Headlines

தமிழ்,முஸ்லிம் மக்கள் புரிந்துணர்வுடன் வாழ வேண்டும் – றிஷாத் பதியுதீன்

ஓற்றுமை,கல்வி,பிரதேச மக்களின் நலன் குறித்து அதிக கவனத்தை செலுத்துவது சாலச்சிறந்தது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முத்தலிபாவா பாருக் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள அடம்பன் கட்டைக்காடு பரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் திறப்பு விழாவில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பு குவைத் சர்வதேச இஸ்லாமிய நிதியத்தின் உதவியின் கீழ் இந்த பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டன. இங்கு மேலும் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிபாவ பாருக் உரையாற்றுகையில்-…

Read More

சவூதி பெண்களுக்கு முதன்முறையாக அனுமதி

சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளில் அந்நாட்டு பெண்கள் முதன் முறையாக ஈடுப்பட்டுள்ளதுடன் வாக்களிக்கவுமுள்ளனர். எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள இந்த தேர்தலில், சுமார் 900 பெண்கள் போட்டியிடுகின்றனர். பொது இடங்களில் இருபாலாரும் ஒன்றாக இணைந்து இருப்பதை சவூதி சட்டங்கள் கடுமையாக எதிர்க்கும் நிலையில், ஆண் மற்றும் பெண் வேட்பாளர்கள் அங்கு ஒரே நேரத்தில் தேர்தல் மேடையை பகிர்ந்துக்கொள்ள முடியாது. பெண்கள் பொது இடங்களில் தமது முகத்தை காட்ட முடியாது என்பதும், ஆண் வேட்பாளர்கள் தமது…

Read More

சரிந்தது மஹிந்த அரசு!

இலங்கையில் நடைபெற்று வந்த குடும்ப ஆட்சியை நாட்டு மக்கள் முடிவுக்குக் கொண்டு வந்து மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் நேற்று நடைபெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 7ஆவது ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார். கடந்த கால அராஜக ஆட்சிக்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர். அம்பாந்தோட்டையில் பிறந்த மஹிந்த ராஜபக்ச தனது தந்தையாரின் அரசியல் வழியிலேயே தானும் அரசியலில் நுழைந்தவர். 1970 ஆம் ஆண்டு சுதந்திரக்…

Read More

சொகுசு பஸ் நடத்துனர்கள் பணி பகிஷ்கரிப்பு

காலி – கொழும்பு சொகுசு பஸ் நடத்துனர்கள் இன்று (6) காலை முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். காலி – கொழும்பு அதிவேக பாதையில் புதிய நான்கு பஸ்களை சேர்த்துக்கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக பஸ் நடத்துனர்கள் தெரிவித்துள்ளர்.

Read More

டி.வி. தொடரில் பணிபுரியும் அதிபர் ஒபாமா மகள்

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மூத்த மகள் மலியா. இவருக்கு தற்போது 17 வயது ஆகிறது. கல்லூரியில் படித்து வரும் இவர் எச்.பி.ஓ. டி.வி. தொடரில் பணியாற்றுகிறார். எச்.பி.ஓ. டி.வியில் ‘கேர்ள்ஸ்’ என்ற தொடர் தயாராகிறது. அதில் அவர் கதை வசனம் மற்றும் டைரக்ஷன் துறையில் பணிபுரிவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடரின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு முடிவடைகிறது. அதன் பிறகு டி.வி. அல்லது சினிமா துறையில் நுழைய மலியா முடிவு செய்துள்ளார். அதிபர் மகள் என்பதால்…

Read More

மஹிந்தவை எவ்வாறு அழைப்பது : துமிந்த திசாநாயகவுக்கு சந்தேகம்

– ஆர்.யசி – மஹிந்த ராஜபக்ஷவை ஒரு தலைவராக கருதுவதா, அல்லது முன்னாள் ஜனாதிபதியாக கருதுவதா அல்லது சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக கருதுவதா என்ற கேள்வி எழுந்துள்ளதென ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (3) கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கட்சியின் கொள்கையை மீறிய நபர்களை விசாரித்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்….

Read More

ஆதரித்து ஏதாவது பிடிங்கிக் கொள்ள மு.கா முயற்சிக்கலாம் அல்லவா?

ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் 2015 ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் நிபந்தனை அற்ற ஆதரவு வழங்க உள்ளதாக முஸ்லிம் காங்கிரசின் உயர் பீடம் முடிவெடுத்துள்ளதாக அறிய முடிகிறது.நிபந்தனை அற்ற ஆதரவு என்பது சற்று சிந்திக்க வேண்டிய ஒன்றுதான்.கிழக்கு மாகாண சபையில் அரசுடன் மு.கா  செய்து கொண்ட எந்த ஒரு விடயத்தையும் இது வரை காலப் பகுதியில் அரசு  நிறை வேற்றியதாக அறிய முடிய வில்லை. நிலைமை இவ்வாறு இருந்தும் மு.கா இனது போக்கு…

Read More

இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றுவது தொடர்பில் வடமாகாண மீள்குடியேற்றச் செயலணி ஆராய்வு

வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்தோரை மீளக்குடியேற்றுவதற்காக  அமைக்கப்பட்ட வடமாகாண மீள்குடியேற்ற செயலணி பல்வேறு சிக்கலான விடயங்கள் குறித்து கடந்த 20 ஆம் திகதி ஆராய்ந்ததுடன் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் சில முடிவுகளை மேற்கொண்டதாக சிறைச்சாலைகள், மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக்கூட்டத்தில் மீள்குடியேற்றச் செயலணியின் இணைத்தலைவர்களான, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் சுவாமிநாதன், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,…

Read More

ஞானசாரரிடம் பொலிசார் விசாரணை

கண்டியில் மதவழிபாட்டுத் தலம் ஒன்றின் மீதான தாக்குதல் குறித்து ஞானசார தேரரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், கண்டியில் உள்ள சிறுபான்மையினரின் மதவழிபாட்டுத் தலம் ஒன்றின் மீது குண்டர்கள் சகிதம் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். இதற்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் கண்டி தலைமையக பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக ஞானசார தேரரிடம் நேற்று பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொண்டு அவரை அனுப்பியுள்ளனர்….

Read More

கடமையைப் பொறுப்பேற்காத ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்துவதற்கு தீர்மானம்

அநு­ரா­த­புரம் வலயக் கல்விப் பணி­மனைக் ­குட்­பட்ட பகு­தி­யி­லுள்ள பாட­சாலை­களில் ஐந்து வருட காலத்­துக்கு மேல் சேவை­யாற்­றிய மற்றும் மேல­திக ஆசி­ரி­யர்­க­ளுக்கு இட­மாற்றக் கடி­தங்கள் அனுப்­பப்­பட்டும் இட­மாற்றம் பெற்றுக் கொடுக்­கப்­பட்ட பாட­சா­லை­களில் கடமையைப் பொறுப்­பேற்­காத ஆசி­ரி­யர்­களின் மாதாந்த சம்­ப­ளத்தை தற்­கா­லி­க­மாக நிறுத்த தீர்­மா­னித்­துள்­ள­தாக அநு­ரா­த­புரம் வல­யக் கல்விப் பணிப்­பாளர் திரு­மதி குமு­துனி ஆரி­ய­வங்ச தெரி­வித்தார். ஆசி­ரியர் இட­மாற்­றச்­சங்க உறுப்­பி­னர்கள் செய்த தவ­று­க­ளினால் ஆசி­ரியர் இட­மாற்ற நட­வ­டிக்­கை­களில் பாதிப்­புக்கள் ஏற்­பட்­டுள்ள போதும் இட­மாற்றக் கடி­தங்கள் கிடைத்த ஆசி­ரி­யர்கள் உடன் உரிய…

Read More

நீதிமன்றில் மோதிக் கொண்ட பெண்களுக்கு விளக்க மறியல்!

நீதிமன்றம் மிகவும் மரியாதைக்கு உரிய இடமாகவே கருதப்படுகின்றது. இந்த நிலையில் இரண்டு பெண்கள் நீதிமன்றத்திற்கு உள்ளேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இவ்வாறு தாக்கிக் கொண்ட இரண்டு பெண்களையும் கைது செய்து விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு நீதிமன்றில் இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. கொழும்பு நீதிமன்ற நீதவான் ஒகஸ்டா அதபத்து, குறித்த பெண்களுக்கான விளக்க மறியல் உத்தரவினை பிறப்பித்துள்ளார். குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் நாளை வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான்…

Read More

கம்பளை நகரில் ஆர்பாட்டம்

-எம்.எம்.எம். ரம்ஸீன் – கம்பளை நகரில் வர்த்தக நிலையங்களிலும் வீடுகளிலும் கொட்டப்படும் குப்பைகூழங்கள் கடந்த ஒரு வார காலமாக  அகற்றப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று 18.05.2016 கம்பளை நகரில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது. கம்பளை நகரில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி கம்பளை நகர சபையை சென்றடைந்தது.இதில் கம்பளை பகுதி சமயத் தலைவர்கள் நகர வர்த்தகர்கள் குடியிருப்பாளர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர். இந்தஎதிர்ப்பு ஆரப்பாட்டத்திற்று ஒததுழைப்பு வழங்கும்…

Read More