துமிந்தவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவு
பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். அவரிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அஜித் ரோஹன கூறியுள்ளார். போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய வேலேசுதா என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், துமிந்த சில்வாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர். கடந்த 3 நாட்கள் சுமார் 20 மணித்தியாலங்கள் இவ் விசாரணைகள் இடம்பெற்றன….
