Headlines

லீ குவான் யூ இறுதிச்சடங்கில் அமெரிக்கா சார்பில் கிளிண்டன்

சிங்கப்பூரின் தந்தை மற்றும் ‘நவீன சிங்கப்பூரின் சிற்பி’ என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ உடல்நலக்குறைவு காரணமாக கடந்த திங்கட்கிழமை காலமானார். அவரது இறுதிச்சடங்கு வரும் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறுகின்றது. இதில் கலந்துகொள்ள முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் தலைமையிலான அமெரிக்கா குழு சிங்கப்பூருக்கு செல்வதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பில் கிளிண்டன் தலைமையிலான குழுவில், அந்நாட்டு முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஹென்றி கிஸ்ஸிங்கரும் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று அந்நாட்டு…

Read More

கொடுமைகளுடன் 13 வருடங்களாக சம்பளம் கிடைக்காமல் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைப் பணிப்பெண் சவுதியில் மீட்பு

அஸ்ரப் ஏ சமத் அனுராதபுரம் இப்ளோகமவில் இருந்து பணிப்பெண்னாகச் சவுதிஅரேபியா றியாத் நகரத்திற்குக்குச் சென்ற தமயந்தி வயது (47) என்ற பெண் சென்ற உடனேயே எவ்வித தகவலும் இல்லாமல் இருந்தார். பின்னர் 13 வருடத்திற்குப் பின் இன்று கொழும்பு வந்து தமது குடும்பத்துடன் இணைந்து கொண்டார். றியாத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகாரிகள் அப் பணிப் பெண்னை கடந்த 13 வருடங்கள் தேடி கடந்த நிலையில் கடந்த மாதமே அவரை கண்டுபிடித்துள்ளனர். அவர் வாழ்ந்த வீட்டை அணுகி…

Read More

வடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகள் அடுத்த ஆண்டு மீள ஆரம்பிக்கப்படும்: கைத்தொழில், வர்த்தக அமைச்சு சமர்ப்பித்த பத்திரத்துக்கு அனுமதி – பரந்தனில் அமைச்சர் ரிஷாட்!

வடக்கு, கிழக்கில் செயலிழந்து கிடக்கும் கைத்தொழிற்சாலைகளை அடுத்த ஆண்டில் மீள ஆரம்பிப்பதற்கு, கைத்தொழில் மற்றும் வர்த்த அமைச்சுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் தான் சமர்ப்பித்த பத்திரத்துக்கு அனுமதி கிடைக்கப் பெற்றிருப்பதாகவும், இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். மூடப்பட்டிருக்கும் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்கு, வெளிநாட்டு சூழலியல் நிபுணர்கள் மற்றும் உள்நாட்டு சூழலியலாளர்கள் ஆகியோருடன் இன்று காலை (19) விஜயம்…

Read More

வெள்ளத்தில் வீட்டுக்கு வந்த விருந்தாளி : களனியில் சம்பவம்

நாட்டில் நிலவுகின்ற தொடர்ச்சியான  மழை வீழ்ச்சியின் காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதேவேளை, களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதையடுத்து ஆற்றை அண்டிய வீடுகளில்  முதலைகளின் நடமாட்டத்தை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இதனால்  களனி ஆற்றை அண்டிய மக்கள் பீதியுடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்ள நாம் தயார்

  மஹி­யங்­கனை சம்­பவம் குறித்து கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்பிட்டார்.   தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் …   மஹி­யங்­க­னையில் அளுத்­கமை போன்ற கல­வரம் உரு­வானால் அதற்கு முஸ்லிம் கவுன்­ஸிலே பொறுப்புக் கூற­வேண்டும்.அளுத்­கம சம்­ப­வத்தின் பின்­ன­ணியும் முஸ்லிம் கவுன்­ஸிலே என சந்­தே­கிக்­கின்றோம்    பௌத்­தர்கள் முஸ்லிம் கொடி­யையோ குர்­ஆ­னையோ எரிக்­க­வில்லை. மஹி­யங்­க­னையில் முஸ்­லிம்­களே பௌத்த கொடி­யையும் வெசாக் கூடு­க­ளையும் எரித்­துள்­ளார்கள். பௌத்த கொடியை எரித்த முஸ்­லிம்­களை கண்­டிக்­காது அவர்­க­ளுக்கு உரிய தண்­டனை வழங்­கு­மாறு வலி­யு­றுத்­தாது…

