Headlines

பாகிஸ்தானில் இடம் பெற்ற வர்த்தக உடன்படிக்கை மற்றும் கலந்துரையாடல்

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன தலைமையிலான அமைச்சர்கள் பாகிஸ்தானில் இடம் பெற்ற வர்த்தக உடன்படிக்கை மற்றும் கலந்துரையாடல்களின் போது எடுக்கப்பட்ட படம். பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னுான் ஹூசைனில இஸ்லாமாபாத்தில் அளிக்கப்பட்ட விருந்துபசாரத்தில் அமைச்சர்களான மங்கள சமரவீர, றிஷாத் பதியுதீன், ஏ.எச்.எம்.பவூசி உட்பட ஏனையவர்களையும் படங்களில் காணலாம்.

Read More

மண்டாடுகம பாடசாலை மைதானம் புனரமைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டில், அநுராதபுரம், மண்டாடுகம முஸ்லிம் வித்தியாலய மைதானத்தின் புனரமைப்புப் பணிகள் அண்மையில் நிறைவு  செய்யப்பட்டது. ஒரு மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட இந்த மைதானம், இஷாக் ரஹ்மான் எம்.பியினால் மாணவர்களின் பாவனைக்காக   கையளிக்கப்பட்டது.      

Read More

110 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி, வபாத்தான அப்துல் ரஹ்மான்

மாரடைப்பு ஏற்பட்டு தனது உயிர் பிரியப் போகும் தருவாயிலும் 110 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சாரதி ஒருவர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த, அப்துல் ரஹ்மான் என்பவர் பஸ் சாரதியாக பணியாற்றி வந்தார். கேரள மாநில போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான ஒரு பஸ் சுமார் 110 பயணிகளுடன் நேற்று காலை உதகமண்டலம் நோக்கி மலைப்பாதை வழியாக சென்றுக் கொண்டிருந்தது. பஸ்ஸினை அப்துல் ரஹ்மானே செலுத்தியுள்ளார். ஊட்டியை…

Read More

புதிய அரசாங்கத்தின் 1வது வரவு செலவுத்திட்டத்தில் கொலன்னாவையில் முஸ்லிம் பாடசாலை

– ஏ.எஸ்.எம்.இர்ஷாத் – புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டத்;தில் கொலன்னாவையில் முஸ்லிம் பாடசாலையொன்றுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாடசாலை நிர்மானித்துக் கொடுக்கப்படுமென நிதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான ரவி கருணாநாயக்க உறுதியளித்துள்ளார். அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில் இன்று புதன்கிழமை(12) நடைபெற்ற மௌலவிமார்கள், புத்திஜீவிகளுடனான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீனும் பங்கேற்றிருந்தார். அமைச்சர் ரவி கருணாநாயக்க இங்கு உரையாற்றுகையில் கொழும்பு மாவட்ட…

Read More

சிரியாவில் ISIS இலக்குகள் மீது அமெரிக்கா விமான தாக்குதல்

ஐ.எஸ்., வாதிகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இது ஐ.எஸ். தடுப்பு நடவடிக்கை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Read More

மொனராகலையில் 2.1 ரிச்டர் நிலநடுக்கம்

மொனராகலை மாவட்டத்தில்  2.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.   மொனராகலை மாவட்டத்தில் சியம்பலாண்டுவ எனுமிடத்திலேயே இன்று அதிகாலை 5.10 க்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த பணியகம் அறிவித்துள்ளது.

Read More

பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட குருநாகல்,மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசாலை பார்வையிட்ட நவவி எம்.பி

இன்று அதிகாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட குருநாகல், மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசாலை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் பார்வையிட்ட போது..

