Headlines

ஜனாதிபதி தேர்தலில் சோபித தேரர் போட்டியிட்டால், சிக்கலில் மாட்டிக்கொள்வார்

தேர்தல் நடத்தாமலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய முடியும் என லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பெட்டி வீரக்கோன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் ஆதரவினை பெற்று பொது வேட்பாளராக போட்டியிட்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட மாதுலுவே சோபித தேரர் முயற்சிக்கின்றார். எனினும், இவ்வாறு தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் சோபித தேரர் சிக்கலில் மாட்டிக்கொள்வார். தேர்தலில் வெற்றியீட்டினாலும் ஜனாதிபதி முறைமையை மாற்றியமைக்க முடியுமா என்பது கேள்விக்குறியே. சோபித தேரருக்கு அரசியல் அனுபவம் கிடையாது எனவே வேறும்…

Read More

விமல் வீரவன்ச ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்!

பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச நிதி முறைகேடுகள் குறித்த வாக்குமூலமொன்றினை வழங்குவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சற்றுமுன்னர் (04.08.2016) ஆஜராகியுள்ளார். வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் அரசாங்க வளங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியமை தொடர்பில் விமல் வீரவன்ச மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

மூன்று மாதங்களுக்குப் பின் அளுத்கமை (சிறப்புக் கட்டுரை)

டிரன் குமார பங்ககம ஆரச்சி நாம் புதிய நிலைமையை அறிந்து கொள்வதற்கு அளுத்கமைக்கு சென்றோம். அளுத்கமை – பேருவளை தீ எரிந்து, அணைந்து மூன்று மாதங்கள் கழிவதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஜூன் நடுப்பகுதியில் எரிந்த இனவாத தீயின் இருண்ட நினைவு முழுமையாகவே அணைந்துள்ளதா? அதனை எதிர்கொண்ட மனிதர்கள் முன்னரைப்போன்று பழக்கப்பட்ட நிலையில் காலம் கழிக்கின்றனரா? அனைத்து நிலைவரங்களும் அளுத்கமைக்குள் பிரவேசித்து பார்க்க வேண்டியவைகளாகும். அளுத்கமை இன்னமும் இருண்டு காணப்படுகிறது. மூதேசிகளான, பயங்கரமான கடந்தகால பேய்கள் எல்லா இடங்களிலும்….

Read More

வாழும்போதே தவறுகளை உணர்ந்து திருப்பங்களை செய்திடவேண்டியது ஸ்தாபகர்களின் மானசீகக் கடமை” வபா பாறுக்!

-வபா பாறுக்- ஓரிரு சுயநலமிகளை தவிர மர்ஹூம் அஷ்ரஃபின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர்கள் அனைவரும் நாடு பூராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸை ஆதரிப்பதும், அதன் செயலாளராக மர்ஹூம் அஷ்ரஃபின் அன்னியோன்ய நண்பரும், கட்சியின் அதி உயர்மட்ட ஸ்தாபக குழாமின் உறுப்பினருமான சகோதரர் ஸுபைர்தீன் இருப்பதும் இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை துளிர்க்கிறது.   வாழும்போதே தவறுகளை உணர்ந்து திருப்பங்களை செய்திடவேண்டியது ஸ்தாபகர்களின் மானசீகக் கடமை.   ஆகவே…

Read More

“வில்பத்துக்கு, முஸ்லிம்களால் எவ்விதமான சேதங்களும் விளைவிக்கப்படவில்லை” – இலங்கை இயற்கைக் கூட்டமைப்பின் தலைவர்

வில்பத்துவ தேசிய வனப்பகுதிக்கு, எவ்விதமான சேதங்களும் விளைவிக்கப்படவில்லை என்று, இலங்கை இயற்கைக் கூட்டமைப்பின் தலைவர் திலக் காரியவசம் தெரிவித்தார். மேலும், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீதான வெறுப்பின் காரணமாக, வில்பத்து வனப்பகுதி அழிக்கப்படுவதாக, குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த காலங்களில், வில்பத்து வனப்பகுதி அழிக்கப்படுவதாக பல முறைபாடுகள் பதிவாகியிருந்தன. இதனை ஆராயும் முகமாக, சனிக்கிழமையன்று (28) வில்பத்து வனப்பகுதிக்கு சென்ற மேற்படி கூட்டமைப்பினர், அங்கு நிலைமையைப் பார்வையிட்டனர். இதனையடுத்து அதன் தலைவர் தொடர்ந்து கூறியதாவது, “வில்பத்து…

