்தும் புதியவகை தடுப்பூசிக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த 2013 ஆண்டில் மட்டும் மலேரியா பாதிப்பினால் 6 லட்சத்து 27 ஆயிரம் மக்கள் பலியாகினர். இவர்களில் 5 லட்சத்து 62 ஆயிரம் பேர் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள். இதில் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 82 சதவீதம் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த நோயில் இருந்து உலக மக்களை காப்பாற்றும் முயற்சியில் கடந்த…

Read More

நாட்டின் பல பகுதிகளில் அடை மழைக்கு வாய்ப்பு!

நாட்டைச் சூழவுள்ள அனைத்துப் பாகங்களிலும் இன்று (10) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நாட்டின் பல மாகாணங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என, வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் சில பிரதேசங்களில் இம் மழை வீழ்ச்சியினளவு 100 மில்லி மீற்றரைத் தாண்டலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில்…

Read More

ஏழு புதிய தூதுவர்கள் நியமனக் கடிதங்கள் கையளிப்பு

ஐந்து புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயரிஸ்தானிகர்கள் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று(22) கையளித்தனர். இந்த நிகழ்வு கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. அவ்வகையில் திரு. கார்லோஸ் ஈ ஓர்லாண்டோ (Carlos E. Orlando) உருகுவே குடியரசின் தூதுவர் திரு. பிரகாத் எச். டேர்ட்லி (Parakhat H. Durdyev) துருக்மெனிக்ஸ்தான் குடியரசின் தூதுவர் திரு. குயுலோ பெத்ஓ (Gyula PethO) ஹங்கேரி நாட்டின் தூதுவர் திரு. சொசெப் டுரொபெனிக் (Zozef Drofenik) சுலோவேனியா குடியரசின் தூதுவர் திரு. நியான்கொரோ…

Read More

வெற்றிபெற்றுள்ள ஆயுர்வேத பணியாளர்களின் வேலைநிறுத்தம்!

ஆயுர்வேத சுகாதார பணியாளர்கள் கடந்த 7 நாட்களாக முன்னெடுத்த பணிபகிஸ்கரிப்பானது சுகாதார அமைச்சுடன் மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்து வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக தமது ஆயுர்வேத பணியாளர்கள் முன்னெடுத்து வந்த போராட்டமானது நேற்று (20) மாலை அமைச்சின் செயலாளருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது அவரின் சாதகமான பதிலை அடுத்து நிறைவுக்கு வந்துள்ளதாக அகில இலங்கை ஆயுர்வேத சுகாதார சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த குருகே தெரிவித்துள்ளார். மேலும் நேற்றைய ஆர்ப்பாட்டமானது பொரல்லை ஆயுர்வேத வைத்தியசாலையில் இருந்து…

Read More

1595 முறைப்பாடுகளில் 237 விசாரணைகள் நிறைவு

பாரிய ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு 1595 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதில் 237 வழக்குகள் நிறைவடைந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2010ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த வருடம் ஜனவரி மாதம் வரை அரச நிறுவனங்களில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக கிடைத்த முறைப்பாடுகளில் 1049 முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அதில் 237 முறைப்பாடுகளின் விசாரணைகள் நிறைவுற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், 689 முறைப்பாடுகள் ஆணைக்குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் 43 முறைப்பாடுகள் வேறு நிறுவனங்களின் பொறுப்பில் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது….

Read More

அதிகாரிகளுக்கான முறைப்பாட்டு பெட்டி வைக்கப்படும்-அமைச்சர் றிஷாத் அறிவிப்பு

– அபூ அஸ்ஜத் – ஏனைய நாட்டு அரசங்க நிறுவனங்களை போன்று எமது நாட்டில் செயன் திறன்மிக்க ஊழியர்கள் உருவாகின்ற போது இலாபம் ஈட்டு நிறுவனங்கள் நஷ்டத்தினை நோக்கி நகராது என தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அதிகாரிகள் தமது பிரச்சினைகளையும்,ஆலோசனைகளையும் தெரிவிக்கும் வகையில் தமது அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் முறைப்பாட்டு பெட்டியொன்றினை ஏற்படுத்தவுள்ளதாகவும் கூறினார். அரசாங்க வணிக கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்கள் ஒரு தொகுதியினரை நிரந்தர சேவையில் இனைத்து கொள்ளும்…

Read More

ரமழான் நோன்பு: ஐரோப்பாவில் 19 மணி நேரங்கள்!