Read More

ஹிஜாப் அணியும் முஸ்லிம் பெண்ணுக்கு பணி வழங்க மறுத்த அமெரிக்க நிறுவனம்

சாமன்தா, இவர் அமெரிக்காவை சார்ந்த ஒரு இஸ்லாமிய சகோதிரி. இவர் தனது 17 ஆவது வயதில் அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் வேலைக்காக விண்ணப்பத்தார். அவர் விண்ணபித்த வேலைக்கு உரிய அனைத்து தகுதியும் அவரிம் இருந்தும், அவர் ஹிஜாப் அணியும் இஸ்லாமிய பெண்ணாக இருந்தார் என்பதற்காக அவருக்கு அந்த வேலை வாய்ப்பை அந்த நிறுவனம் நிராகரித்தது. இதனை எதிர்த்து சாமன்தாவின் சார்பில் அமெரிக்காவில் உள்ள இஸ்லாமிய அமைப்பு ஒன்று நீதிமன்றத்தின் வாசலை தட்டியது. பல கட்ட விசாரணைகளுக்கு பிறகு வழக்கின்…

Read More

முன்னாள் பா.உறுப்பினர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமில்லை

நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்றத் தேர்­தலில் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எவ­ருக்கும் தேசியப் பட்­டி­ய லில் இட­ம­ளிக்­கப்­படாது என்று ஜனா­தி­ப­தியும், ஸ்ரீலங்கா சுதந் ­திரக் கட்­சியின் தலை­வ­ரு­மான மைத்­தி­ரி­பால சிறி­சேன தீர்­மா னித்­துள்­ள­தாக ஆங்­கில ஊடகம் ஒன்று செய்தி வெளி­யிட்­டுள் ­ளது. முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மீண்டும் பாரா­ளு­மன்றம் செல்ல விரும்­பினால், அவர்கள் தேர்­தலில் போட்­டி­யிட வேண்டும் என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திட்­ட­வட்­ட­மாகத் தெரி­வித்­ துள்ளார். நாட்­டுக்­காக சேவை­யாற்­றிய புல­மை­யா­ளர்­களை பாரா­ளு­மன்­றத்­துக்கு கொண்டு வரு­வ­தற்கே, தேசி­யப்­பட்­டியல் முறை கொண்டு வரப்­பட்­டது…

Read More

ஐஎஸ் அமைப்பில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: அமெரிக்க உளவுத்துறை!

IS அமைப்பில் சேர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அமெரிக்க உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 20 ஆயிரத்தில் இருந்து 37ஆயிரத்து 500 பேர் இந்த  அமைப்பில் இணைந்துள்ளதாகவும், நாளுக்கு நாள் ஐஎஸ் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த அதிகபட்ச நபர்கள் சமீபத்தில் பல்வேறு நாடுகளிலிருந்தும் இணைந்துள்ளனர் என்றும் அமெரிக்க உளவுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்நேரத்தில் அமெரிக்க அதிபர் ஐஎஸ் அமைப்புடனான வான்வழித் தாக்குதல் குறித்து உரை நிகழ்த்தியது…

Read More

அ.இ.ம.கா வேட்பாளர் சிராஸிக்கு இறக்காமம் மக்கள் பாரிய வரவேற்பு (Photo)

– அகமட் எஸ். முகைடீன் – சமூகத்திற்கான காத்திரமான முன்னெடுப்புக்களை செய்கின்ற அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் மயில் சின்ன ஐந்தாம் இலக்க வேட்பாளர் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் இறக்காமம் பிரதேசத்தில் பிரச்சார நடவடிக்கைகளை நேற்று மாலை மேற்கொண்டார். கல்முனை மாநகர முன்னாள் முதல்வராக சிராஸ் மீராசாஹிப் மக்கள் பணியாற்றியபோது அவரிடம் காணப்பட்ட ஆற்றல், சேவை நலம், விவேகம், வேகம் என்பவற்றை…

Read More

உயர்ஸ்தானிகரை தாக்கியவர்களுக்கு விளக்கமறியல்

மலேசியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகரை தாக்கிய ஐந்து பேரையும் விளக்கமறியல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று (5) கைது செய்யப்பட்ட இந்த ஐந்து பேரையும் புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து உயர்ஸ்தானிகரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காகவே இவர்களை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சோலாங்கூர் பொலிஸ் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 மற்றம் 26 வயதிற்குட்பட்டவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த…

Read More