Read More

தேர்தல் என்றாலும் பாப்பரசர் இலங்கை வருவார்: திருகோணமலை ஆயர்

வத்திக்கானில் இருந்து பாப்பரசரின் விஜயம் தொடர்பில் வந்துள்ள குழுவினருக்கும், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான அரசாங்க குழுவினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பில் இலங்கை படைகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். இந்த சந்திப்பின்போது தேர்தல் ஒன்று தொடர்பில் பேசப்படவில்லை, ஏனெனில் தேர்தல் திகதி ஒன்று இன்னும் அறிவிக்கப்படாமையாலாகும். இந்தநிலையில் பாப்பரசர் வருவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் தேர்தல் ஒன்று நடைபெறுமானால் நாடு இயல்புக்கு திரும்ப அந்த நாட்கள் போதுமானதாக இருக்கும்…

Read More

3 லட்சம் டொலர்களை வைப்பு செய்தால் இலங்கையில் 10 வருட வதிவிட வீசா

இலங்கையில் 3 லட்சம் டொலர்களை வைப்பு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு 10 வருட காலத்துக்கான வதிவிட வீசாவை வழங்குவதற்கான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், அந்நியச் செலவாணிகளினை அதிகமாக எமது நாட்டுக்கு கொண்டு வரும் முதலீட்டாளர்களுக்கு வதிவிட வீசாவினை…

Read More

ஆணைக்குழு முன் மஹிந்த இன்றும் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இன்று பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகவுள்ளார். கடந்த தேர்தல் காலப்பகுதியில் பிரசார நடவடிக்கைகளின் போது அரச தொலைக்காட்சி நிறுவனத்திற்கு 200 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரும் முன்னாள் ஜனாதிபதி குறித்த ஆணைக்குழு முன் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(NF)

Read More

எம்பிலிபிடிய சம்பவம் : ஏ.எஸ்.பி விளக்கமறியலில்

எம்பிலிப்பிட்டிய முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் டபிள்யு.டி.சி. தர்மரத்ன எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எம்பிலிப்பிட்டியவில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டார். குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலம் அளிக்கச் சென்றிருந்த நிலையிலேயே முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

இராணுவத்தினருக்கான பொது மன்னிப்புக் காலம் 25ஆம் திகதி வரை நீடிப்பு

இராணுவத்தில் இருந்து தப்பியோடிய இராணுவத்தினரை சட்ட ரீதியாக விலக அவகாசம் வழங்கும் பொது மன்னிப்புக் காலம் எதிர்வரும் 25ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இக்25ம் திகதி வரை இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டரீதியாக விலகும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை தமது படையணிக்கு அறிவிக்காமல் விடுமுறையில் இருப்பவர்கள் உடனடியாக ஆஜர் ஆகவும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல்…

Read More

வீடு வாங்கிய செய்தி.. கோத்தாபய ராஜபக்ஷவிடம் ரூ. 2000 கோடி நட்டஈடு

தனது பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் போலியான தகவல்களை எவ்வித ஆதாரமுமின்றி இருவேறு சந்தர்ப்பங்களில் ஊடகங்களில் வெளிப்படுத்திய குற்றச்சாட்டிற்காக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடமும் ‘லங்கா’ பத்திரிகையிடமும் தலா 2 ஆயிரம் மில்லியன் ரூபா கோரி சட்டத்தரணியூடான கோரிக்கை கடிதங்களை நேற்று அனுப்பு வைத்தார். அரசியலில் பழிவாங்கும் நோக்கில் தனிநபர் பெயரை கலங்கப்படுத்த முன்னால் பாதுகாப்புச் செயலாளரும் ‘லங்கா’ பத்திரிகை நிறுவனமும் மேற்கொண்ட முயற்சிகள் தவறானவை என்பதனாலேயே தான் இந்த தீர்மானத்தை…

Read More

விண்வெளிக்கு கார்கள் மூலம் தகவல் அனுப்பி சாதனை

விண்வெளி ஆய்வு மையத்திலிருக்கும் விண்வெளி வீரரான தந்தை ஒருவருக்கு அவரது 13 வயது மகள் Stephanie அன்பான தகவலொன்றை அனுப்பினார். இதற்காக  தொடர்பு சாதனங்கள் எதையும் அவர் பயன்படுத்தவில்லை. அப்படியாயின் எவ்வாறு இது சாத்தியமானது? Steph love’s you!  என்ற தகவலை அனுப்பிட 11 கார்கள் உதவின. 11 Hyundai Genesis கார்கள் மற்றும் காரோட்டும் சாகச வீரர்களைக்கொண்டு செயற்பட்டதுடன்,  இதுவரை பூமியில் வரையப்பட்ட மிகப்பெரிய குறியீடு என்ற கின்னஸ் சாதனையையும் நிகழ்த்துவதற்கு Hyundai நிறுவனம் அனுசரனையாளராக இருந்துள்ளது.

Read More