Read More

சிங்கப்பூரின் வெளிவிவகார கொள்கையை பின்பற்றவுள்ளது இலங்கை!

சிங்கப்பூர் அரசாங்கத்தின் வெளிவிவகார சேவை கொள்கைகளை முன்மாதிரியாகக் கொண்டு22 நாடுகளுக்கு வதிவிடமற்ற தூதுவர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் வதிவிடமற்ற தூதுவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாறு நியமிக்கப்படும் தூதுவர்கள் இலங்கையில் தங்கியிருந்து, தமது சேவைகளை மேற்கொள்ள உள்ளனர். ஓராண்டுக்கு சில தடவைகள் குறித்த நாடுகளுக்கு சென்று தமது பணிகளை மேற்கொள்ள உள்ளனர். வீசா…

Read More

முஜிபுர் ரஹ்மான் எம்.பி. குவைட் பயணம்

கொழும்பு மாவட்ட மாவட்ட அபிவித்தி குழு இணைத் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்று (11) பிற்பகல் குவைட் நாட்டுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். குவைட் நாட்டின் ஐக்கிய தேசியக் கட்சி கிளையினரின் அழைப்பின் பேரிலேயே இரு நாள் விஜயமொன்றிணை மேற்கொண்டிருக்கும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. நாளைய தினம் நாடு திரும்பவுள்ளார். இந்த விஜயத்தின்போது குவைட் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள கட்சியின் விரிவாக்கள் நடவடிக்கைகள்…

Read More

ஜாகிர் நாயக் நிகழ்ச்சியில் இஸ்லாத்தை ஏற்ற ஜப்பானியர்கள்

கடந்த சனிக்கிழமை ஜப்பானில் இடம் பெற்ற இஸ்லாமிய விளக்கக் கூட்டம். ஜாகிர் நாயக் அவர்களால் பல தெளிவுகளை அடைந்த ஜப்பானியரில் பலர் அரங்கத்திலேயே இஸ்லாத்தை தழுவிக் கொண்டனர். ஐந்து லட்சம் தருகிறோம் என்று சொல்லவில்லை. வாளைக் காட்டி மிரட்டவில்லை. ஒரு மார்க்கம் வளர்வதற்கு மக்களை சிந்திக்க தூண்ட வேண்டும். சிந்திக்கும் மக்கள் தாங்களாகவே இந்த மார்க்கத்தில் நுழைவார்கள்.

Read More

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து ஜாதிக ஹெல உறுமய வெளியேறுவதால் அரசாங்கம் பலவீனமடையாது

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து ஜாதிக ஹெல உறுமய வெளியேறுவதால் அரசாங்கம் பலவீனமடையாது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எமது அரசாங்கத்திலுள்ள எந்தக் கட்சிக்கும் அந்தக் கட்சிகள் விரும்பிய முடிவு எடுக்க உரிமையுள்ளது. ஜாதிக ஹெல உறுமய முன்வைத்த யோசனைகள் குறித்து சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆழமாக ஆராய்ந்தது. அதிலுள்ள…

Read More

காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைகள் நிறைவு

காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணைகளை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் ஜூலை 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில், யுத்த காலத்தில் காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், குறித்த குழு வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்களின் முறைப்பாடுகளைப் பதிவு செய்து சாட்சி விசாரணைகளை முன்னெடுத்ததோடு, குறித்த விசாரணைகள் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி ஜனாதிபதியிடம்…

Read More