Headlines

பஸ்-முச்சக்கர வண்டி விபத்து! பயணித்த குடும்பம் படுகாயம்!

அப்துல்லாஹ் மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலையில் கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்துக்குச் சமீபமாக இன்று (04) வியாழன் மாலை 5 மணியளவில் வீதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற இ.போ.ச. கல்முனை டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸுடன் அதன் பின்னால் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கர வண்டியில் பயணித்த…

Read More

திருமண வீட்டு உணவு பிரச்சினை: மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு

ஜவ்பர்கான் மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழங்குடா பிரதேசத்தில் உணவு ஒவ்வாமையினால் திடீர் சுகயீன முற்றவர்கள் திருமண வீட்டில் உட் கொண்ட உணவு மாதிரிகள் கொழும்பிலுள்ள மருத்துவ ஆய்வு நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக மண்முனைப் பற்று (ஆரையம்பதி) சுகாதார வைத்திய அதிகாரி  வி.பவித்ரா தெரிவித்தார்.  தாழங்குடா பிரதேசத்தில் திருமண வீட்டில் சமைக்கப்பட்ட உணவு மாதிரி மற்றும் இதில் திடீர் சுகயீனமுற்றவரின் மலம் என்பன கொழும்பிலுள்ள மருத்துவ ஆய்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அத்தோடு மண்முனைப் பற்று(ஆரையம்பதி) சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தைச்…

Read More

ஈக்குவடோர் தாக்கிய பூமியதிர்ச்சி: உயிரிழந்தவர்கள் தொகை 413 ஆக உயர்வு

ஈக்­கு­வ­டோரைத் தாக்­கிய பூமி­ய­திர்ச்­சியில் சிக்கி பலி­யா­ன­வர்கள் தொகை 413 ஆக உயர்ந்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. ஈக்­கு­வ­டோரின் பசுபிக் பிராந்­திய கடற்­க­ரையை கடந்த சனிக்­கி­ழமை தாக்­கிய இந்த பூமி­ய­திர்ச்­சியில் சிக்­கி­யுள்­ள­வர்­களை மீட்கும் பணிகள் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்ற நிலையில் பலி­யா­ன­வர்கள் தொகை மென்­மேலும் அதி­க­ரிக்­கலாம் என அஞ்­சப்­ப­டு­கி­றது. கடந்த 7 தசாப்த காலத்தில் ஈக்­கு­வடோர் எதிர்­கொண்ட பாரிய பூமி­ய­திர்ச்­சி­யாக இது விளங்­கு­கி­றது. இந்த அனர்த்­தத்தில் சிக்கி சுமார் 2,500 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். பூமி­ய­திர்ச்சி தாக்கி இரு…

Read More

கரப்பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கான அடிக்கல்நாட்டு விழா பிரதம அதிதியாக நவவி எம்.பி

தில்லையடி ரத்மல்யாய பகுதியில் கரப்பந்தாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்க்கான அடிக்கல்நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் 15 இலட்சம் ரூபாய் செலவில் இம்மைதானம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

டில்லியிலிருந்து சம்பந்தன் குழுவினர் தமிழ்நாட்டிற்கு திடீர் விஜயம்!

சம்பந்தன், சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரே தமிழகத்துக்குச் சென்றுள்ளனர். ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், பொன். செல்வராசா ஆகியோர் நேற்றிரவு நாடு திரும்பினர். தமிழக விஜயத்தின் போது அ.தி.மு.க. உட்பட இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழகக் கட்சிகளின் முக்கியஸ்தர்களைச் சந்தித்துக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்துரையாடுவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவர்கள் சந்திப்பர் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் இது தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்தியப்…

Read More

நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றினார் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்..

இத்தனை காலமும் கவனிப்பார் அற்று கிடந்த குளியாப்பிடி தொகுதியின் விசினவ கிராமத்தின் பொத்துகர-வாதாகொடுவ பாதையை அமைச்சர் றிஷாட் பதியுதீனின்  நிதி ஒதுக்கீட்டில் காபட்  பாதையாக புனரமைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குளியாப்பிடி தொகுதி முக்கியஸ்தர்கள் மற்றும் முன்னால் மாகாண சபை உருப்பினறும்  லங்கா சதொசயின்  பிரதித் தலைவருமாகிய நஸீர், முன்னால் குளியாப்பிடி பிரதேச சபை உறுப்பினர்  இர்பான், குருவிகொட்டுவ பாயிஸ், நவாவி;ஊர் மக்களும் கலந்து கொண்டார்கள்.