இம்றை ரமழான், சென்ற வருடம் போன்றே அனேகமான நாடுகளில் கோடைகாலத்தில் எதிர்நோக்கி வருவதால் நீண்ட நேரம் நோன்பு நோற்க வேண்டிய நிலை உலக முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தவகையில் ஐரோப்பாக் கண்டத்தைச் சேர்ந்த பல நாடுகளில் 18-19 மணி நேரங்கள்அங்குள்ள மக்கள் நோன்பு நோற்கின்றனர். அதிகாலை 02:30 தொடக்கம் மாலை 9:45 வரைக்கும், இன்னும் சில இடங்களில் அதிகாலை 3 மணியிலிருந்து மாலை 9:30 மணிவரைக்கும், இன்னும் சில பிரதேசங்களில் இதனைவிட சில மணி நேரங்கள் அதிகமாக அல்லது குறைவாக நோன்பை நோற்கின்றனர். இந்தவகையில் ஐரோப்பிய…

Read More

சாய்ந்தமருதில் மருதூர் முத்துக்களுக்கு கௌரவம்!

மிஸ்ரோ எனப்படும் முஸ்லிம் இளைஞர் சமூக ஆய்வு அமைப்பானது சாய்ந்தமருது கல்விக்கோட்டத்துக்குள் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்புச் சித்தியெய்திய 34 மாணவ மாணவிகளை கௌரவித்து பாராட்டும் நிகழ்வை 2016-11-27 ஆம் திகதி சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நடாத்தியது. இவ் அமைப்பின் தலைவர் எம்.ஐ.எம்.இக்தார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதியாகவும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் கௌரவ அதிதியாகவும்…

Read More

18 வருடங்களுக்கு முன்னர் எல்.ரீ.ரீ.ஈ இனரால் கடத்தப்பட்ட வாகனம் ஏறாவூர் பொலிஸாரால் நேற்று மீட்பு!

18 வருடங்களுக்கு முன்னர் எல்.ரீ.ரீ.ஈ இனரால் மட்டக்களப்பு சித்தாண்டிப் பகுதியில் வைத்துக் கடத்தப்பட்ட ஹையேஸ் வேன் கொழும்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சமயம் ஏறாவூர் பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.எஸ்பி. பிறேமதிலக்க தெரிவித்தார். கம்பஹா – வெலிவேரியாப் பகுதியில் பாதையோரத்தில் வாகன விற்பனைச் சந்தையில் விற்பனைக்கிடப்பட்டிருந்த சமயம் இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது. வாகனத்தை விற்பனைக்கு வைத்திருந்த பீற்றர் பெரேரா, மற்றும் வாகனப் பதிவுப் பெயரை மாற்றுவதற்கு விண்ணப்பம் செய்திருந்த மெதகெதர…

Read More

சீரற்ற காலநிலை : வாகன சாரதிகள் அவதானம்

– க.கிஷாந்தன் – ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில்  பனிமூட்டம் காணப்படுவதன் காரணமாக இவ்வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகளை வாகனத்தை அவதானமாக செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர். வாகனத்தில்  முன் விளக்கு ஒளிரவிட்டு வாகன சாரதிகள் வாகனத்தை செலுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மஹிந்தவுக்கு முற்றிலும் மாறான விதத்தில் சிறிசேன – டேவிட் கேமரூன்

அஸ்ரப் ஏ சமத் இலங்கையில் மக்களுக்கு இழைக்கப்பட்ட துயரங்களுக்கு பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்ற விடயத்தை பிரிட்டன் ஒருபோதும் மறக்காது. அதேபோன்று செப்ரெம்பரில் ஐ.நாடுகள் விசாரணை அறிக்கை வெளியாகி விவாதிக்கப்பட வேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாகவுள்ளோம் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேனவை நேற்றுச் சந்தித்த பிரிட்டனின் டெய்லி மிரர் பத்திரிகையில் எழுதியுள்ளசெய்தியில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கைக்கு 2013 இல் பயணம் செய்த தருணத்திலிருந்து…

Read More

50 ரூபாவுக்கு சோற்றுப் பார்சல் திட்டம் நேற்று ஆரம்பம்

ஒரு கிலோ அரிசியில் சுமார் ஆறு பேருக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் நேற்று ஆரம்பமானது. வத்தளை, ஹுனுப்பிட்டிய விகாரையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கபட்ட அந்நிகழ்வில் முதல் நாள் விகரதிபதியின் வேண்டுகோளின் படி சுமார் ஆயிரம் பேருக்கு நேற்று பகல் இலவசமாக சோற்றுப் பார்சல்கள் வழங்கபட்டன. இன்று முதல் கொழும்பில் இன்னும் சில இடங்களிலும் ஆரம்பமவுள்ள இத்திட்டம் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Read More