Read More

உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு அமைச்சர் றிஷாத் அவசரக் கடிதம்

-ஊடகப்பிரிவு – கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற மோசடிகளையும், முறைகேடுகளையும், விசாரிப்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, கடந்த அரசில் சதொச நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொடர்பில், கடந்த ஒரு வருடமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றது. 2010 ஜனவரி 10 ஆம் திகதி தொடக்கம் 2015 ஜனவரி 10 ஆம் திகதி வரை இடம்பெற்ற ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பிலேயே இந்த ஆணைக்குழு, தனது விசாரணைகளை நடாத்தி வருகின்றது. தற்போதைய…

Read More

பிர­தமர் தலை­மையில் இன்று விசேட கூட்டம்

தேசிய அர­சாங்­கத்தின் வரவு–செலவுத் திட்டத்தின் மூல­மாக பரிந்­து­ரை­செய்­யப்­பட்ட தோட்டத் தொழி­லா­ளர்­களின் 2500 ரூபா சம்­பள உயர்­வுக்கு தோட்ட நிர்­வா­கங்கள் மறுப்புத் தெரி­வித்­துள்ள நிலையில் இன்­றைய தினம் (12) பிர­தமர் தலை­மையில் சம்­பள விடயம் தொடர்பில் விசேட கலந்­து­ரை­யாடல் ஒன்றை நடத்தவுள்­ள­தாக தொழில் மற்றும் தொழில் உற­வுகள் அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ன தெரி­வித்தார்.

Read More

அரசியல் வேலைத்திட்டங்கள் அடங்கிய கொள்கைப் பிரகடனத்தை வெளியிடவுள்ளேன் – இஸ்மாயில்

எம்.வை.அமீர் நடைபெறவுள்ள பாராளமன்ற தேர்தலுக்கு முகம்கொடுக்கவுள்ள நான், தென்கிழக்கு அலகில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் சவால்களை முடிவுக்குக்கொண்டுவரும் எனது வேலைத்திட்டத்தின் கீழ் என்னால் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள வேலைத்திட்டங்கள் அடங்கிய கொள்கைப் பிரகடனத்தை வெளியிடவுள்ளேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் 2015-08-01 ம் திகதி சம்மாந்துறையில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். கடந்த காலங்களில் எமது மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளமன்றம் சென்ற சில…

Read More

குரங்குக்கு புகைப்படத்துக்கான பதிப்புரிமை கிடையாது – அமெரிக்க நீதிமன்றம்

குரங்­குக்கு புகைப்­ப­டத்­துக்­கான பதிப்­பு­ரிமை வழங்க முடி­யாது என அமெ­ரிகக் நீதி­ப­தி­யொ­ருவர் தீர்ப்­ப­ளித்­துள்ளார். குரங்கு ஒன்­றினால் பிடிக்­கப்­பட்ட செல்பீ புகைப்­படங்­க­ளுக்­கான பதிப்­பு­ரிமை அக்­கு­ரங்­குக்கே உரி­யது எனவும் அதன் கையில் கெமரா கிடைப்­ப­தற்கு வழி­வ­குத்த மனி­த­ருக்கு உரி­ய­தல்ல எனவும் பிர­க­ட­னப்­படுத்தக் கோரி, அமெ­ரிக்­காவின் சான்­பி­ரான்­சிஸ்கோ நக­ரி­லுள்ள  நீதி­மன்­ற­மொன்றில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. மிரு­கங்கள், பிரா­ணி­களின் நலன்­க­ளுக்­காக செயற்­படும் PETA அமைப்­பினால் இந்த வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. பிரித்­தா­னிய புகைப்­ப­டப்­பி­டிப்­பாளர் டேவிட் ஸ்லேட்டர் 2011 ஆம் ஆண்டில் இந்­தோ­னே­ஷி­யாவின் சுலா­வெஸி தீவுக்குச்…

Read More

இலத்திரனியல் அடையாள அட்டை முறைமை சிறந்தது: பிரதமர்

புதிய இலத்திரனியல் அடையாள அட்டைக்கான தகவல்களை திரட்டும் போது நபர்களின் அந்தரங்கத்திற்கு பாதுகாப்பு ஏற்படக் கூடிய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புதிய அடையாள அட்டையின் ஊடாக நாடு மக்களும் பாதுகாக்கப்படுகின்றனர். இன்று பலர் பல்வேறு தேவைகளுக்காக சாரதி அனுமதிப் பத்திரத்தையே சமர்ப்பிக்கின்றனர். ஆட்பதிவு திணைக்கதளத்தின் ஊடாக தரவுத் தளமொன்று உருவாக்கப்படும். 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு ஆட்பதிவு திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

Read More